அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Friday, December 23, 2011

பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு செய்யும் துஆ


எழுதியவர்/பதிந்தவர்/உரை

அல்-ஜுபைல் வெள்ளிமேடை-(1433/03)
உரை: S. யாசிர் ஃபிர்தௌஸி
நாள்: 16-12-2011
இடம்: அல்-ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம்


பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு செய்யும் துஆ from islamkalvi on Vimeo.


நன்றி:islamkalvi.com

Sunday, December 4, 2011

கிறிஸ்மஸ் – மறைக்கப்பட்ட உண்மைகள்

எழுதியவர்/பதிந்தவர்/உரை

- முஹம்மட் அர்ஷாத் arshathslm@gmil.com
‘நத்தார் பண்டிகை’ அல்லது ‘கிறிஸ்மஸ்’ – Christmas – என அழைக்கப்படும் ‘இயேசு கிறிஸ்த்துவின் பிறந்தநாள் விழா’ ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25 அன்று பெரும்பாலான கிறிஸ்த்தவர்களால் கொண்டாடப்படுகின்றது. கிழக்கு மரபுவழி திருச்சபையினர் என்கின்ற கிறிஸ்த்தவ பிரிவினரால் ஜனவரி 7ம் நாள் கொண்டாடப்படுகின்றது.
பிறந்த நாள் கொண்டாட்டம் அறிவுபூர்வமானதா? கிறிஸ்த்தவ நம்பிக்கையின்படி இறைமகனுக்கே(?) பிறந்தநாளா? என்கின்ற வாதப்பிரதிவாதங்களுக்குள் நுழையாமல் கிறிஸ்மஸ் பண்டிகை டிசம்பர் 25ல் கொண்டாடப்படுவது சரிதானா? என்பதை வரலாற்று ரீதியாகவும், பைபிள் மற்றும் திருக்குர்ஆன் ஒளியிலும் ஆய்வுக்குட்படுத்துவோம்.

வரலாற்று ஒளியில் கிறிஸ்மஸ்…

கிறிஸ்மஸின் தோற்றம்
ஆரம்ப கால கிறிஸ்த்தவ சமுதாயத்தில் கிறிஸ்மஸ் உள்ளிட்ட எந்தவொரு பிறந்த நாள் கொண்டாட்டங்களும் கொண்டாடப்படவில்லை. கிறிஸ்மஸ் நாள் மரபுவழி வருவதேயன்றி இயேசுவின் உண்மையான பிறந்தநாள் அல்ல. மேலும், கிறிஸ்மஸ் மரம், கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் கேக் போன்ற அனுஸ்டானங்கள் புராதன பாபிலோனிலிய மக்களின் கலாசாரம் என என்சைக்ளோபீடியா -The world book Encyclopedia – The Encyclopedia of Religion and Ethics – the Encyclopedia Americana – கூறுகின்றது.
விக்கிபீடியா தருகின்ற தகவலின் அடிப்படையில், இத்தாலி போன்ற நாடுகளில் காணப்பட்ட ‘சட்டர்நாலியா’ (சடுர்நலியா பண்டிகை) – Saturnalia – மற்றும் உரோமர்களால் டிசம்பர் 25ல் கொண்டாடப்பட்டு வந்த வெற்றி வீரன் சூரியன் (Sol- Indicts) என்றழைக்கப்பட்ட சூரியக் கடவுளின் பிறந்தநாளான நட்டாலிஸ் சோலிஸ் இன்விக்ட்டி- Natalis Solis Invicti – (சோல் இன்விக்டுஸ்) என்கின்ற குளிர்கால பண்டிகைகளை தழுவியே கிறிஸ்மஸ் தோன்றியதாக கூறுகின்றது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில்,
  • கிறிஸ்த்தவ எழுத்தாளர்கள் இயேசுவின் பிறப்பை சூரியனின் மீள்உதயத்தோடு ஒப்பிட்டுள்ளதையும்,
  • இயேசு சோல்-இன் சூரியக்கடவுளாக சித்தரிக்கப்பட்டுள்ளதையும்,
  • சிப்ரியன் – Cyprian- என்கின்ற கிறிஸ்த்தவ மதபோதகரின் “எவ்வளவு அதிசயச் செயல் சூரியன் பிறந்த நாளில்…. கிறிஸ்த்துவும் பிறந்தது….” “ Oh ,how wonderfully acted Providence that on that day on which that Sun was born . . . Christ should be born…” என்கின்ற வாக்குமூலத்தையும்,
  • இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இதனை முழுக்க முழுக்க உறுதிப்படுத்துகின்ற “சோல் இன்விக்டுஸ்- கிறிஸ்மஸின் தொடக்கத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளது” என்கின்ற கத்தோலிக்க கலைக்களஞ்சியத்தின் வாக்குமூலம்
போன்ற சான்றுகளை கோடிட்டு காட்டுவதன் மூலம், சூரியக் கடவுளின் பிறந்தநாள் உள்ளிட்ட குளிர்கால கொண்டாட்டங்களை அடிப்படையாக வைத்து மிகமிக பிற்பட்ட காலத்தில் தோன்றிய ஒரு பண்டிகையே கிறிஸ்மஸ் என்கின்ற கருத்தை உறுதி செய்கின்றது.
‘செக்டுஸ் ஜுலியஸ் அப்ரிகானுஸ்’ – Sextus Julius Africanus – என்கின்ற மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்த்தவ எழுத்தாளரால் இயேசு கிறிஸ்து டிசம்பர் 25ல் பிறந்தார் என்கின்ற கருத்து வரலாற்றில் முன் வைக்கப்படுகின்றது. இதற்கு ‘ஒரிஜென்’- Origen – போன்ற ஆரம்பகால முக்கிய கிறிஸ்த்தவ மதகுருக்களே மிக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர். கிறிஸ்த்தவ இறையியல் அறிஞரான ஒரிஜென், “பார்வோன்- pharaoh – அரசனைப் போன்று இயேசு கிறிஸ்த்துவின் பிறந்தநாளை கொண்டாடக்கூடாது என்றும், பாவிகளே அவ்வாறு செய்வதாகவும், புனிதர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள்” என்றும் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டார்.
ரோமப் பேரரசன் ‘கான்ஸ்டான்டின்’ – Constantin – காலத்தில் இடம் பெற்ற நைசியன் திருச்சபை பிரகடனத்தில் -Declaration of Nicean Council –
சூரியக்கடவுளின் பிறந்தநாள் -டிசம்பர் 25- இயேசுநாதரின் பிறந்தநாளாகவும், சூரியக் கடவுளின் பெயரால் உரோமர்கள் கொண்டாடிய கொண்டாட்டங்கள்- கிறிஸ்த்துவின் பிறந்தநாள் கொண்டாட்டங்களாகவும் அறிவிக்கப்பட்டது.
இக்கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் ஒரேகடவுள் மூன்று நிலைகளில் உள்ளார் என்கின்ற கொள்கையை அடிப்படையாக கொண்ட கிறிஸ்த்தவ பிரிவினரால் கி.பி. 378ல் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது. கி.பி. 379ல் கொன்ஸ்தாந்துநோபலில் – Constantinople – அறிமுகப்படுத்தப்பட்ட கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் பெரும் சர்ச்சையை தோற்றுவித்ததாக எட்வர்ட் கிப்பன் – Edward Gibbon -என்கின்ற ஆய்வாளர் குறிப்பிடுகிறர். வழக்கொழிந்து போன கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் கொன்ஸ்தாந்துநோபலில் கி.பி. 400 காலப்பகுதியில் ‘யோன் கிறிசொஸ்டம்’ -John Chrysostom- என்கின்ற கிறிஸ்த்தவ போதகரால் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகின்றது.
மேலும், பேரரசன் சார்லிமெஜி -Charlemagie- என்பவன் கி.பி 800ம் ஆண்டு கிறிஸ்மஸ் நாளில் முடிசூட்டிக்கொண்டதாலும், கி.பி. 1066 ல் முதலாவது வில்லியம் (இங்கிலாந்து)- William I of England – மன்னன் கிறிஸ்மஸ் நாளில் முடிசூட்டிக்கொண்டதாலும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகின்றது.
மத்திய கால கிறிஸ்த்தவ சீர்திருத்த திருச்சபைகள் “கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள்- பாப்பரசின் ஆடம்பரம்” என்று விமர்சித்தனர். தூய்மைவாதிகள் -Puritans- எனும் கிறிஸ்த்தவ பிரிவினர் “கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை விலங்கின் (சாத்தானின்) கந்தல் துணி” என்று மிகக் கடுமையாக விமர்சித்தனர். மேலும் கி.பி. 1647ல் தூய்மைவாத கிறிஸ்த்தவ மறுசீரமைப்பினர் எனும் கிறிஸ்த்தவ பிரிவினர் முதலாம் சார்ல்ஸ் மன்னனின் உதவியோடு இங்கிலாந்தில் கிறிஸ்த்தவ கொண்டாட்டங்களை தடைசெய்தனர். இன்றும் கூட சில அங்கிலிக்கன் திருச்சபை கிறிஸ்த்தவ போதகர்களும், ஆர்மினியர்களும், செர்பியர்களும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை அங்கீகரிப்பதில்லை.
தூய்மைவாத கிறிஸ்த்தவ பிரிவினரால் கி.பி. 1659-1681 காலப்பகுதியில் புதிய இங்கிலாந்தின் பொஸ்டன் நகரில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் தடைசெய்யப்பட்டிருந்தன கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அமெரிக்க புரட்சிக்குப் பின்னர் அமெரிக்காவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் முக்கியத்துவம் இழந்து காணப்பட்டன.
19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை உயிர்ப்பிப்பதில் எழுத்தாளர் வாசிங்டன் இர்விங்- Washington Irving- எழுதிய -“The Sketch Book of Geoffrey Crayon”, “Old Christmas”- என்கின்ற சிறுகதை நூற்களும், அமெரிக்காவில் குடியேறிய ஜேர்மனியர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. எனினும், இர்விங் தனது நூலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் கற்பனையானவை என்கின்ற விமர்சனமும் எழுந்தது. இதுவே அமெரிக்காவுக்கு கிறிஸ்மஸ் வந்த கதையாகும்.
சுருக்கமாக சொல்லப்போனால், கிறிஸ்மஸ் பண்டிகை -டிசம்பர் 25ம் நாள்- மித்ரா என்கின்ற சூரியக்கடவுளின் பிறந்தநாளாகும். சடுர்நலியா என்கின்ற குளிர்கால பண்டிகையை தழுவியே பெரியவர்களுக்கு மெழுகவர்த்தியும், சிறியவர்களுக்கு பொம்மைகள் வழங்குகின்ற கலாச்சாரமும் பரிசுப்பரிமாற்றங்களும், களியாட்டங்கள், கேளிக்கை நிகழ்வுகளும்; மதுஅருந்துகின்ற வழக்கமும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் போது இடம்பிடித்தன.
எனவே, வரலாற்று ஒளியில் கிறிஸ்மஸ் பண்டிகை- டிசம்பர் 25ம் நாள் கொண்டாட்டங்கள்- கிறிஸ்த்தவர்களுடைய பண்டிகை அல்ல. மாறாக, புறஜாதியினருடைய பண்டிகை என்பது நிரூபணமாகின்றது.
பைபிளின் ஒளியில்..
லூக்கா அதிகாரம்: 02

