அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Thursday, November 25, 2010

வரதட்சணை மரணங்களில் குற்றஞ்சாட்டப்பட்டோர் மீது கொலைக்குற்றம் சுமத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி,நவ.23:வரதட்சணை மரணங்கள் அதிகரித்துவரும் சூழலில், இக்குற்றம் சாட்டப்பட்டோர் மீது கொலைக் குற்றம் சுமத்த உச்சநீதிமன்றம் கீழ் நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.இத்தகைய கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரணத்தண்டனை விதிக்கவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, ஞான் சுதா மிஷ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இத்தீர்ப்பை வழங்கியது. இதுவரை வரதட்சணை மரணங்களுக்கு அதிகபட்சமாக ஆயுள்தண்டனை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்