அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Saturday, May 29, 2010

பாலியல் - ஓர் இஸ்லாமிய பார்வை



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே

மரியாதைக்குரிய வாசகர்களே இன்று நமது சமூகம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளில் மிக முக்கியமானதும் நாம் சிந்தித்து பார்க்கவேண்டியதும் ஆகும் அது மேற்கத்திய கலாச்சாரத்தின் அடிச்சுவடுகளை அப்படியே பின்பற்றுவது ஆகும் இதனால் ஏற்படும் கலாச்சார சீர்கேடு முறையற்ற பாலியல் உறவு அந்நிய பெண்களிடம் அளவுக்கு அதிகமாக நெருங்கி பழகுவது மது மற்றும் போதை வஸ்துக்களுக்கு அடிமையாகி குடும்ப உறவுகளை சீர்குலைப்பது இதனால் ஏற்படும் சமூக அவலங்கள் மற்றும் இதற்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன போன்றவற்றை இந்த கட்டுரை விரிவாக அலசுகின்றது
படிப்பதற்கு இந்த கட்டூரை கொஞ்சம் பெரிதாக இருக்கின்ற காரணத்தினால் இதை படிக்காமல் விட்டுவிடாதீர்கள் கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி தயவு செய்து படிக்கவேண்டும் படித்த விசயங்களை சகோதரர்களுக்கும் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் அல்லாஹ்வின் நற்கூலியை எதிர்நோக்கியாவர்கலாக.....

இந்த கட்டூரை http://www.sheikhagar.org/என்ற இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது

A.முகம்மது சுல்தான் நாச்சியார் கோவில்)

வாருங்கள் வாசிப்போம்.......

இன்றைய உலகு இருவகையான படையெடுப்புகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது. அவையாவன:

1. இராணுவ ரீதியான படையெடுப்பு
2. சிந்தனாரீதியான கலாசாரப் படையெடுப்பு

முதல்வகைப் படையெடுப்பைப் போலவே இரண்டாம் படையெடுப்பும் உலகில் பயங்கரவிளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது.

'உலகமயமாக்கல்' எனும் பெயரில் இன்றைய உலகில் திணிக்கப்பட்டுவரும் நவீன காலனித்துவம் அரசியல், பொருளாதார ரீதியான அமெரிக்க தலைமையிலான மேற்குலகின் மேலாதிக்கத்தை உலகில் வலுவடையச் செய்வதை மாத்திரமன்றி சிந்தனா ரீதயாகவும், கலாசார ரீதியாகவும் உலகை அடிமைப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டிருக்கிறது.

இந்த வகையில் மேற்குலகின் உலகாயத, சடவாத சிந்தனைகளும், கலாசாரமும் மூன்றாம் மண்டல நாடுகளில் பொதுவாகவும் இஸ்லாமிய உலகில் குறிப்பாகவும் திட்டமிட்ட அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. உணவுவகைகள், குடிபானங்கள், உடைகள், நகைச்சுவை, காட்டூண்கள், மொழி, இசை, விளையாட்டுக்கள் முதலான சாதாரண அம்சங்கள் முதல் அனைத்தும் மேற்குலக கலாசாரத்தை பிரதிபலிப்பனவாகவே அமைந்துள்ளன.

உலகமமயமாதலும் பாலியல் சீர்கேடுகளும்

மேற்குலகம் சுதந்திரமான, கட்டுப்பாடற்ற ஆண், பெண் உறவை விரும்புகின்றது. எனவே, உலகமயமாக்கல் மூலம் உலகின் ஏனைய நாடுகளிலும் இந்நிலையை அது உருவாக்க விரும்புகின்றது. இஸ்லாமிய உலகிலோ கட்டுக்கோப்பான குடும்ப சமூக அமைப்பு காணப்படுகின்றது. எனவே, மேற்குலகு இவ்விறுக்கமான அமைப்பை தகர்ப்பதற்கு திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது. தனது சுதந்திரமான, எத்தகைய தார்மீக, ஆன்மீக கட்டுப்பாடுகளுமற்ற கலாசாரத்தை உலகமயப்படுத்துவதற்காக அவ்வப்போது சர்வதேச மாநாடுகளையும் நடாத்தி வருகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்னால் கெய்ரோவிலும், பீஜினிலும் நடைபெற்ற சனத்தொகை மாநாடுகளை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். இம்மாநாடுகளில் பெறப்பட்ட தீர்மானங்களுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்:

1. திருமணத்தின் மூலமோ, திருமணமின்றியோ ஒர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உருவாகும் உறவு அங்கீகரிக்கப்படத்தக்கதாகும்.
2. ஆணும் பெண்ணும் மணமுடிப்பது போலவே ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் மணமுடிக்க முடியும்

ஆண், பெண் பால் வேறுபட்டை (
Gender perspective) மறுக்கும் இவர்கள் கணவன், மனைவி என்ற புனிதமான உறவையும் கொச்சைப்படுத்துகின்றனர். கணவனை வாழ்க்கைத்துணைவர் (Life Partner) என்ற அளவில் மாத்திரமே இவர்கள் அங்கீகரிக்கின்றனர். சட்டரீதியற்ற முறையில் பிறக்கும் குழந்தைகளைக் கூட Natural Babyஎன அழைத்து அங்கீகாரம் வழங்குகின்றனர். தற்போது அதனைLove Baby என அழைக்க முற்பட்டுள்ளனர். இவ்வாறு கிழக்குலகில் பொதுவாகவும், இஸ்லாமிய உலகில் குறிப்பாகவும் பேணப்படுகின்ற இறுக்கமான குடும்ப அமைப்பை சீர்குலைக்க கையாளப்படும் உத்திகளுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்.

1. சினிமா
2. தொலைக்காட்சி
3. வானொலி
4. இன்டர்நெட்
5. பொப் பாடல்கள்
6. சஞ்சிகைகள்
7. விளம்பரங்கள்
8. நவீன மோஸ்த்தர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிகள் (
Fashion show)
9. அழகுசாதனப் பொருட்கள் (
Cosmetics)

இவ்வாறு தொடர்பாடல் ஊடகங்கள், பல்தேசிய கம்பனிகள் முதலானவற்றுக்கூடாக மேற்குலகு தனது கலாசார திணிப்பை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றது.
Holly Woodதிரைப்படங்களின் செல்வாக்கின் விளைவாக Bolly Woodதிரைப்படங்களும் வன்முறையையும், ஆபாசத்தையும் மிகக்கேவலமாக அரங்கேற்ற ஆரம்பித்துள்ளன. இலங்கையில் தயாரிக்கப்படும் திரைப்படங்களில் கூட ஒவ்வொரு நான்கிலும் மூன்று ஆபாசத் திரைப்படங்களாக அமைந்துள்ளன. இன்றைய சினிமாக்களில் கதையில்லை. பாடங்களோ படிப்பினைகளோ இல்லை. குறைந்தது மொழியையாவது காண முடியாது. தமிழ், ஹிந்தி சினிமாக்களில் இப்போது வன்முறையையும் ஆபாசத்தையும் தவிர வேறெதையும் பார்க்க முடியாது. குறிப்பாக தமிழ் சினிமாப்பாடல்கள் ஒரு கட்டுரையில் உதாரணத்திற்காகவேணும் மேற்கோள் காட்ட முடியாதளவிற்கு அருவெறுக்கத்தக்க ஆபாச வர்ணனைகளாக அமைந்துள்ளன. பெண்களை போகப்பொருளாகவும், போதைப்பொருளாகவும் காட்டும் வகையிலேயே பாடல் வரிகள் எழுதப்பட்டுள்ளன. விரகம் விரசமாகி, காதல் பாலுறவாகி, காதலர்கள் காமுகர்களாக சித்தரிக்கப்படும் அவலத்தைத்தான் இன்றைய தமிழ்ச்சினிமாவில் காணமுடிகின்றது.
ஆபாசத் திரைப்படங்கள், வெப்தளங்கள், வீடியோக்கள், நூல்கள், சஞ்சிகைகள் முதலானவை மேற்குலகிற்கு அதன் கலாசாரத்தை பரப்புவதற்கான ஊடகங்களாக மட்டுமன்றி உலகநாடுகளின் பொருளாதாரத்தை சுரண்டுவதற்கான மிகச் சிறந்த வழியாகவும் அமைந்துள்ளன. இன்றைய உலகின் மிகவும் இலாபகரமான வியாபாரமாக ஆபாசத்தை சந்தைப்படுத்துவது காணப்படுகின்றது.
மேற்கண்ட கட்டுப்பாடற்ற சுதந்திர ஆண், பெண் உறவு கலாசாரம் உலகமயப்படுத்தப்பட்டதன் விளைவை இன்றைய உலகம் மிக மோசமாக அனுபவிக்கத் துவங்கியுள்ளது. இன்று இக்கலாசாரத்தின் பரவல் மனித சமூகத்தின் இருப்பையே அச்சுறுத்திவருகின்றது. இக்கலாசாரத்தின் முக்கிய விளைவுகள் பின்வருமாறு:

1. சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்
2. சட்டபூர்வமற்ற கருத்தரிப்பு
3. கருக்கலைப்பு
4. கற்பழிப்பு
5. தன்னினச்சேர்க்கை
6. தாயோ அல்லது தந்தையோ இல்லாத (
Single Parents) குழந்தைகள்
7. ஆட்கொல்லி எய்ட்ஸ் நோய்
8. விவாகரத்து
9. தற்கொலை
10. போதைவஸ்துப் பாவனை

இன்றைய உலகில் பற்றி எரிகின்ற பிரச்சினையாக மாறியுள்ள பாலியல் சீர்கேடுகள் தொடர்பான பிரச்சினைக்கு இஸ்லாம் கூறும் தீர்வுகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இஸ்லாமிய நோக்கில் பாலியல்

ஆண், பெண் இருபாலாருக்குமிடையே இறைவன் ஒரு வகை ஈர்ப்பை இயல்பாகவே வைத்திருக்கின்றான். இதனை இனக்கவர்ச்சி (
Sex Appeal) என்பர். பசி, தாகம் எழுவது போல பாலுணர்வும் இயல்பான ஒன்றாகும். உலகவாழ்வு நிலைப்பதற்கும் இனப்பெருக்கத்திற்கும், மனிதகுலம் உட்பட அனைத்து உயிரினங்களின் இருப்புக்கும் வழியாக அல்லாஹ் அமைத்திருப்பது ஆண், பெண் உறவைத்தான்.

அணு முதல் அனைத்தையும் அல்லாஹ் ஆண், பெண் என சோடி சோடியாகவே அமைத்திருக்கின்றான். மனித உலகில் மாத்திரமன்றி மிருக உலகிலும் தாவர உலகிலும் அனைத்திலும் இச்சோடி நிலையைக் காணலாம். இப்பேருண்மையை அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகிறது.

''மேலும் (நாம்) நீங்கள் படிப்பினைப் பெறுவதற்காக ஒவ்வொன்றிலும் சோடிகளைப் படைத்துள்ளோம்.'' (51:49)

''அல்லாஹ் தூய்மையானவன். அவன் பூமி முளைக்கச் செய்பவையிலிருந்தும் அவர்களிலிருந்தும் அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் சோடிகளைப் படைத்தான்.'' (36:36)

திருமணம், துறவறம், விபசாரம்

மிருக உலகம், தாவர உலகம் உட்பட ஏனைய உயிரினங்களைப் பொறுத்தவரையில் அவை இயல்பான இனக்கவர்ச்சியால் உந்தப்பட்டு இனப்பெருக்கத்தில் சுதந்திரமாக ஈடுபடுகின்றன. அந்த சுதந்திரத்தை அல்லாஹ் அவற்றிற்கு வழங்கியுள்ளான். மனிதனைப் பொறுத்தவரையில் அவன் தனது பால் உணர்ச்சியை எவ்வாறு தீர்த்துக்கொள்ளலாம் என்ற கேள்வி இங்கு பிறக்கின்றது.

இன்றைய சமயசார்பற்ற - சடவாத மேற்குலக கலாசாரம், மனிதன் தனது பாலுணர்ச்சியைத் தீர்த்துக் கொள்ள எத்தகைய கட்டுப்பாடுகளோ, வரையறைகளோ, ஆன்மீக, தார்மீக ஒழுங்குகளோ அவசியமில்லை எனக் கருதுகின்றது. திருமணம், வீடு, குடும்பம் என்பனவெல்லாம் பெண்களை நிரந்தரமாக அடிமைத்தனத்தில் வைத்திருக்கும் ஒரு சாபமே அன்றி வேறில்லை என்பது இந்தக் கலாசாரத்தின் நிலைப்பாடாகும். இக்கருத்தியலின் பயங்கர விளைவுகளை இன்றைய உலகம் எவ்வாறு அனுபவிக்கின்றது என்பதை மேலே கண்டோம்.

மறுபக்கத்தில், மனிதன் உடல் இச்சையை முழுமையாக கட்டுப்படுத்தல் வேண்டும். அது மிருக உணர்வாகும். அது ஆன்மீக விமோசனத்திற்குத் தடையானது என்று கூறும் துறவறக் கொள்கையையும் இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. ஒருவகையில் துறவறப்போக்கைக் கைக்கொள்ள முயற்சி செய்த உஸ்மான் இப்னு மழ்ஊன், அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ் போன்ற நபித்தோழர்களை நபியவர்கள் எவ்வாறு நெறிப்படுத்தினார்கள் என்பதை வரலாற்றில் பார்க்கின்றோம்.

இஸ்லாம் பாலுணர்வை சுதந்திரமாக, எத்தகைய கட்டுப்பாடுகளுமின்றித் தீர்த்துக் கொள்வதை தடைசெய்வது போலவே சம்சார வாழ்க்கையை துறக்கும் துறவறத்தையும் பிரமச்சாரியத்தையும் விலக்கி, இரண்டிற்கும் இடையே திருமணம் என்ற ஒரு நெறியை அமைத்திருக்கின்றது. மனிதன் கௌரவமானவன். அவனது எல்லா நடவடிக்கைகளும் கௌரவமானதாகவும் நாகரிகமானதாகவும் அமைய வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். இந்த வகையில் ஆண், பெண் உறவு திருமணம் என்ற உடன்படிக்கைக் கூடாக புனிதமான ஒன்றாக அமைதல் வேண்டும் என்று அது வலியுறுத்துகின்றது.

திருமண உடன்படிக்கையின்றி ஏற்படும் ஆண் - பெண் உறவை முறைகேடானது எனக் கருதும் இஸ்லாம் அதனை 'ஸினா' (விபசாரம்) என அழைக்கின்றது. ஸினா இஸ்லாத்தின் பார்வையில் மிகப் பெரிய பாவமாகும். அதற்கு மறுமைக்கு முன்னால் உலகிலேயே தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாமியக் கொள்கையாகும்.
விபசாரத்தைத் தடைசெய்யும் இஸ்லாம் அத்துடன் நின்றுவிடாமல் அதற்கான வழிகளையும் தடைசெய்கின்றது.

''நீங்கள் விபசாரத்தை நெருங்கவும் வேண்டாம். அது மானக்கேடானதாகவும், மோசமான வழிமுறையாகவும் இருக்கின்றது.'' (17:32)

விபச்சாரத்திற்கு வழிவகுப்பவை

இவ்வடிப்படையில் விபச்சாரத்திற்கு இட்டுச் செல்பவை என்ற வகையில் பின்வருவன விலக்கப்பட்டுள்ளன:

1. அந்நிய ஆணும் பெண்ணும் தனிமையில் இருத்தல் மற்றும் சுதந்திரமாகப் பழகுதல்.