  1. அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.
  2. சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.
  3. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள்.
  4. அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,
  5. கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப்போனான்.
  6. அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது.
  7. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.
  8. அப்பொழுது அந்தநாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையை காத்துக் கொண்டிருந்தார்கள்.
இயேசுவின் தாய் மரியாள், யோசேப் என்பவரின் துணையோடு நாசரத் எனும் ஊரிலிருந்து யூதேயா நாட்டில் உள்ள பெத்லகேம் எனும் ஊருக்கு சனத்தொகை கணக்கெடுப்புக்காக நீண்ட தூரம் பிரயாணம் செய்துள்ளதாக பைபிள் கூறுகின்றது. போக்குவரத்து வசதிகள் குன்றிய அக்காலகட்டத்தில் மரியாள் மேற்கொண்ட பயணம் மிகக் கடினமானது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது.
இப்போது நமது கேள்வி என்னவென்றால், பைபிள் குறிப்பிடுகின்ற பிரதேசங்கள் டிசம்பர் 25 காலப்பகுதியில் பனிஉறையக் கூடிய மிகக் கடுமையான காலகட்டமாகும். அக்காலகட்டத்தில் வாணிபக்கூட்டம் உள்ளிட்ட யாரும் பயணங்கள் மேற்கொள்வதில்லை. எனவே, மக்கள் பயணம் செய்ய முடியாத குளிர்காலத்தில் அகுஸ்துராயனால் இக்கட்டளை நிச்சயம் இடப்பட்டிருக்க முடியாது.
இரண்டாவதாக, லூக்கா சுவிசேஷம் 2:8 வசனம் குறிப்பிடுகின்ற ‘அந்தநாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையை காத்துக் கொண்டிருந்தார்கள்’ என்கின்ற வசனத்தையும் நாம் கருத்தூன்றிப் படிக்க வேண்டும்.
பனிஉறைகின்ற குளிர்காலத்தில் இடையர்கள் வயல்வெளிகளில் தங்குவது கிடையாது. மாறாக, அறுவடை முடிந்ததன் பிற்பாடு கோடையின் பிற்பகுதியிலேயே வயல்வெளிகளில் தங்கி,மந்தையைக் காத்து வருவது (கிடை கட்டுவது) வழக்கமாகும். அதன் மூலம் அறுவடை முடிந்த விளைநிலங்களை அடுத்த வேளாண்மைக்கு முன் இயற்கை உரமிட்டு வளப்படுத்துவதும் வழக்கமாகும்.
எனவே, பைபிளின் கூற்றுப்படி இயேசுவின் பிறப்பு நிகழ்ந்தது கோடையின் பிற்பகுதியாகும். மாறாக, குளிர்காலமான டிசம்பர் 25 கிடையாது.
இது குறித்து -Joe Kovacs- என்கின்ற கிறிஸ்த்தவ அறிஞர் தனது ‘Shocked by the Bible’ எனும் நூலில் இயேசு டிசம்பர் 25ல் பிறந்தார் என்கின்ற கருத்தை நிராகரிக்கிறார்.
மேலும் lord.activeboard.com எனும் கிறிஸ்த்தவ வலைத்தளம் இயேசு கிறிஸ்த்துவின் பிறப்பு குறித்து பைபிளை மேற்கோள் காட்டி குறிப்பிடுகின்ற விபரங்களை தகவலுக்காக தருகின்றேன்.
இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்- 1.
அதாவது, இயேசு கிறிஸ்துவுக்கு முன்னோடியான யோவான் ஸ்நானகன் என்ற ஸ்நான அருளப்பர் வயதிலேயே இயேசுவுக்கு ஆறு மாதங்களுக்கு மூத்தவர். எப்படியெனில் காபிரியேல் தூதர் இயேசுவின் தாயாகிய மரியாளுக்கு வாழ்த்துதல் கூறும்போது யோவான் ஸ்நானகனின் தாயாகிய எலிசபெத்துக்கு இது ஆறாம் மாதம் என்றார். ஆகவே, இயேசுவின் பிறந்த நாளை கண்டு பிடிக்க யோவான் ஸ்நானகனின் பிறப்பை கவனிப்பது அவசியம். எனவே, லுக்கா 1:5 முதல் 20 வசனங்களை வாசிக்கவும்.
இதில் 5-ம் வசனத்தில் அபியா என்ற ஆசாரிய முறைமையில் -Order- சகரியா என்ற ஒருவன் இருந்தான் என்றும், 8-9 வசனங்களில் சகரியா தன் ஆசாரிய முறைமையின்படி தேவ சந்நிதியிலே தூபங்காட்டுகிறதற்கு சீட்டைப் பெற்றான் என்று வாசிக்கிறோம்.
எனவே, யோவான் ஸ்நானகனின் தகப்பனாகிய சகரியா ஆலயத்திலே ஊழியம் செய்த, அந்த அபியாவின் முறை என்னவென்றும், அது எக்காலம் என்றும் நாம் அறிவது அவசியம்.
அதாவது தாவீது அரசனின் காலத்தில் ஆலயத்தில் ஆசாரிய ஊழியம் செய்ய, முறைமை வகுக்கப்பட்டது எப்படியெனில் ஆசாரிய ஊழியம் செய்ய 24 ஆசாரியர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு இரண்டு இரண்டு பேராக 12 மாதத்திற்கும் 24 ஆசாரியர்களாக முறைப்படுத்தப்பட்டனர். ஒரு மாதத்தின் முதல் 15 நாட்களுக்கு ஒரு ஆசாரியனும் பின் 15 நாட்களுக்கு ஒரு ஆசாரியனுமாக முறைப்படுத்தப்பட்டு, ஆசாரியர்களின் பெயர்களை எழுதி சீட்டுப் போட்டு யார் யார் எப்போது ஆலயத்திலே ஊழியம் செய்ய வேண்டும் என்று, தாவீது அரசன் முறைப்படுத்தி இருந்தான்.
முதலாம் சீட்டுப் பெற்றவன் முதலாம் மாதம் முன் 15 நாட்களுக்கும், இரண்டாவது சீட்டுப் பெற்றவன் முதலாம் மாதம் பின் 15 நாட்களுக்கும் ஆசாரிய ஊழியம் செய்ய வேண்டும். அந்தப்படி, எட்டாவது அபியா என்ற ஆசாரியனுக்கு சீட்டு விழுந்தது. எட்டாவது எண்ணும்போது அபியாவின் ஊழியகாலம் எபிரேயரின் மாதப்படி 4-ம் மாதமாகிய தம்மூஸ் மாதம் பின் 15 நாட்களாகும். இந்த காரியங்களை 1 நாளாகம புஸ்தகம் 21-ம் அதிகாரத்தில் பார்க்கலாம்.
எனவே, சகரியா ஆலயத்தில் ஊழியம் செய்த காலம் அவனது முன்னோரான அபியாவின் முறைமையின்படி எபிரேய மாதமான 4-ம் மாதம், தம்மூஸ் மாதத்தின் பின் 15 நாளாகும். சகரியாவின் இந்த ஊழியகாலம் நிறைவேறிய பின்பு அவன் வீட்டுக்குப்போனான். எந்த ஆசாரியனும் தனது ஆலய ஊழியக்காலத்தில் வீட்டிற்குப் போகமாட்டான். அந்த 15 நாட்களும் ஆலயத்திலே தங்கியிருப்பார்கள். ஊழியகாலம் நிறைவேறிய பின்பே தங்கள் வீடுகளுக்குப் போவது வழக்கம் அதன்படி, சகரியா தனது ஊழிய காலம் நிறைவேறின பின்பு, தனது வீட்டிற்குப் போனான். அதன் பிறகு அவன் மனைவி கர்பவதியானாள். (லுக்.1:23-24)
எனவே, யோவான் ஸ்நானகளின் தாய் எலிசபெத்து கர்ப்பம் தரித்து எபிரேய மாதப்படி 5-ம் மாதமாகிய ஆப் என்னும் மாதம் இது தமிழ் மாதத்திற்கு ஆடிமாதம், ஆங்கில மாதத்திற்கு ஜீலை மாதமாகும். எலிசபெத்தின் ஆறாம் மாதத்தில் காபிரியேல் தூதர் மரியாவிடம் அனுப்பப்பட்டார் (லுக்.1:26-28).
ஆகவே, காபிரியேல் மரியாளை சந்தித்து தேவசித்தத்தை தெரிவிக்கவும். உன்னதமானவரின் பெலன் நிழலிடவும், மரியாள் கர்ப்பவதியானாள். எனவே மரியாள் கர்ப்பம் தரித்தது எலிசபெத்தின் ஆறாம் மாதத்தில், அதவாது, ஆடி மாதத்திலிருந்து ஆறு மாதம் தள்ளி மார்கழி மாதத்திலிருந்து பத்தாம் மாதம் இயேசு பிறந்த மாதம்.
அதாவது மார்கழி 1, தை 2, மாசி 3, பங்குனி 4, சித்திரை 5, வைகாசி 6, ஆனி 7, ஆடி 8, ஆவணி 9, புரட்டாசி 10. புரட்டாசி மாதமே இயேசு பிறந்தமாதம். இது ஆங்கில மாதத்திற்கு அக்டோபர் மாதம். எனவே, இயேசு பிறந்தது டிசம்பர் 25-ம் தேதியல்ல தமிழ் மாதமாகிய புரட்டாசி கடைசியிலும், ஆங்கில மாத்திலே அக்டோபர் முதலுக்குமாகும். இது எபிரேய மாதத்திற்கு ஏழாம் மாதம் எத்தானீம் மாதமாகும்.
இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்-2.