இது பற்றி நபியவர்கள் பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள்:
'அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டவர் ஒரு மஹ்ரம் இல்லாத நிலையில் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்களுடன் மூன்றாமவனாக ஷைத்தான் இருப்பான்.' (அஹ்மத்)
'உங்களில் ஒருவர் ஒரு மஹ்ரம் இல்லாமல் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம்.' (புகாரி, முஸ்லிம்)

குறிப்பாக ஒரு பெண் தனது கணவரின் சகோதரர்கள் முதலான நெருங்கிய உறவினர்களுடன் தனித்திருப்பது, சுதந்திரமாகப் பழகுவது கூடாது. இதனை நபியவர்கள் மரணத்திற்குச் சமமானது என வர்ணித்துள்ளார்கள். (பார்க்க ஸஹீஹுல் புகாரி)

2. அடுத்த பாலினரை இச்சையுடன் பார்த்தல்

ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் சுதந்திரமாகப் பார்ப்பதையும் ரசிப்பதையும் இஸ்லாம் ஒரு பாவமாக கருதுகின்றது. இதனால்தான் பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறும், கட்டுப்படுத்துமாறும் அது பணிக்கின்றது. (பார்க்க: ஸூறத்துன் நூர் 30,31)

'அலியே! ஒரு பார்வையைத் தொடர்ந்து அடுத்த பார்வையைச் செலுத்தாதீர். முதலாம் பார்வை உமக்குரியது. அடுத்தது உமக்குரியதல்ல.' (அஹ்மத், அபூதாவூத்)

கெட்ட பார்வையை நபியவர்கள் ஸினா என வர்ணிக்கும் பின்வரும் ஹதீஸ் கவனத்திற்கொள்ளத்தக்கதாகும்:
'இரு கண்களும் விபசாரம் செய்கின்றன. அவை செய்யும் விபசாரம் பார்வையாகும்.' (புகாரி)

3. அவ்ரத்தை காட்டுவதும், பார்ப்பதும்

அவ்ரத்தை வெளிக்காட்டுவதும் அதனைப் பார்ப்பதும் துர்நடத்தைக்குத் தூண்டுபவை என்ற வகையில் இஸ்லாம் ஓர் ஆண் உடம்பில் மறைக்க வேண்டிய பகுதி என்ன என்பது பற்றியும், ஒரு பெண் மறைக்க வேண்டிய பகுதி யாது என்பது பற்றியும் விரிவாக விளக்குகின்றது.

இவ்வாறு பாலியல் சீர்கேடுகளுக்கான எல்லா வழிகளையும் அடைத்துள்ள இஸ்லாம், மறுபக்கத்தில் மனிதன் தனது உணர்ச்சியைத் தீர்த்துக்கொள்வதற்கு புனிதமானதும் கௌரவமானதுமான திருமணம் என்ற ஒழுங்கை அறிமுகம் செய்துள்ளது.

இஸ்லாத்தின் ஒளியில் திருமணத்தினால் விளையும் நன்மைகளை பின்வருமாறு அடையாளப்படுத்தலாம்:

1. இஸ்லாம் தனிமனிதர்களை உருவாக்கி, அவர்களைக் கொண்ட குடும்பங்களை அமைத்து, இறுதியில் தன் கொள்கை வழிச் சமூகம் ஒன்றை இலக்காகக் கொண்ட மார்க்கமாகும்.இஸ்லாத்தின் இலக்குகளில் குடும்பம் ஒரு பிரதான இடத்தைப் பெறுகின்றது. இஸ்லாத்தை குடும்பவியல் சார்ந்த மார்க்கம் (
Family Oriented Religion) என வர்ணிப்பர். குடும்பம் என்பது ஒரு சிறிய சமூகம் (Micro Society) என கருதப்படுகின்றது. ஒரு பெரிய சமூகத்தின் ஆரம்ப வித்தாக அமைவது குடும்பமாகும். இஸ்லாமிய சமூகத்தின் ஒவ்வொரு குடும்பமும் ஒரு கோட்டைக்கு ஒப்பானதாகும். அக்கோட்டையில் எவ்வித ஓட்டையும் தோன்றாமல் அதனைப் பாதுகாக்கும் பொறுப்பு குடும்ப அங்கத்தவர்களைச் சார்ந்ததாகும். குடும்பம் எனும் கோட்டையை பாதுகாக்கும் சிப்பாய்களாக குடும்ப அங்கத்தவர்கள் இருக்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் பெற்ற குடும்பம் எனும் நிறுவனத்தின் நுழைவாயிலாக இருப்பது திருமணம் ஆகும். திருமணம் இன்றி குடும்பம் உருவாவது சாத்தியமற்றதாகும்.
2. மனிதனிடம் காணப்படும் உணர்ச்சிகளில் பாலுணர்வே மிகவும் பலமானதாகும். அதனைத் தீர்த்துக்கொள்வதற்கான இயல்பானதுமானதும், பாதுகாப்பானதும், கௌரவமானதுமான வழியாக திருமணம் விளங்குகின்றது.
3. குழந்தைச் செல்வத்தைப் பெறுவதற்கான சிறந்த வழியாகவும், இனப்பெருக்கத்திற்கான சீரிய முறையாகவும் இருப்பது திருமணமாகும்.
4. தாய்மை உணர்வு (Motherhood), தந்தை உணர்வு (Fatherhood) சகோதர உறவு (Brotherhood) முதலான உணர்வுகளும் உறவுகளும் இன்றி மனித வாழ்வு நிறைவாக அமையாது. திருமணமே உணர்வுகளை உருவாக்கி போஷித்து வளர்க்கக் கூடியதாகும்.

5. மணவாழ்வு மனிதனில் சுறுசுறுப்பை ஏற்படுத்தவல்லது. அது மனிதனுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுப்பதோடு அவனை பொறுப்புணர்ச்சி உள்ளவனாகவும் மாற்றுகின்றது. இந்த வகையில் உழைப்பு அதிகரித்து, உற்பத்தி பெருகி, மனித வாழ்வு வளம் பெற மணவாழ்வு வழிகோலுகின்றது.

6. வாழ்க்கையுடன் தொடர்பான பொறுப்புக்கள் ஆண், பெண் இருபாலாருக்குமிடையே சரியாகப் பகிர்ந்தளிக்கப்படுவதில் வாழ்வின் வெற்றி தங்கியுள்ளது. திருமணத்திற்கூடாக இத்தகைய பொறுப்புக்கள் கணவன், மனைவிக்கிடையேயும், வீட்டின் ஏனைய உறுப்பினர்களுக்கிடையேயும் பகிர்ந்தளிக்கப்படுவதற்கான வாய்ப்புக் கிட்டுகின்றது.

7. குடும்பங்களுக்கிடையே தொடர்புகள் உருவாகி, பரஸ்பர அன்பும் ஒத்துழைப்பும் நிலவுகின்ற ஓர் ஆரோக்கியமான சமூகம் உருவாவதற்கும் திருமணமே காரணமாக அமைகின்றது.

8. மனஅழுத்தம், உளஇறுக்கம், கவலைகள் முதலான உளரீதியான பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெற்று நிறைவானதும் நிம்மதியானதுமான ஒரு வாழ்வுக்கு திருமணம் சிறந்த வழியாகவும் விளங்குகின்றது. திருமணம் முடித்தவர்களின் ஆயுள் திருமணம் முடிக்காதவர்களின் ஆயுளை விட கூடியதாகும் என்பது கவனத்திற் கொள்ளத்தக்கதாகும்.