அதாவது இயேசுவின் மரணநாள் வேதத்தில் திட்டமாக கூறப்பட்டுள்ளது. இது யூதர் முறைப்படியான நீசான் மாதம் 14-ம் தேதி, முதல் மாதமாகிய நீசான் மாதம் நமது தமிழ் மாதமான பங்குனி மாதத்திற்கு சமமானது. ஆங்கில மாதம் மார்ச் கடைசியிலோ அல்லது ஏப்ரல் மாதம் முதலுக்கோ இருக்கும். இயேசு தமது 33½ வசயதில் மரித்தார் என்பதை தானியேல் தீர்க்கதரிசியின் புத்தகத்தின் வாயிலாக திட்டமாக அறியலாம். (தானி.9:24-47) இயேசு 33 வயதில் அல்ல. 33½ வயதில் மரித்தார். இது மார்ச் மாதக் கடைசியிலோ அல்லது ஏப்ரல் முதலுக்கோ வருகிறது என்றால் அவரது பிறந்தநாள் அதற்கு 6 மாதத்திற்கு முன்னதாக இருக்க வேண்டும். எனவே, மார்ச் மாதத்திலிருந்து பின்நோக்கி 6 மாதம் சென்றால் மார்ச் 1, பிப்ரவரி 2, ஜனவரி 3, டிசம்பர் 4, நவம்பர் 5, அக்டோபர் 6. எனவே, இயேசு பிறந்தது டிசம்பர் 25 அல்ல. அக்டோபர் மாதத்தில் என்பது தெளிவு.
இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்-3.
இயேசுகிறிஸ்து டிசம்பர் 25-ல் பிறக்கவில்லை என்பதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு உண்டு. அதாவது, இயேசுகிறிஸ்து பிறந்தபோது அவரது பிறப்பை தேவ தூதர் மேய்ப்பர்களுக்கு அறிவித்தார் என வாசிக்கிறோம். தேவ தூதர் மேய்ப்பர்களுக்கு தரிசனமானபோது அவர்கள் வயல்வெளிகளில் ஆட்டு மந்தைகளை வைத்திருந்தார்கள். (லூக்.2:8:11) டிசம்பர் மாதத்தில் நம் நாட்டில் இருப்பதுபோல கிஸ்லேவ் என்ற ஒன்பதாம் மாதம் பலஸ்தீனாவில் கடுங்களிராகயிருக்கும். அது அடைமழை காலமாகவும், குளிர்காலமாகவும் இருப்பதால் அக்காலங்களில் மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளை வயல்வெளிகளில் நிறுத்தமாட்டார்கள் இதை எஸ்றாவின் புத்தகத்திலும், பலஸ்தீனா சரித்திரங்களிலும் நாம் அறியலாம். (எஸ்றா. 10:9,13: எரே. 3:22)
எனவே, மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கியிருந்த காலம் மழைக்காலமாகிய டிசம்பருக்கு முன்னான காலமாக இருக்க வேண்டும். அக்டோபர் மாதமே மந்தைகளை வயல்வெளிகளில் வைப்பதற்கு ஏற்ற காலம். எனவே, இயேசு பிறந்தது டிசம்பர் மாதத்தில் அல்ல. அது டிசம்பருக்கு முன்னான அக்டோபர் மாதத்தில்தான் என்பதை நிதானித்து பார்க்கும் போது அறிந்து கொள்ளலாம்.
இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்- 4.
மேலும், சில காரியங்களை கவனிப்போமானால் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் வழக்கம், திருச்சபையின் தொடக்க காலங்களில் இல்லை. சுமார் 4-ம் நூற்றாண்டு வாக்கிலேதான் கிறிஸ்துமஸ் பண்டிகை முதல் முதலாகக் கொண்டாடப்பட்டதாக –Encyclopaedia- மூலமாக அறியலாம். இதை ஆதி திருச்சபை வரலாறு நமக்குத் தெளிவாக்குகிறது. அதாவது வடஜரோப்பா கண்டத்தில் வாழ்ந்த துத்தானிய ஜாதியினர் கிறிஸ்து மார்க்கத்தை தழுவும் முன்னே, அவர்கள் இயற்கை சக்திகளை வழிபட்டு வந்தார்கள். சூரியனை வணங்கி அதன் கால மாற்றங்களை பண்டிகையாக கொண்டாடி வந்தனர். அதாவது சூரியனுக்கும், பூமிக்கும் உள்ள தொடர்பில், சூரியன் பூமத்திய ரேகையிலிருந்து வடக்கு நோக்கி சஞ்சரித்து டிசம்பர் 22-ந் தேதி வடஅட்சத்தில் கடகரேகையை அடைகிறது. இது வட ஐரோப்பாவில் சூரியன் தென்படும் உச்ச நிலையாகும். இது ஜுலியன் காலண்டர்படி டிசம்பர் 25-ம் தேதி என கணிக்கபட்டது. ஆகவே, அந்த நாளிலே அங்கு வாழ்ந்த மக்கள் சூரியனுக்கு ஒரு பெரிய பண்டிகையாக ‘ஒளித்திருவிழா’ -Festival of Fires- என்று கொண்டாடி வந்தனர்.இதன் தொடர்ச்சியாக அதிலிருந்து 8-ம் நாள் ‘மகிழ்ச்சி திருவிழா’ -Joy Festival- என்று ஜனவரியில் கொண்டாடி வந்தனர். ஜெர்மானிய துத்தானிய ஜாதியினரான இவர்கள் தாங்கள் கிறிஸ்தவர்களாக மாறியும் தங்கள் பழைய பழக்கவழக்கங்களை விட்டுவிட மனம் இல்லாததால் டிசம்பர் 25 கிறிஸ்து பிறந்த நாளாகவும் அதிலிருந்து 8-ம் நாள் ஜனவரி முதல் தேதி இயேசுவின் விருத்தசேதன நாளாகவும் பிரகடனப்படுத்திவிட்டனர்.
இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்- 5.
இயேசுவின் பிறந்தநாளை கொண்டாடும்படி வேதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. சீடர்களும் கொண்டாடவில்லை. ஆனால் கிறிஸ்துவின் மரண நாளை நினைவுகூறும்படி கற்பிக்கப்பட்டுள்ளது (லூக். 22:19) கர்த்தரின் ஞாபகார்த்தபஸ்காவாகிய இராப்போஜன பண்டிகையே அவரது மரணத்தை நினைவு கூறும் நாளாயிருக்கிறது. (1. கொரி. 11:22-26)
மேற்படி வலைத்தளம் பைபிளை மேற்கோள்காட்டி இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25 அல்ல. அக்டோபர் தான் என ஆதார அடிப்படையில் வாதடுகின்றது.
பைபிளில் எங்குமே இயேசுவின் பிறந்தநாள் பற்றிய எந்தவொரு குறிப்பும் கிடையாது. மேலும், இயேசுவின் பிறந்தநாளை கொண்டாடுமாறு பைபிள் கட்டளையிடவுமில்லை.
மாறாக, பைபிள் வசனங்களை ஆய்குட்படுத்தும் போது இயேசு கோடைகாலத்தின் இறுதிப்பகுதியில் பிறந்தார் என்கின்ற முடிவுக்கே வரமுடிகின்றது.
திருக்குர்ஆன் ஒளியில்..
இயேசு கிறிஸ்த்து அவரை திருக்குர்ஆன் “ஈஸா” என்று அழைக்கின்றது. ‘அவர் மீது சர்வ வல்லமை பொருந்திய கர்த்தரின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்’ என்று முஸ்லிம்கள் வாழ்த்து கூறுகின்றார்கள். இறைவேதம் திருக்குர்ஆனில் 19 வது அத்தியாயம் அன்னாரின் அருமைத் தாயார் மர்யம் -மரியாள்- அவர்களின் பெயரால் அழைக்கப்படுகின்றது. அந்த அத்தியாயத்தின் 22-26 வசனங்கள் இயேசுவின் பிறப்பைப் பற்றி பேசுகின்றது.
இதோ இறைமறையின் வார்த்தைகள்…
22. பின்னர் கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார்.
23. பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. ”நான் இதற்கு முன்பே இறந்துஇ அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?” என்று அவர் கூறினார்.
24. ”கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்” என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.
25. ”பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்” (என்றார்)
26. நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் ”நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்” என்று கூறுவாயாக.
திருமறைக்குர்ஆன் குறிப்பிடுகின்ற பேரீச்சம் பழம் உதிரக்கூடிய காலம் கோடையின் பிற்பகுதியாகும்.
எனவே, திருக்குர்ஆன் மற்றும் பைபிள் இயேசுவின் பிறப்பு குறித்து ஒத்தகருத்தையே –கோடை காலத்தின் இறுதிப்பகுதி- கூறுகின்றது. மாறாக, கிறிஸ்த்தவ அன்பர்கள்களால் கிறிஸ்மஸ்கொண்டாடப்படுகின்ற டிசம்பர் 25ம்நாள், என்பது பைபிள் மற்றும் திருக்குர்ஆனுக்கு எதிரானது.
இறுதியாக, கிறிஸ்மஸ் பண்டிகை -டிசம்பர் 25- என்பது இயேசுவுக்கு தெரியாத, ஆதிக்கிறிஸ்த்தவர்கள் அறியாத, பைபிள் கூறாத ஓருவிடயமாகும். ஆதிக் கிறிஸ்த்தவர்கள் டிசம்பர் 25 என்பது ரோமானிய சூரியக்கடவுளான மித்ராவின் பிறந்தநாள் என்றுதான் அறிந்து வைத்திருந்தனர். எனவே, டிசம்பர் 25 அன்று புறஜாதிப் பண்டிகையான சூரியக் கடவுள் மித்ராவின் பண்டிகையையே கிறிஸ்த்தவர்கள் கொண்டாடுகின்றனர். உண்மைக் கிறிஸ்த்தவர்கள் சிந்திப்பார்களா?
பைபிள் -1 தெசலோனிக்கேயர் அதிகாரம்: 5 வசனம் : 21 கூறுகின்றது.
‘எல்லாவற்றையும் சோதித்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்’
துணை நின்றவை:
1.விக்கிபீடியா மற்றும் வலைத்தளங்கள்
2. இயேசு நாதர்- மறைக்கப்பட்ட உண்மைகள் ஆசிரியர்- கேப்டன் அமிருத்தீன்