திருமணத்தின் மூலம் கிட்டும் நிம்மதியையும் நிறைவையும் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது

''நீங்கள் (அமைதி) ஆறுதல் பெறுவதற்குரிய துணையை உங்களில் இருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும், உங்களுக்கிடையே அன்பையும் கிருபையையும் ஏற்படுத்தி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.'' (30:21)

குடும்ப வாழ்வை அச்சுறுத்தும் அம்சங்கள்

இல்லற வாழ்வுக்கும் அதன் நுழைவாயிலான திருமணத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும் அம்சங்களை அறிந்து கொள்வது பயனுள்ளதாகும்.

துர்நடத்தை

விபசாரம், தன்னினச்சேர்க்கை முதலான முறைகேடான ஆண் - பெண் உறவுகள் குடும்பம் என்ற சிறிய சமூகத்தைத் தகர்க்கக்கூடியவை யாகும். இயற்கை நியதிக்கும் இறை நியதிக்கும் முரணான இத்தகைய உறவுகள் குடும்ப அமைதியைக் குலைத்து சமுதாயத்தைச் சீரழிக்கும் பயங்கர ஈனச்செயல்களாகும். இவ்வாறான இழிசெயல்களில் ஈடுபடுவோர் திருமணத்தில் ஆசையற்று, இல்லற வாழ்வில் விருப்பமற்றவராக இருப்பர். இவர்கள் திருமணம் செய்துகொண்டாலும் தமது மனைவிமாரைப் புறக்கணிப்போராக இருப்பர். இதனால் பெண்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டு அவர்கள் மத்தியிலும் பல சீர்கேடுகள் தோன்ற வழிபிறக்கும். இத்தகைய நிலையில் கணவன், மனைவிக்கிடையே விரிசல் உருவாகி குழந்தைகளின் நல்வாழ்வு பாதிக்கப்படும். மொத்தத்தில் குடும்ப நிறுவனம் சீர்குலைந்து சமூக வாழ்வு சின்னாபின்னமாகி விடும்.

இவை தவிர, முறைகேடான பாலியல் உறவுகளால் எத்தகைய பயங்கர நோய்கள் தோன்றுகின்றன என்பதை இன்றைய மருத்துவ உலகம் எடுத்துக் கூறுகின்றது. மேக நோய் முதலான பல்வேறுபட்ட மோசமான பாலியல் நோய்கள் இன்று உலக சுகாதாரத்தை அச்சுறுத்திய வண்ணம் இருக்கின்றன. இன்று உலகையே ஆட்டி வைக்கும் பயங்கர ஆட்கொல்லி நோய் எய்ட்ஸின் தொடக்கப்புள்ளி முறைகோடான பாலியல் உறவுகள் என்பதை அறியாவதவர் எவரும் இல்லை. மனநோய்கள் உருவாவதற்கும் முறைகேடான பாலியல் உறவுகள் காரணமாக அமைகின்றன என்பது இன்று நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மையாகும். இத்தகைய காரணங்களுக்காகவே இஸ்லாம் முறைகேடான பாலியல் உறவுகளை மிகக் கடுமையாக கண்டித்து தடைசெய்துள்ளது.

ஓரினச்சேர்க்கை

ஏறத்தாழ ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னால் தன்னினச்சேர்க்கை என்ற தரங்கெட்ட செயலில் ஈடுபட்ட நபி லூத் (அலை) அவர்களின் சமூகத்தைப் பற்றிக் குறிப்பிடும் அல்குர்ஆன் அவர்களின் இக்குற்றச் செயல்களின் காரணமாக அவர்கள் எவ்வாறு பயங்கரமாகத் தண்டிக்கப்பட்டார்கள் என்பதை எடுத்துச் சொல்கின்றது. (பார்க்க: ஸூறத்து அஷ்ஷுஅரா : 172-174)

மனிதனின் மனத்தையும் குணத்தையும் இயல்பையும் இறைத்தொடர்பையும் கெடுத்து, இம்மை, மறுமை ஈருலக வாழ்வையும் பாழ்படுத்தக்கூடிய ஓரினச்சேர்க்கை என்ற குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டுமென்பது ஷரீஆவின் சட்டத்தீர்ப்பாகும்.

விபசாரம்

ஓரினச்சேர்க்கையைப் போலவே விபசாரமும் இஸ்லாமிய நோக்கில் மிகப் பெரிய பாவமும் குற்றச் செயலுமாகும். இஸ்லாம் விபசாரத்தை மட்டுமன்றி அதற்கு தூண்டுதல் வழங்குகின்ற அனைத்தையும் விலக்கியுள்ளது. இந்த வகையில் நாம் மேலே குறிப்பிட்டது போல, ஓர் ஆண் அந்நிய பெண்ணுடன் அல்லது ஒரு பெண் அந்நிய ஆணுடன் தனித்திருத்தல், ஆண்கள் - பெண்கள் சுதந்திரமாகப் பழகுதல் ஆகியவற்றுடன் நடனம், ஆபாசப் படங்கள், பாடல்கள், தரக்குறைவான இலக்கியப் படைப்புக்கள், கெட்ட பார்வை, காதல் போன்றவற்றையும் இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது.

விபசாரத்தை ஆகக் கூடிய தண்டனை வழங்கப்படவேண்டிய குற்றமாக இஸ்லாம் கருதுகின்றது. இஸ்லாமிய ஷரீஅத் அமுலில் உள்ள இடத்தில் ஓர் ஆணோ பெண்ணோ விபசாரம் புரிந்தால் அவருக்குக் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்பட வேண்டும். திருமணமாகாதவருக்கு தலா நூறு கசையடி வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் தீர்ப்பாகும்.

விபசாரத்தினால் விளையும் ஆன்மீக, மறுமைப் பாதிப்புக்கள் பற்றி விளக்கும் நபிமொழிகளும் உண்டு. அவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்:
'ஒருவர் விபசாரம் செய்யும் நிலையில் முஃமினாக இருக்க மாட்டார்' (புகாரி, முஸ்லிம்)
'விபசாரத்தை இட்டு உங்களை எச்சரிக்கின்றேன். அதில் நான்கு விளைவுகள் இருக்கின்றன. அவையாவன:
முகத்தின் வசீகரத்தை நீக்கிவிடும்
வருமானத்தை அறுத்துவிடும்
ரஹ்மானின் கோபத்தைப் பெற்றுக் கொடுக்கும்
நரகில் நிலைத்திருக்க வழிவகுக்கும்'
(ஆதாரம் : அத்தபராணி)

எனவே, தகாத பாலியல் தொடர்பு உடலாரோக்கியத்தைக் கெடுக்கின்றது. உள்ளத்தைக் கெடுக்கின்றது. அறிவையும், ஆன்மாவையும் பாதிக்கின்றது. தனிமனிதனை அழித்து, குடும்பவாழ்வை குட்டிச்சுவராக்கி விடுகின்றது. இறுதியில் முழுசமூக வாழ்;வுக்கும் வேட்டு வைக்கிறது. இஸ்லாம் மனிதனது இயல்பான பாலுணர்ச்சியைத் தீர்த்துக்கொள்ளவே பண்பாடான திருமணம் என்ற ஒழுங்கைத் தந்துள்ளது. ஹராமானவற்றை நாடவேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு இந்த தீனுக்கூடாக அனைத்தையும் ஹலாலாக்கி தந்திருப்பது அல்லாஹ்;வின் பேரருளாகும்.
Share

நன்றி:http://www.sheikhagar.org/

Thursday, May 27, 2010

நீங்கள் விசாரிக்கபடும் முன் உங்களை நீங்களே விசாரித்து கொள்ளுங்கள் : சுய பரிசோதனை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)மரியாதைக்குரிய வாசகர்களே அல்லைஹ்வின் மாபெரும் கிருபையினால் முஸ்லிம்களாக இருக்ககூடிய நாம் உண்மையில் அல்லாஹ் காட்டித்தந்த வழிமுறைகளை முழுமையாக பின் பற்றுகின்றோமா நபி முகம்மது முஸ்தபா ரசூலே கரீம் (ஸல்) அலைஹிவசல்லாம் அவர்கள் வாழ்ந்து காட்டிய முறைப்படி நாம் நம்முடைய வாழ்க்கைமுறையை அமைத்து கொண்டுல்லோமா மருமையிலே அந்த ஜன்னத்துல் பிர்தௌஸ் என்று சொல்லக்கூடிய சுவனத்திலே இருப்பதற்கு தகுதியானவர்களாக இருக்கின்றோமா அல்லது பெயர் அளவிலே முஸ்லிம்களாக இருக்கின்றோமா நம்முடைய ஒவ்வொரு அசைவுகளும் இஸ்லாமாக இருக்கின்றதா என்று நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ளக்கூடிய அவசியம் நாம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது அதன் அடிப்படையிலே நம்மைநாமே சுயபரிசோதனை செய்துகொள்ள இந்த கட்டூரை இன்ஷா அல்லாஹ் துணைபுரியும் என்று நினைக்கின்றேன் இதை படித்துவிட்டு நமது சகோதரர்களுக்கும் நண்பர்களுக்கும் இதை அனுப்புங்கள் அறிமுகம் செய்யுங்கள் நம்முடைய எந்த ஒரு செயலும் நம்மை சார்ந்து இருக்ககூடியவர்களுக்கு ஒருசதவிகிதமேனும் ஈமானின் அளவை அதிகரிக்க பயன்படுமானால் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வின் நற்கூலியை பெறுவதற்கு அது ஒரு வாய்ப்பாக அமையும் இந்த கட்டூரை http://nagoreflash.blogspot.com என்ற இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது

(முகம்மது சுல்தான் நாச்சியார்கோவில்)


ஒரு இண்டர்விவ் நாம் போகிறோம் என்று வைத்துகொள்வோம், அங்கே என்னவெல்லாம் கேட்ப்பார்கள் அதெற்கு எப்படி நாம் பதில் சொல்வது, இப்படி கேட்டால் எப்படி பதில் சொல்வது , அப்படி கேட்டால் எப்படி பதில் சொல்வது என்று பல கேள்விகளை கேட்டுக்கொண்டு முதலில் நாம் நம்மை அதற்காக தயார்படுத்தி கொள்வோம்,அந்த குறிப்பிட்ட வேலைக்கு நம்மை தகுதியான ஆளாக மற்றிகொள்வோம்.

வெற்றி பெற்றால் மிகவும் சந்தோசபடுவோம் ஆனால் தோல்வி என்றால் மனவருத்ததோடு அடுத்த வேலையை தேடி அலைவோம் இது இந்த உலகத்தில் நடக்கும் சங்கதி - ஒன்றை விட்டால் அடுத்தது ..

அதை போல் நாம் ஏற்று இருக்கும் இஸ்லாம் இருக்கிறதே,மறுமைக்கான ஒரு இண்டர்விவை இம்மையில் நமக்கு வைக்கிறது ... ஆனால் பாருங்கள் அந்த இண்டர்விக்கு என்ன கேள்வி என்பதையும் , அதற்க்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதையும் சொல்லிகொடுக்கபட்டிருகிறது என்றால் இதை விட சுலபமான இண்டர்விவ் இந்த உலகத்தில் இருக்கிறதா என்ன ? நிச்சியமாக இல்லை…..

ஆனால் உலக வாழ்விற்காக காலம் பூராக கஷ்டபட்டு செல்வத்தை
சேர்க்கும் நாம் , மறுமை வாழ்விற்கு சேர்க்க வேண்டிய செல்வத்தில் கோட்டை விட்டு விட்டு ஏழையாக இருகிறோம்.


நிரந்தரமில்லாத இவ்வுலக வாழ்க்கைக்கு நாம் பணம் சம்பாரிக்க வேண்டும் என்பதற்க்காக பிறந்து சில வருடங்களிலே படிக்க ஆரம்பித்து விடுகிறோம். சராசரியாக 20 வருடங்கள் தொடர்து படிக்கிறோம் சிலர் வேளையில் இருந்தாலும் அதிக வருமானத்திற்காக மேலும் படிக்கிறார்கள். ..

உண்மையை சொன்னால் ஒரு இண்டர்விவிர்க்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட மறுமையில் அல்லாஹ்வின் முன் நிற்பதற்கு கொடுப்பதில்லை சிந்திக்க கடமை பட்டுளோம் .

உங்கள் தாயின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் - நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு - அவனே அமைத்தான்.( 16:78)


ஒன்றுமே இல்லாத , படைக்கபடாத நிலையில் இருந்த நமக்கு " உயிர் கொடுத்து , உணவு கொடுத்து , மனைவி மக்களை கொடுத்து வாழவைத்த நம் இறைவனுக்கு நன்றி செலுத்துவதில் கஞ்சத்தனம் காட்டுகிறோம் , இஸ்லாத்தில் தூய வடிவம் நமக்கு தெரியவில்லை , எப்படி அல்லாஹ்வை பயப்படுவது என்று தெரியவில்லை, ஏதோ முஸ்லிமா பொறந்துட்டோம் தொழுகிறோம் . ஓதுகிறோம் என்று தான் நம்மில் பலரின் நிலைமை

ஆனால் இஸ்லாம் நம்மை ஏதோ அலுவலகத்தில் வேலை செய்யும் பகுதி நேர ஊழியனாக இருக்க சொல்ல வில்லை , மாறாக நீ வாழ்வதே இஸ்லாமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது .

இவ்வுலகில் ஒரு கம்பெனியில் பெரிய பதவி வேண்டும் என்று ஆசை படும் நாம் ,மறுமையில் சொர்க்கத்தில் உயர்ந்த சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்று ஆசை படுவதில்லை ஏன் ? அதன் முக்கியத்துவம் நமக்கு தெரியவில்லை ..


நாம் ஒரு அமலை நன்மை என்று நினைத்து செய்கிறோம், அது யாரோ நமக்கு தெரிந்தவர்கள் இஸ்லாத்தின் பெயரால் சொல்லிகொடுத்தது, சரி என்று செய்து கொண்டு இருக்கிறோம் - மரணம் நமக்கு வருகிறது , நாளை மறுமையில் நிறுத்த படுகிறோம் : மீஜான் திராசு தட்டில் நன்மை மிக குறைவாக இருக்கிறது .., ( நீங்கள் செய்து வந்தது அல்லாஹ் , ரசூல் சொல்லிகொடுகாத செயல் அதலால் நீங்கள் நன்மை என்று எண்ணி செய்த செயல் தூக்கி ஏறிய படுகிறது )

என்ன செய்வீர்கள் ? நஷ்டவாலி யார் ? யாரிடம்போய் நியாயம் கேட்பீர்கள்..?
எந்த ஜாமத்தை அங்கே போய் குறை கூறி கொண்டு இருப்பீர்கள் ..?
காலில் முல் குத்தினால் தாங்க முடியாத நாம் நரகத்தில் ...????? நினைத்து பார்க்கவே நடுங்குகிறது ...


இஸ்லாமியர்களான நாம் இஸ்லாத்தை புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.
இஸ்லாம் நமக்கு எவ்வாறு கட்டளை இட்டுள்ளதோ , அதன் படி தான் பின்பற்ற வேண்டும். ஆனால் அனேக முஸ்லிம்களின் செயல்பாடுகள் இஸ்லாத்தின் பெயரால் செய்யப்பட்டாலும் இஸ்லாம் அல்லாத செயலாகதான் இருக்கிறது...


இஸ்லாம் சொல்லவில்லை என்றால் அது 1000 வருடம் செய்யபட்ட செயலாக இருந்தாலும் நிராகரிக்க வேண்டும்..