நன்றி:islamkalvi.com

Wednesday, November 16, 2011

மாலேகான் குண்டுவெடிப்பு- 5 வருட சிறைவாசத்திற்குப் பின்னர் 7 குற்றவாளிகள் இன்று விடுதலை


சமநிலை சமுதாயத்தின் சகோதரர்களே ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்து விடலாம் ஆனால் ஒரு நிரபராதிகள் கூட தண்டிக்கப் பட கூடாது என்று என்று சொன்ன காந்தியடிகள் பிறந்த மண்ணில்தான் நாம் இருக்கின்றோமா என்று என்ன தோன்றுகின்றது எந்த வித குற்றமும் செய்யாமல் ஐந்து வருடம் சிறை வாசம் அனுபவித்துவிட்டு இன்று ஏழு பேர் ஜாமீனில் வெளிவந்து உள்ளனர். ஐந்து வருடத்திற்கு பிறகு இவர்கள் அப்பாவிகள் என்றும்,ஆர்.எஸ்.எஸ்.அமைப்பைச் சேர்ந்த சாமியார்  அசிமானந்த் உள்ளிட்டோருக்குத்தான் இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளது. எனவே அவர்களையே தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று
சிபிஐ பரிந்துரைத்து உள்ளது. சரி ஐந்து வருடகாலம் பிறந்த கை குழந்தையை விட்டு விட்டு போன வேதனைக்கு யார் பதில் சொல்வது,இழந்த மான மரியாதையை யார் திருப்பி தருவது தங்கள் மேல் விழுந்து சமூகத்தின் கேவலமான பார்வைக்கு யார் பதில் சொல்வது என்று இவர்கள் மனம் துடிக்காதா?