மனம் போன போக்கில் ஒரு விஷயத்தை செய்து விட்டு , மறுமையில் நன்மையை எதிர்பார்ப்பது முட்டாள் தனமில்லையா ?
(நபியே!) நீர் கூறுவீராக "ஒவ்வொருவனும் தன் வழியிலேயே செயல் படுகிறான்; ஆனால் நேரான வழியில் செல்பவர் யார் என்பதை உங்கள் இறைவன் நன்கு அறிவான்."(al-quran 17:84)


அப்படி மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்றால் - இஸ்லாத்தை நாம் ஒவ்வொருவரும் நபி ( ஸல் ) சொல்லிகொடுத்த பிரகாரம் அமைத்து கொள்ள வேண்டும் .

குரானை படிக்க வேண்டும் , ஹதிதை படிக்க வேண்டும் , வாழ்க்கை முறையை எப்படி இஸ்லாம் அமைத்து கொள்ள சொல்கிறது என்பதை இஸ்லாத்தின் ஒளியில் அறிந்து அதை நடை முறை படுத்த வேண்டும் ..

நிச்சயாமாக இவ்விஷயத்தில் அல்லாஹ்விற்கு பயந்து தூய இஸ்லாத்தை அறிந்து செயல் பட வேண்டும் மன இச்சையை பின்பற்ற கூடாது .


கீழ்காணும் நபி மொழியை பாருங்கள் :
நபி(ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து ஒளூ பற்றிக் கேட்கலானார். அதற்கவர்கள் ஒவ்வொன்றையும் மூம்மூன்று முறைகள் செய்து காட்டிவிட்டு, இதைவிட கூடுதலாகச் செய்பவர், முறைதவறியவராகவும், எல்லை மீறியவராகவும், அக்கிரமக்காரராகவும் ஆகிவிடுவர் என்றார்கள்.
அம்ருபின் ஷுஐபு(ரழி), --அஹ்மத்.


ஒளு செய்வது சுத்ததிர்காக தான் , ஒரு முறை அதிகமாக செய்தால் ஒன்றும் ஆகிவிடாது ஆனால் அதை கூட நபி அவர்கள் தடுத்தார்கள் , தனது சொல்லுக்கு மாறு செய்ய கூடாது வறம்பு மீறக்கூடாது என்கிறார்கள் என்றால் நாம் எந்த அளவிற்கு பொறுப்புடன் செயல் பட வேண்டும் என்பதை யோசித்து பார்த்து கொள்ள கடமை பட்டுளோம்.

நாளை மறுமையில் அல்லாஹுடைய தூதர் என்ன சொல்லிகொடுதார்களோ , என்ன செய்ய சொன்னார்களோ அதை பற்றி தான் அல்லாஹ் கேட்ப்பான் .. உங்கள் ஜமாஅத் தலைவர் என்ன சொன்னார் , உங்கள் முஹல்லா ஹஜரத் என்ன சொன்னார் என்று கேட்க மாட்டான்..

ஏனென்றால் முஸ்லிம்கள் தங்கள் மார்க்கத்தை உரிய முறையில் அறிந்து கொள்ள வேண்டும் அப்போது தான் , அல்லாஹ்வின் வல்லமையை புரிந்து மனதார ஒவ்வொரு கடமையை செய்ய முடியும் . .

(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும். ( அல்குரான் 38:29 )


இந்த வசனங்களை சிந்தயுங்கள் என்கிறான் இதுவரை நாம் என்ன சிந்தித்தோம் ?
நல்லுணர்வு பெறுவீர்கள் என்கிறான் என்ன கிடைத்தது ?

குரானை பொருள் உணர்ந்து படித்தால் தானே புரிவதற்கு , அரபியில் மட்டும் படித்தால் போதாது .

அல்லாஹ் நம்மோடு பேசுகிறான் அவன் தன்னை பற்றி என்ன சொல்கிறான் ?அவன் படைப்பான நம்மை பற்றி என்ன சொல்கிறான் ? என்பதை குரானை பொருள் உணர்ந்து படித்தால் தான் புரியும் இன்ஷால்லாஹ்.

நமக்கு புரியாது,தெரியாது என்கிறீர்களா? அல்லாஹ் சொல்கிறான் கேளுங்கள் :

நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (அல்குரான் 54:17)

நம்முடைய நாடி பிடித்து சொல்கிறான் :இக் குர்ஆனை உனக்கு எளிதாக அனுபிவைத்து இருக்கிறேன் , நல்லுணர்வு பெருவியா ? என்று நம் அனைவரிடம் கேட்கிறான் , பதில் சொல்கிறோமா ?

நாம எங்க இருகிறோம் ? உண்மையில் சொர்க்க சோலைகளை அடைவதை குறிகோளாக கொண்ட நாம் ,சத்தமில்லாமல் அசத்தியத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டோம் .

ஆதலால் இஸ்லாத்தின் பெயரால் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்பாட்டையும் , இஸ்லாம் நமக்கு கட்டளை இட்டது தானா ? என்று சுய பரி சோதனை செய்ய கடமைபட்டுளோம் .

இஸ்லாம் சொல்லாத அதாவது நபி (ஸல் ) சொல்லி தராத எந்த விஷயமும் நமக்கு தேவை இல்லை .. உலகத்திற்கு அருட்கொடையான நபி ( ஸல்) அவர்களை விட அதிகமாக நன்மையை நம்மால் செய்ய முடியுமா ? ( அவர்கள் அளவிற்கு செய்வதே முடியாத காரியம் )

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (Surat Al-Ahzab 33:36)

அல்லாஹ்வை மட்டுமே வணங்குவோம் - அல்லாஹ்விற்கு எதையும் , எதுக்காகவும் , யாரையும் , நேரடியாகவோ , மறைமுகமாகவோ இணை வைக்காமல் வாழ்வோம் ..

உலக மக்களுக்கு முன்மாதிரியான அல்லாஹ்வின் தூதர் நபி ( ஸல் ) அவர்களை மட்டும் பின்பற்றி வெற்றி பெறுவோம் . ( வேறு யாரை பின்பற்றி நாளும் தடம் புரழ்ந்து விடுவோம் )
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேரான வழியை காட்டுவானாக !

என்ன இண்டர்விக்கு ரெடியா ?
மறுமை இண்டர்விக்கு தயாரா ? சத்தமில்லாமல் நெருங்குகிறது மரணம்..!!!! உஷார்


NAGOREFLASH.
நன்றி:http://nagoreflash.blogspot.com

Wednesday, May 26, 2010

காலத்தின் அருமை


‘வல்அஸ்ர்’ காலத்தின் மீது ஆணையாக.எனத் தொடங்கும் திருமறையின் 103 வது அத்தியாயத்தின் முதல் வசனம் காலத்தின் அருமையைக்காட்டும் அற்புதமான வசனமாகும்.. இவ்வாறு காலத்தை முன்னிறுத்தித் தொடங்கியிருப்புத மிகவும் சிந்தனைக்குரியதாகும்.. இச்சொல் அளவில் மிகச்சிறியதாக இருப்பினும் அது காட்டும் நுட்பமும் திட்பமும் மிக்க பொருள் வானைவிட விரிவானது.

எனத் தொடங்கும் திருமறையின் 103 வது அத்தியாயத்தின் முதல் வசனம் காலத்தின் அருமையைக்காட்டும் அற்புதமான வசனமாகும்.. இவ்வாறு காலத்தை முன்னிறுத்தித் தொடங்கியிருப்புத மிகவும் சிந்தனைக்குரியதாகும்.. இச்சொல் அளவில் மிகச்சிறியதாக இருப்பினும் அது காட்டும் நுட்பமும் திட்பமும் மிக்க பொருள் வானைவிட விரிவானது.ஆணைப் பொருளாகிய காலத்திற்கும் அதைத் தொடர்ந்து நிறுவப்படும் கருத்துக்குமிடையே இழையோடுகின்ற தொடர்பினை காணும் போது நாம் வியந்து நிற்கிறோம். காலத்தின் அருமை பெருமைகளால் தான் காலத்தின் மீது ஆணையாக என இந்த அத்தியாயம் தொடங்குகிறது.