 இது போன்ற அவல நிலைகள் இனியும் நடைபெறாமல் இருக்கவேண்டும் என்றால் ஒரு சமூகத்தின்(இஸ்லாம்) மீது தவறுதலான கருத்தியலை பதியவைத்து கொண்டு எங்கே குண்டு வெடிப்பு நடந்தாலும் இந்த சமூகத்தில் இருந்து நான்கு பேரை கைது செய்வது அதுவும் சம்பவம் நடந்த சில மணி நேரங்களில். பிறகு யாரோ ஒருவர் அனுப்பிய ஒரு மின் அஞ்சலை வைத்து கொண்டு இந்த இஸ்லாமிய அமைப்பு இதற்கு பொறுப்பு ஏற்றுகொண்டது என்று ஊடகத்துறைக்கு அறிக்கை விடுவது இது போன்று இல்லாமல் அரசுத்துறையும் ஊடகத்துறையும் சமூப் பொறுப்போடு நடந்து திறந்த மனதோடு குற்றத்தின் அனைத்து பகுதிகளையும் அலசி ஆராய்ந்து உண்மை குற்றவாளிகளை அவர்கள் எந்த மதமாக இருந்தாலும் சரி எவ்வளவு பெரிய பதிவியில் இருந்தாலும் சரி அவர்கள் தண்டிக்க பட வேண்டும்.
அப்பொழுதுதான் மக்களின் மனதில் நம்பிக்கை கீற்றை பதிக்க முடியும்.
 இனியாவது யோசிக்குமா அரசுத்துறையும் ஊடகத்துறையும்?
கீழே இது தொடர்பாக தட்ஸ்தமிழ் இணையத்தில் வெளிவந்த செய்தி கொடுக்கப்பட்டுள்ளது

மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரில் 7 பேர் இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். 5 வருட சிறைவாசத்திற்குப் பின்னர் அவர்கள் வெளியே வந்துள்ளனர்.

கடந்த 2006ம் ஆண்டு மாலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக மாலேகானைச் சேர்ந்த நூர் உல் ஹூடா ஷம்சுதிஹோ அன்சாரி, ஷபீர் அகமது மசியுல்லா, ரயீஸ் அகமது, டாக்டர் சல்மான் பார்சி, டாக்டர் பரூக் மக்தூமி, முகம்மது அலி, முகம்மது ஜாஹித், ஆசிப் பஷீர் கான், அப்ரார் அகமது சயீத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு சிமி அமைப்புடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 5 வருடமாக இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்.அமைப்பைச் சேர்ந்த சாமியார் அசிமானந்த் கைது செய்யப்பட்டது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. மேலும், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் வலது சாரி தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ மீண்டும் புலனாய்வு செய்தது.

இதைத் தொடர்ந்து என்ஐஏவுக்கு அது ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள 9 பேரும் அப்பாவிகள். அவர்களுக்குப் பதிலாக இந்த ஆண்டு தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட அசிமானந்த் உள்ளிட்டோருக்குத்தான் இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளது. எனவே அவர்களையே தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று அது பரிந்துரைத்தது.

இதையடுத்து 9 பேரும் ஜாமீன் கோரி இந்த மாத தொடக்கத்தில் மனு செய்தனர். அதற்கு என்ஐஏ ஆட்சேபிக்கவில்லை.

இதையடுத்து அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது. இருப்பினும் 9 பேரில் முகம்மது அலி மற்றும் ஆசிப் கான் ஆகியோருக்கு 2006ம் ஆண்டு நடந்த மும்பை ரயில் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக வழக்கு உள்ளதால் அவர்களுக்கு மட்டும் விடுதலை கிடைக்கவில்லை.

ஜாமீன் வழங்கப்பட்ட 7 பேரும் இன்று சிறையிலிருந்து வெளியே வந்தனர். அவர்களை அவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர். அவர்களில் ஒருவரான டாக்டர் மக்தூமி, சிறைக்குப் போனபோது அவரது குழந்தைகளுக்கு மிகவும் சிறிய வயது. கடந்த 5 வருடங்களாக அவர்கள் தந்தையைக் காண முடியாமல் தவித்துப் போயிருந்ததாக மக்தூமின் மனைவி தெரிவித்தார்.

அதேபோல இன்னொரு டாக்டரான சல்மான் பார்சியின் மனைவி நபீசா அன்சாரி கூறுகையில், எனது கணவர் கைது செய்யப்பட்ட நாள் முதல் அக்கம்பக்கத்தினரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானோம். அந்த அவமானத்தை சொல்லில் சொல்ல முடியாது. இப்போது நீதி கிடைத்துள்ளது. அனைவரின் கேள்விகளுக்கும் பதிலும் கிடைத்துள்ளது. இதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறோம் என்றார்.

தற்போது விடுதலையாகியுள்ள 7 பேரும், தலா ரூ. 50,000 ரொக்க ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். இவர்கள் வெளிநாடுகளுக்குப் போகக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.


நன்றி:thatstamil.oneindia.in

http://tamil.oneindia.in/news/2011/11/16/malegaon-blasts-case-after-five-years-in-jail-aid0091.html

Friday, November 11, 2011

ஈரான், வெனிசூலா, கியூபா, பாகிஸ்தான்...


தலைப்பில் என்ன வேடிக்கை என பார்க்கிறீர்களா? இரு வாரங்களாக தெற்கு ஆசிய நிகழ்வை கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் தலைப்பின் பொருள் புரியும்.

அமெரிக்கா தொடர்ந்து மூக்கறு படும் நேரம் இது.. ஐக்கிய நாடுகள் அவையில் பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அந்தஸ்து கோரும் தீர்மானம் தொடர்பான கருத்துக் கணிப்பில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தனித்து விடப்பட்டது. அமெரிக்க & இஸ்ரேலிய நிலைபாட்டுக்கு மிகக்குறைந்த அளவே ஆதரவு கிடைத்தது. அது முதல் அதிர்ச்சி.


அமெரிக்காவின் தீவிர ஆதரவாளரான, அமெரிக்க கொள்கை முரசு அண்ணன் மன்மோகன்சிங் ஐ.நா.வில் வைத்து அமெரிக்காவைக் காய்ச்சி எடுத்தார். பாலஸ்தீன விஷயத்தில் ஆதரவு தெரிவித்ததோடு ஆப்கா னிஸ்தான், இராக் மற்றும் லிபியா விவகாரத்தில் பெயர் குறிப்பிடாமல் அமெரிக்காவை பிளந்து கட்டினார். அது அமெரிக் காவுக்கு மற்றுமொரு அதிர்ச்சி.


இந்த இரண்டு அதிர்ச்சிகளையும் விட அமெரிக்கா சந்தித்த மிகப்பெரிய அதிர்ச்சி நமது அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து புறப்பட்டதுதான். இந்த அதிரடி, முன்கூறப்பட்டவைகளை விட கூடுதல் வாட்ஸ் அதிர்ச்சி களை அமெரிக்காவுக்கு வழங்கியது.