“காலத்தின் அருமையும் பெருமையும்”

காலத்தை எதிர்த்து நிற்கும் ஆற்றலை இவ்வுலகில் எந்தப் பெருவீரனும், பேரரசனும் பெற்றிருக்கவில்லை. ஏழையும், ஏந்தலும், கோழையும், வீரனும், இளைஞரும் முதியவரும், ஆடவரும் பெண்டிரும் காலத்தின் ஆட்சிக்கு அடங்கியே ஆக வேண்டும்.

நாள் தோறும் மாறி வரும் சிறு பொழுதும் , ஆண்டுதோறும் மீண்டுவரும் பெரும் பொழுதும் காலத்தின் அருமையைல்லவா ? மழலைக்குழந்தை சிறுவனாகி, இளைஞனாகி, காளையாகி, முதுமையாகி கூனற்கிழவனாகி மாறுவதும் காலத்தின் விந்தையன்றோ ?

காலத்தின் பார்வையிலிருந்து எதனையும் நாம் மறைத்து விடமுடியாது.மனிதன் காலத்திற்கு அடங்கி நடக்கவேண்டுமே தவிர, காலம் ஒருபோதும் மனிதனுக்கு அடங்கி நடக்காது.

“காலமும் கடலலையும் எவருக்காகவும் காத்திராது”என்பது ஆங்கிலப்பழமொழி. “ஓரங்குலத் தங்கம் கொடுத்தாலும் ஓரங்குலக் காலத்தை விலைக்கு வாங்க முடியாது” என்பது சீனப்பழமொழி. “காலம் கண் போன்றது ! கடமை பொன் போன்றது” என்பது தமிழகப் பழமொழி.

“காலமென்பது ஓய்வற்றது !, உலகின் உயிர் போன்றது!நிகழ்ச்சிகளை சுமந்தோடும் ஆறு’.” இவ்வாறெல்லாம் அறிஞர் பெருமக்கள் பலர் இயம்பியுள்ளனர்.

காலத்தின் அருமையையும், நேரத்தின் பெருமையையும் இவையனைத்தும் தெளிவுபடுத்துகின்றன.

சிறு துள்ளி பெருவெள்ளமாதல் போன்று, பல மணித்துளிகள் ஒன்றிக்கலப்பதே காலமாகும். ஓரு நிமிட நேரம் அளவிற்குறுகியதாயினும் அந்நேரத்துள் உலகில் நிகழும் நிகழ்ச்சிகள் உலகோரை அதிசயிக்க வைக்கின்றன.

1. ஒரு நிமிட நேரத்தில் நாம் வாழும் பூமி 950 மைல்கள் தன்னைத்தானே சுற்றிவிடுகின்றன.

2. 14000 கன அடி மழை மாநிலத்தில பொழிந்து விடுகின்றது.
3. 35000 டன் தண்ணீர் கடலில் கலந்து விடுகின்றது.
5. 68 கார்களும் 4600 செருப்புகளும் உற்பத்தியாகின்றன.
6. 114 குழந்தைகள் பிறக்கின்றன.
7. 100 பேர் இறக்கின்றனர்.
8. 34 திருமணங்களும் 3 மணவிடுதலைகளும் நிகழ்கின்றன.
9. 6000 விண்கற்கள் வீழ்கின்றன.

பல்லாண்டுகளுக்கு முன்னர் இவ்வாறு ஒரு புள்ளி விவரக்கணக்கெடுத்து காலத்தின் அருமையினை உணர்த்தினார் ஜெர்மானிய அறிஞர் ஒருவர். மிக வேகமாக வளர்ந்து வரும் இன்றைய நாளில் இவற்றை நூறாகப் பெருக்கினால் நேரத்தின் அருமை புரியும். இத்தகைய சீரும் சிறப்புமிக்க காலத்தின் மீது ஆணையிட்டு இறைவன் கூறும் மாண்புமிக்க அறிவுரை மனித குலத்துக்கு சீரிய அறிவுரையாகும்.

அதே வேளையில் வாழ்வின் குறிக்கோளை உணராமல் தான்தோன்றித்தனமாக நடக்கும் மக்களுக்கெல்லாம் இக்கருத்து ஒரு எச்சரிக்கையாக அமைகின்றது.

எடுத்ததும் துவக்கமே “மனிதன் நஷ் டத்திலிருக்கிறான்” என்ற தொடர் மனிதனுக்கு ஒரு வகை நடுக்கததைத் தருகிறது. தன்னைப் படைத்த நாயனை மறந்து பொருளைத் தேடுவதிலும் மனைவி மக்களோடு உல்லாசமாக பொழுதைக் கழிப்பதிலும் ஈடுபடுவோரும், வல்ல நாயனின் வழியிலே நடவாது சுகபோகங்களிலே மூழ்கி நிற்போரும் ஆடிப்பாடி குடித்துக் கும்மாளமடித்து சிற்றின்ப வேட்கையிலே தோய்ந்து கிடப்போரும் இறைவனை மறந்து ஆட்சி அதிகாரத்திலே செருக்கோடு வீற்றிருப்போரும் காலத்தின் வன்மையான பிடியிலிருந்து ஒருபோதும் தப்ப முடியாது.

” காலம் வரும்போது இறைவனின் பிடி மிகவும்கடுமையானது” என்பதை
85: 12 என்ற மறை வசனம் எச்சரிக்கிறது. காலத்தின் அருமையும் அது உணர்த்தும் உண்மையும் உணராது புதைகுழியை சென்றடையும்வரை மனிதன் அதிகமதிகமாகச் செல்வத்தைத்தேடி குவித்து மகிழ எண்ணுகிறானே தவிர அவற்றை வழங்கிய வல்ல நாயனை எண்ணிப்பார்க்கவோ நன்றிப்பெருக்கோடு வணங்கி வழிபடவோ செய்யாது அவற்றிற்காக மறுமையில் விசாரிக்கப்படுவோம் என்பதையும் மறந்து வாழும் மனிதன் ‘பெரும் நஷ் டத்திலல்லவா’ உள்ளான் என்பதை மனிதன் சிந்தித்துப் பர்க்கவேண்டாமா

நன்றி:http://albaqavi.com/

எஸ்.எஸ்.எல்.சி. நெல்லை மாணவி ஜாஸ்மின் முதலிடம்!


E-mailஅச்செடுக்க
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணி அளவில் வெளியிடப்பட்டது. இதில் நெல்லை மாணவி ஜாஸ்மின் 495 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

திருநெல்வேலி டவுனில் உள்ள நெல்லை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியான ஜாஸ்மின் 500 மதிப்பெண்களுக்கு 495 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவரது மதிப்பெண்கள் விவரம் வருமாறு:

தமிழ் - 98

ஆங்கிலம் - 99

கணிதம் - 100

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 98

மொத்தம் - 495


நன்றி:http://www.inneram.com/



Tuesday, May 25, 2010

கண்களால் செவியுறுவேன்; கல்வியில் சாதிப்பேன்!


printEmail
செய்திகள் - தமிழகச் செய்திகள்
புதன், 19 மே 2010 15:05

பேசுகிறவர்களின் உதடு அசைவுகளை வைத்தே புரிந்து கொள்ளும் ஆற்றல்!

காது கேளாதோர் பள்ளியில் முதலிடம் பெற்ற பிளஸ்-2 மாணவி!

பேசுகிறவர்களின் உதடு அசைவுகளை வைத்தே புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்ட மாணவி காது கேளாதோர் பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் முதலிடம் பெற்றார்.
சென்னை திருவல்லிக்கேனியைச் சேர்ந்த கார் டிரைவரான பி.எம். முகம்மது அப்துல்லாஹ்-எம்.எஸ். நாகூர் மீரா தம்பதிகளின் மகள் ஃபாத்திமா பானு. பிறந்த சில மாதங்களிலே ஃபாத்திமா பானுக்குப் பேச்சுத்திறன், காது கேட்கும் திறன் குறைபாடு இருப்பது தெரியவந்தது. இதனால் அவரின் பெற்றோர் மிகுந்த கவலைக்கு உள்ளானார்கள்.