ஆப்கானிஸ்தானில் செயல்படும் 'ஹக்கானி நெட்வொர்க்' என்ற பெயரில் செயல்படும் கிளர்ச்சிக் குழுக்களை வளர்த்து விடுவதே பாகிஸ்தான் தான் என அமெரிக்க ராணுவத் தலைமைத் தளபதி மேக் முல்லன் தெரிவித்த கருத்துக்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து சுடச்சுட பதிலடி கிடைத்தது.

அது என்ன ஹக்கானி டெரரிஸ்ட் குரூப். அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய சக்திக ளின் இலக்கணப்படி உள்நாட்டில் உதித்த போராளிகள் அந்த மண்ணுக்காகப் போராடி வரும் குழுக்கள் தீவிரவாத அமைப்புகள் என்றும் ஆனால் மேற்கு நாடுகளில் இருந்து படையெடுத்து ஆக்கிரமிக்கும் படைகள் அங்கு எத்தனை அராஜகங்கள் நடத்தினாலும் அது தீவிரவாதம் இல்லை; ஜனநாயக மீட்பர்கள் என்ற கேனத்தன வாதம் அமெரிக்க அடிவருடி ஊடகங்களால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் காமெடிக் காட்சிகள் ஒருபுறம் இருக்க, பாகிஸ்தான் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட பதிலடி அமெரிக்கால் வெகு காலத்திற்கு மறக்க முடியாது என்பது உண்மை.


ஆப்கானிஸ்தானில் ஹக்கானி அமைப்புக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ தொடர்ந்து உதவி வருகிறது. அதனை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா கூறியது. இதற்கு பதில் அளித்த ஹீனா ரப்பானி, அமெரிக்காவை கடுமையாக விமர்சிக்கும் ஈரான், வெனிசூலா, கியூபா நாடுகளின் தலைவர்கள் பிரயோகிக்கும் வாசகங்களைப் போல கடுமையான வாசகங்களை அமெரிக்காவுக்கு எதிராகப் பிரயோகித்தார்.


அதாவது ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்த போது சோவியத்துக்கு எதிராக அமெரிக்கா முஜாஹிதீன்களை வளர்த்துவிட்டது. உண்மையில் ஹக்கானி நெட்வொர்க்கை வளர்த் தது பாகிஸ்தானா? அமெரிக் காவா-? என்று ஹீனா ரப்பானி ஆவேசமாக கேட்டார். ஹக்கானி நெட்வொர்க்கை உருவாக்கியது அமெரிக்கா தான் என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இது பாகிஸ்தானிடம் இருந்து அமெரிக்கா எதிர்பார்க்காதது.

பாகிஸ்தான் உறவை அமெரிக்கா முறித்துக் கொள் வதால் பாகிஸ்தானுக்கு ஒன்றும் இழப்பில்லை; அமெரிக்கா பெரும் இழப்பை சந்திக்க வேண்டி யதிருக்கும் என போட்டுத் தாக்கி னார்.

அமெரிக்கா, பாகிஸ்தானின் பொறுமையை அளவுக்கு மீறி சோதித்துப் பார்க்கிறது. அதனை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்; எங்களை மீண்டும் மீண்டும் சீண்டினால் பேச்சுவார்த்தைகளை படிப்படியாக குறைத்துக் கொள்வோம் என்றும் அதிரடியாக ஹீனா ரப்பானி கொளுத்திப் போட்ட பட்டாசு அமெரிக்காவை ஆத்திரம்கொள்ள வைக்கும் அளவில் இருந்தது.

உலகிலேயே தீவிரவாத அமைப் புகளுடன் அதிக தொடர்புள்ள ஒரே அமைப்பு அமெரிக்காவின் சி.ஐ.எ என்றும் அவர் குற்றம் சாட்டினார்.அமெரிக்கா ஒரே ஒரு செப்டம்பர் 11 தாக்குதலை மட்டுமே சந்தித்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் செப்டம்பர் 11 தாக்குதல்களைப் போல இதுவரை 311 தாக்குதல்களை சந்தித்துள்ளது.


பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சு அமெரிக்க பாகிஸ்தான் உறவில் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, அமெரிக்கா தரப்பில் பதிலடி எதுவும் அறிவிக்கப்படாத நிலை யில் பாகிஸ்தானில் தொடர்ந்து அதிரடி காட்சிகள் அரங்கேறியுள் ளன.


பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹீனா ரப்பானியின் கருத்துக்கள் பாகிஸ்தான் ஆள் வோரின் சொந்தக் கருத்தாக இருக்க முடியாது. பாகிஸ்தானாவது அமெரிக்காவை முறைத்துக் கொள்வதாவது? இளம் கன்று பயம் அறியாது என்பதைப்போல இளம் அமைச்சர் அதீத உற்சாகத்தில் அமெரிக்காவை வம்புக்கு இழுத்திருக்கிறார். அவரது இந்த ஆர்வக்கோளாறு செயலுக்காக பிரதமர் யூசுப் ரசா கிலானியிடம் செமத்தியாக வாங்கி கட்டிக்கொண்டார் தெரியுமா? என்கிற பாணியில் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக உலகெங்கும் உள்ள அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் (நம் தமிழ்நாட்டு ஊடகங்கள் உள்பட) பல ஊடகங் கள் மேற்குறிப்பிட்ட கற்பனைக் காட்சிகளை பரப்ப முயன்றன.இதனை உலகம் நம்பத்தான் வேண்டும் என சர்வதேச சமூகம் எண்ணிய வேளையில் அடுத்த அதிரடிக் காட்சி பாகிஸ்தானில் அரங்கேறியது.

சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் மெங் ஜியாங் ஜூ கடந்த வாரம் பாகிஸ்தான் விஜயம் செய்திருந்தார். சீன அமைச்சருக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் யூசுப்ரசா கிலானி ஆற்றிய வரவேற்புரையிலும் அமெரிக் காவை வெறுப்பு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தன.

சீன நட்பு மலைகளை விட உயரமானது; கடலை விட ஆழமானது; இரும்பை விட வலுவானது; தேனைவிட இனிமையானது என தெரிவித்தார். அமெரிக்க மற்றும் இஸ்ரேல் நாடுகளின் நண்பராக கருதப்படும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், ‘‘சீனாவின் நண்பர்கள் எமக்கு நண்பர்கள்; சீனாவின் எதிரிகள் எங்களுக்கும் எதிரிகள்’’ என்றார்.

ரஹ்மான் மாலிக்கின் இந்தக் கூற்று அமெரிக்காவை நிச்சயம் அதிர்ச்சியில் மூழ்கடித்திருக்கும். பாகிஸ்தான் மக்கள் பொதுவாக ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் ஏகாதிபத்திய சக்திகள் பாகிஸ்தானின் சில பொம்மை அரசியல் சக்திகளை கைக்குள் போட்டுக்கொண்டு ஆட்சிகளை கைப்பற்றி உலக வரைபடத்தை தப்பும் தவறுமாக மாற்ற முயன்றது. அதில் கடந்த 60 ஆண்டுகளாக வெற்றியும் பெற்ற அமெரிக்கா, தற்போது தோல்விப் பள்ளத்தாக்கில் துவழ்கிறது.

பாகிஸ்தானுக்கு முன்பாகவே இந்திய மக்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என்பதை மறுக்க முடியாது. இந்தியாவில் பாஜகவைத் தவிர அனைத்துக் கட்சிகளுமே அமெரிக்க எதிர்ப்பை உரம்போட்டு வளர்த்த கட்சிகள் என்பது மிகையல்ல.கடந்த சில ஆண்டுகளாக தீவிர அமெரிக்க ஆதரவுப் படையின் கொள்கை சிங்கமாக(?) கருதப்பட்ட மன்மோகன் சிங் & ஐநாவில் கர்ஜித்த கர்ஜனைகள் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய பாகிஸ் தான் நாடுகள் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக அணிசேர்ந் தால் தெற்காசிய பிராந்தியத்தில் புதியதொரு மாற்றம் ஏற்படலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும் ஏகாதிபத்திய சக்திக்கு எதிரான பாகிஸ்தானின் சீற்றம் அந்நாட்டை ஈரான், வெனிசூலா நாடுகளின் வரிசையில் எதிர்காலத்தில் இடம்பெறச் செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்போதைக்கு பாராட்டி வைப்போம்.


நன்றி:http://tmmk.info

Tuesday, November 8, 2011

ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம் : ஆதார் அடையாள அட்டை!

! இந்திய குடிமக்களுக்காக இலவசமாக வழங்கப்படும் 12 டிஜிட் எண் கொண்ட ஆதார் அடையாள அட்டையை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். பாஸ்போர்ட் இருக்கிறதோ இல்லையோ இந்த கார்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம்.

 27.10.2011 முதல் தலமை தபால் நிலையத்தில் மட்டும் உங்கள் அப்ளிகேஷனைபுர்த்தி செய்து, உங்கள் பத்து விரல் கை ரேகை பதிந்து, புகைப்படம் எடுத்த பிறகு உங்களுக்கு தற்காலிக ஐடி கொடுப்பார்கள். 30 - 60 நாட்களுக்குள் வீட்டுக்கு உங்களுக்கு ஒரிஜினல் கார்டு கிடைக்கும். உங்களுடைய கார்டு ஸ்டெட்டஸை ஆன்லைன் மூலம் உங்களிடம் ஒருக்கும் தற்காலிக ஐடி மூலம் தெரிந்து கொள்ளலாம். இதற்க்கு கட்டணம் ஒன்றும் கிடையாது. இந்த கார்டு மூலம் உங்கள் வங்கி கணக்கும் இனைக்கபடும். இது தான் நமது நாட்டின் பாஸ்போர்ட்டுக்கு அடுத்த பெரிய ஐடி. இதை வைத்து நேபாலுக்கு கூட பாஸ்போர்ட் இல்லாமல் செல்லலாம்.

 நவம்பர் 21-ம் தேதி முதல் 31 மாவட்டங்களில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில் அடையாள அட்டை பதிவுப் பணி தொடங்கவுள்ளது.

 கார்டு பெற அப்ளிகேஷனை இங்கு டவுன்லோடு செய்யலாம். -
http://uidai.gov.in/images/FrontPageUpdates/uid_download/enrolmentform.pdf கார்டு பெற

தேவையான டாகுமென்ட்ஸ் இங்கு பார்த்து தெரிந்து கொள்ளலாம். -http://uidai.gov.in/images/FrontPageUpdates/proof_of_identity_documents_supported.pdf

நன்றி:http://www.athikkadai.co.cc

Saturday, November 5, 2011

இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்



அஸ்ஸலாமு அலைக்கும்
 பிரிவினை நீங்கி ஓரணியில் இந்த சமுதாயத்தை அல்லாஹ் ஒன்று சேர்ப்பானாக 
நமது சிந்தைகள் தெளிவு பெறட்டும் 
சீர்திருத்தங்கள் மலரட்டும் 
இயக்கம், கொள்கை, என்று பிரிந்து நிற்காமல் 
இஸ்லாத்தை நெஞ்சில் வைத்து, 
இறை  அச்சத்தை உயிரில் கலந்து,
இன்றே இணைந்திடுவோம், ஓரணியில் திறன்டிடுவோம்
இம் மண்ணுலகின் மாந்தர்களை மகிழ்வோடு வைத்திருக்க 
இஸ்லாத்தின் கொள்கைகளை இயல்பாக கொடுத்திடுவோம் 
இறை தூதர் போதனையை வாழ்வோடு கலந்திடுவோம் 
வறுமை நீங்கி, நோய் நொடி இல்லாத, இறை அச்சமும் சமுதாய சிந்தனையும் நிறைந்த 
நல்லதோர் வாழ்வை அல்லாஹ் 
நம் அனைவருக்கும் தந்தருள்வானாக ஆமீன்
அனைவருக்கும் நாச்சியார்கோவில் முஸ்லிம் ஜமாத்தின் 
இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்


Thursday, November 3, 2011

ஈமானியப் பலஹீனத்தின் வெளிப்பாடுகள்

அளவில்லா கருணையும் இணை இல்லா கிருபையும் உடைய அல்லாஹ் வின் திரு பெயரால் ஆரம்பம் செய்கின்றேன், எல்லாப் புகழும் அல்லாஹுவுக்கே உரித்தானவை, இன்னும் ரசூலே கரீம் சல்லல்லாஹு அலைஹிவசலம் அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும், இன்னும் அவர்களைப் பின்பற்றிய அனைவர் மீதும் உண்டாவதாக, ஆமீன் என்று கூறி என்னுடைய சிறிய தொகுப்பை தருகிறேன், இன்ஷா அல்லாஹ்…

 முதலில் நம்முடைய ஈமானின் நிலையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.. 

 தொழுகையிலும் சரி, அல்லாஹ்வின் திருமறையை ஓதுவதிலும் சரி, சஹாபாக்கள் உணர்ந்த சுவையையும் லயிப்பையும் நாம் எப்போதாவது உணர்ந்த்திருக்கின்றோமா? நம்மில் மிக குறைவானவர்கள் சில நேரத்தில் உணர்ந்திருக்கலாம். ஆனால், இதுபோன்ற கதைகளைக் கேட்டுப் பூரித்துப் போனதைத் தவிர வேறெதையும் காணாதவர்கள் தான் அதிகம்

 நாம் தொழுகின்றோம், நோன்பு நோற்கின்றோம், தானம் செய்கின்றோம், ஹஜ் செல்கின்றோம் , சஹாபாக்கள் செய்த எல்லா இபாதத்களிலும் ஈடுபடுகின்றோம். ஆனால், அவர்களது இபாதத்துகளில் காணப்பட்ட ஈரத்தை, பசுமையை நாம் காண்பதில்லை.

 நாம் குடும்ப வாழ்கை மேற்கொள்கிறோம். கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகின்றோம். சமூக உறவுகளில் ஈடுபடுகின்றோம். ஆனால், இவற்றை செயல்படுத்துகின்ற போது சஹாபாகளில் காணப்பட்ட அழகையும் நேர்மையையும் நம்மிடம் காண முடியவில்லை.

 இப்னு மசூத்(ரலி) அவர்கள் தனது மாணவர்களைப் பார்த்துக் கூறினார்: சஹாபாக்களை விடவும் நீங்கள் அதிகமாக தொழுகையில் ஈடுபடுகின்றீர்கள், நோன்பு நோர்கின்றீர்கள், ஆனால் அவர்கள் உங்களை விட சிறந்து காணப்பட்டார்கள். காரணத்தை வினவியபோது, அவர்கள் உங்களை விடவும் உலகில் பற்றற்றவர்களாக இருந்தார்கள். உங்களை விடவும் மறுமையில் ஆசை வைத்தவர்களாக இருந்தார்கள் என்றார்கள்.

 அபூ பக்கர்(ரலி) அவர்களைப் பற்றி சில சலபுகள் கூறுகின்றபொழுது, அபூ பக்கர்(ரலி) அவர்கள் அதிகமாக தொழுகையாலும் நோன்பாலும் எங்களை மிகைக்கவில்லை. மாறாக அவரது உள்ளத்தில் ஆழப் பதிந்த ஈமானால்தான் எங்களை மிகைதிருந்தார் என்றனர்.

 எனவே புறச் செயல்களில் பெரிய வேறுபாடு காணப்படாவிட்டாலும் அகச் செயல்களில் வேறுபாடு இருந்திருக்கிறது. அவர்கள் இபாதத்தையும் சரி குடும்ப வாழ்கையையும் சரி சமூக வாழ்கையையும் வியாபாரத்திலும் சரி சுவைத்துச் செய்துருக்கிரார்கள். அதில் அழகும் நேர்மையும் பிரதிபலித்திருகிறது….