மகளின் எதிர்காலம் அவர்களின் கண்முன் வந்து நின்றது. முகம்மது அப்துல்லாஹ் தன்னுடைய குறைந்த ஊதியத்தில் குடும்பத்தை நடத்திக்கொண்டு, மகளின் குறைபாடு தெரியாமல் அவரைப் படிக்க முடிவு செய்தார். சென்னை அண்ணாசாலையில் உள்ள 'லிட்டில் பிளவர் கான்வென்ட்' மேநிலைப்பள்ளியில் அவரைச் சேர்ந்தார்.


வாய் பேச முடியாவிட்டாலும், காது கேட்கும் திறனை இழந்து விட்டாலும் மாணவி ஃபாத்திமா பானு தனக்கு எதிரே பேசுகிறவர்களின் உதடு அசைவுகளை வைத்தே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளும் ஆற்றலை பெற்று இருக்கிறார். இந்த ஆற்றலே அவர் பிளஸ்-2வில் அதிக மார்க் எடுப்பதற்குத் துணை புரிந்தது.


பிளஸ்-2வில் பிசினஸ் மேக்ஸ் பாடப் பிரிவை தேர்வு செய்து தேர்வு எழுதிய அவர், கடந்த 14.05.2010 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவில் 1000-க்கு 953 மார்க் பெற்று பள்ளியிலே முதல் மாணவியாக தேர்வு பெற்றார்.

தமிழில் 177 மார்க்கும், பொருளாதாரத்தில் 196, வணிகவியலில் 198, கணக்குபதிவியலில் 189, பிசினஸ் மேக்ஸில் 193 மதிப்பெண்ணும் பெற்று இருக்கிறார். இந்த வெற்றி அவரையும் அவரின் பெற்றோர்களையும் மன மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. பிளஸ்-2க்கு பிறகு பி.காம் படித்து, சி.ஏ.(ஆடிட்டர்) ஆக வேண்டும் என்பதுதான் அவருடைய லட்சியமாக இருக்கிறது.

முதலிடம் பெற்ற மாணவியைப் பள்ளித் தலைமை ஆசிரியை வசந்தி, கட்டிப் பிடித்து "உன் விடாமுயற்சிக்கு பாராட்டுகள்" என்று கூறி வாழ்த்துத் தெரிவித்தார். பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவி ஃபாத்திமா பானு இன்னும் ஓராண்டு ஆங்கிலக் கல்வியை அதே பள்ளியில் கற்க வேண்டியுள்ளது. அதன்பிறகு அடுத்த ஆண்டு (2011) அவர் கல்லூரிக்குச் சென்று தன்னுடைய லட்சியப் பயணத்தைத் தொடருவார்.


இது குறித்து பானுவின் தந்தை முகம்மது அப்துல்லாஹ் கூறியதாவது:-

"ஃபாத்திமா எனக்கு மூத்த மகள். பிறந்த சில மாதங்களிலே அவளால் பேசவும் கேட்கவும் முடியாது என்பது எங்களுக்குத் தெரியவந்தது. இது எங்களுக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியது. மனதில் தோன்றிய காயங்களைத் தாங்கிக்கொண்டு, என் மகளின் எதிர்காலத்திற்காகப் பாடுபட்டு வருகிறோம். ஆண்டவனின் கருணையால் பிளஸ்-2 தேர்வில் அவள் நல்ல மதிப்பெண் பெற்று இருக்கிறாள். ஆடிட்டராக வர வேண்டும் என்பது அவளின் விருப்பம். அதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவான் என்று நம்புகிறேன்"

நன்றி : தினத்தந்தி

நன்றி:http://www.satyamargam.com

ஏகத்துவம்


தவ்ஹீது (ஏகத்துவம்)

kalima

தவ்ஹீது என்பதற்கு ஒருமைப்படுத்துதல் என்று பெயர்.

இஸ்லாத்தில் தவ்ஹீது என்பதற்கு,

அனைத்து வகையான வணக்க வழிபாடுகளுக்கும் தகுதி யுடையவன் அல்லாஹ் ஒருவனே என்றும், படைத்தல், காத்தல், உணவளித்தல் போன்ற செயல்களிலும் மற்றும் குர்ஆன் ஹதீஸ்கள் ஆகியவற்றில் அல்லாஹ்வின் ஆற்றல்கள், பண்புகளாக எவைகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றதோ அவைகள் அனைத்திலும் அல்லாஹ்வுக்கு நிகர் யாருமில்லை என்றும் அவன் தனித்தவன் என்றும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கு ‘தவ்ஹீத்’ என்று பெயர்.

தவ்ஹீதின் வகைகள்: -

தவ்ஹீது மூன்று வகைப்படும். அவைகள்: -

1. தவ்ஹீதுர் ருபூபிய்யா (படைத்துப் பரிபாலிக்கும் இரட்சகனை ஒருமைப்படுத்துவது)

2. தவ்ஹீதுல் உலூஹிய்யா (வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவுது)

3. தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத். (அல்லாஹ்வுடைய பெயர்களில், பண்புகளில் அவனை ஒருமைப்படுத்துவது)

1. தவ்ஹீதுர் ருபூபிய்யா: -

இந்த பேரண்டத்தையும் மற்றும் அதில் இருக்கும் அனைத்து வஸ்த்துக்களiயும் படைத்து, காத்து, உணவளித்து பரிபாலிக்கும் விஷயங்களில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவற்கு “தவ்ஹீதுர் ருபூபிய்யத்” என்று பெயர்.

அதாவது, இந்த அனைத்து செயல்களையும் செய்பவன் அல்லாஹ் ஒருவனே என்றும் அவனுக்கு யாதொரு இணை துணையுமில்லை என்றும் மனதால் நம்பி நாவால் உறுதிகொள்வதாகும்.

2. தவ்ஹீதுல் உலூஹிய்யா: -

வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாருமில்லை என்றும் அனைத்து வகையான வணக்கங் கங்களையும் அல்லாஹவுக்கே செய்து அவனை ஒருமைப் படுத்துவதற்கு ‘தவ்ஹீதுல் உலூஹிய்யத்’ என்று பெயர்.

அதாவது தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ், பிரார்த்தனை, நேர்ச்சை, குர்பானி, பேரச்சம் கொள்ளுதல், ருகூவு செய்தல், ஸூஜூது செய்தல் போன்ற அனைத்து வகையான வணக்க வழிபாடுகளையும் அல்லாஹ் ஒருவனுக்கே செய்யவேண்டும் என உறுதிகொள்வதாகும்.

3. தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்: -

அல்லாஹ்வின் திருநாமங்கள், பண்புகள் மற்றும் ஆற்றல்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் எவ்வாறு கூறப்பட்டுள்ளதோ அவ்வாறே நம்பி அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கு தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத் என்று பெயர்.

தவ்ஹீதின் முக்கியத்துவம்: -

மேற்கூறப்பட்ட மூன்று வகை தவ்ஹீதும் ஒன்றுக்கொன்று தொர்புடையதும் பிரிக்கமுடியாததாகும். இதில் ஏதாவது ஒன்றை ஒருவர் மறுத்தாலும் அவர் தவ்ஹீது கொள்கையை ஏற்றுக்கொண்டவராக மாட்டார்.

இந்த தவ்ஹீது வகைகளில் ஏதாவது ஒன்றை ஏற்றுக்கொள்ள மறுப்பது என்பது ‘ஷிர்க்’ என்னும் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் செயலாகும். (அல்லாஹ் நம் அனைவைரயும் பாதுகாப் பானாவும்).

(நன்றி சுவனத் தென்றல் வெப்தளம் www.suvanathendral.com)

நன்றி:http://islamicparadise.wordpress.com

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்