 சகோதரர்களே இங்கே நம்முடைய நிலையை அலசி பார்க்க வேண்டும்…

 ஈமானியப் பலஹீனத்தின் வெளிப்பாடுகள் சில 

 ஒருவனது செயல்களை வைத்து அவனது ஈமானின் பலம் பலஹீனம் பற்றி அளவிட முடியும். ஈமான் பலஹீனமடையும் போது, அதன் வளிப்பாடுகள் எவ்வாறு இருக்க முடியும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம் இன்ஷா அல்லாஹ்… 

 இபாதத்களை அதற்குரிய வடிவில் நிறைவேற்றுவதில் கவனக் குறைவாக இருப்பார். ஜமாஅத் தொழுகைக்கு தாமதமாகியே வருவார் அல்லது ஜமாஅத்திற்கு வரவே மாட்டார். சில சமயம் பள்ளிவாசலுக்கு வரமாட்டார். தொழுகைகளிலும் பல எண்ணங்களுடனேயே இருப்பார். இமாம் ஸலாம் கொடுத்தவுடன் தான் சுய நினைவுக்கு வருவார். 

 சுபஹ் தொழுகைக்கு உரிய நேரத்தில் எழ மாட்டார். சூரியன் உதித்த பின் எழுந்து கொண்டாலும் அதற்காக கொஞ்சமும் கவலைப்படாமல் சாதாரணமாகவே தனது கடமைகளைச் செய்து கொண்டிருப்பார்.. 

 ஜும்ஆத் தொழுகைக்கு இமாம் மிம்பரில் ஏறிய பிறகே போவார். அல்லது தொழுகைக்காக தக்பீர் கட்டும் நேரத்தில் அவசரமாகப் போய் இணைந்து கொள்வார். நேர காலத்துடன் போனாலும் குத்பாவைக் கேட்பதை விட்டு நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பார்.. சுன்னத்தான அமல்களில் ஈடுபாடு காட்ட மாட்டார். அவற்றை விடுவது குற்றமில்லை என இருந்துவிடுவார். கியாமுல் லைல், ழுஹா போன்ற தொழுகையையோ, சுன்னத்தான ஒரு நோன்பு நோர்பதையோ காணவே முடியாதிருக்கும்.. 

 அல்லாஹ்வின் திருமறை ஓதுவதைக் காணமுடியாதிருக்கும். அப்படியே ஓதினாலும் நாவால் மட்டும் தான் உள்ளத்தில் எந்தவிதப் பாதிப்பும் இருக்காது. சந்தர்ப்ப துஆக்கள் ஒதுபவராக அவரைக் காணமுடியாது. அல்லாஹ் விடத்தில் கையேந்தி துஆக் கேட்கும் பண்பு இருக்காது.

 ஈமான் பலஹீனப்படும்போது இவற்றையும் இன்னும் பலவற்றையும் காணலாம். தனிமனிதன் , சமூகம், அரசு எல்லாவற்றிலும் இதன் பாதிப்புகள் இருக்கும். தனிமனிதனோ, சமூகமோ, அரசோ வீழ்வதற்கு இதுவே காரணமாக இருக்கும். 

 புகழ் அனைத்தும் அல்லாஹுவுக்கு உரியது, பிழைகள் எதுவும் இருந்தால் அல்லாஹ் என்னை மன்னிபானாக என்று தொகுத்து என்னுடைய இந்த தொகுப்பை நிறைவு செய்கிறேன்..

 நன்றி அஷ்ஷெய்க் அக்ரம் அப்துல் சமத் (நளீமி)

நன்றி:readislam.net

Friday, October 28, 2011

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? – முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி!

கட்டுரைப் பற்றிய சிறு குறிப்பு: – இது முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono அவர்கள் நான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் என்று விளக்கிய வீடியோ தொகுப்பிலிருந்து எழுத்தாக்கம் செய்யப்பட்டதாகும்.
வீடியோ வெளியீட்டாளர் : Truth Vision World wide


நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? – ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono
நான் ஆறு வயதாக இருக்கும் போது கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்றுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் பற்றி பயில்வதற்காக அனுப்பப்பட்டேன். என்னுடைய படிப்பிற்கான முழு செலவுகளையும் அந்த தேவாலய நிர்வாகவே பொறுப்பு ஏற்றுக் கொணடிருந்தது. ஏனென்றால் என்னுடைய பெற்றோர்கள் இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய சர்ச்சுகளில் ஒன்றின் அமைப்பாளர்கள் (Organisors) ஆவார்கள்.
பின்னர் பருவ வயதில் தேவாலயத்தைச் சேர்ந்த “Liaision Maria” என்ற கல்வி நிறுவனத்தில் சேர்ந்தேன். Maria என்பது ஈஸா (அலை) அவர்களின் தாயார் மர்யம் (அலை) அவர்களைக் குறிக்கும். இந்த நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்னவெனில் “Stray Sheeps” என்று சொல்லப்படக் கூடிய “காணாமல் போன ஆடுகளை” தேடுவதாகும். “காணாமல் போன ஆடுகள்” என்று அவர்கள் குறிப்பிடுவது, நம்முடைய உணவுக்காகவும் ஈதுல்-அல்ஹா பெருநாள் குர்பானி கொடுப்பதற்காக அறுக்கிறோமே அந்த ஆடுகளை அல்ல. மாறாக “காணாமல் போன ஆடுகள் என்று அவர்கள் குறிப்பிடுவது, “கிறிஸ்தவர்களல்லாத மற்றவர்களை”. அதாவது இந்த பள்ளி வாசலில் குழுமியிருக்கும் நம்மைப் போன்ற முஸ்லிம்களை அவர்கள் “காணாமல் போன ஆடுகள் என்று குறிப்பிடுகிறார்கள். நம்மையெல்லாம் கிறிஸ்தவர்களாக்கும் ஒரு மிகப்பெரும் செயல் திட்டம் அவர்களிடம் இருந்துக் கொண்டிருக்கிறது.

ஒரு வருடம் கழித்த பிறகு நான், இந்தோனேசியாவில் மிக அதிக அளவில் றுப்பினர்களையுடைய ஒரு கிறிஸ்தவ அமைப்பின் தலைவியானேன். பின்னர் கன்னியாஸ்திரி ஆவதற்காக ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் சேர்ந்தேன்.

சகோதர சகோதரிகளே! நான் ஒரு முஸ்லிம் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை. நான் கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியது. கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியதிலிருந்து, அல்லாஹ் அவனுடைய அடிமையாகிய எனக்கு நேர்வழி காட்டத் துவங்கினான்.
பின்னர் கிறிஸ்தவ பாதிரியார்கள் படிக்கும் மேற்படிப்பாகிய மதங்கள் மற்றும் தத்துவங்களைப் பற்றிய (Theology & Philosophy) உயர்ந்த படிப்பைப் படிப்பதற்காக நான் அனுப்பப்பட்டேன். அங்கு நான் மதங்களைப் பற்றிய ஒப்பாய்வு (Comparative Religion) பாடங்களைப் படித்தேன். இஸ்லாத்தைப் பற்றி பயிற்றுவிக்கப்பட்டேன். ஆனால் உண்மையான இஸ்லாத்தைப் பற்றி அல்ல! இஸ்லாம் என்பது மிக மோசமான மதம் என்று பயிற்றுவிக்கப்பட்டேன்.

“இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் இந்தோனேசியாவிலுள்ள முஸ்லிம்களைப் பாருங்கள்” என்று எங்களுக்கு விளக்கினார்கள்.
இந்தோனேசியாவில்,

- ஏழைகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? – இஸ்லாம்
- முட்டாள்களாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? – இஸ்லாம்
- வெள்ளிக் கிழமை தொழுகையின் போது தங்களின் காலனிகளை தொலைக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? – இஸ்லாம்
- ஒற்றுமையாக இருப்பதற்கு மறுக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? – இஸ்லாம்

- தீவிரவாதிகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? – இஸ்லாம்
இவர்களுடைய இத்தகைய தவறான போதனையினால் என்னுடைய நன்பர்கள் அனைவரும் “இஸ்லாம் என்பது ஒரு மிக மோசமான மதம்” என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள். ஆனால் அதே சமயத்தில் நான் அவர்கள் எடுத்திருக்கின்ற முடிவு உண்மைக்கு புறம்பானது என்றும் தவறானது என்றும் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களிடம், “நாம் இந்தோனேசியாவை மட்டும் பார்க்கக் கூடாது, மற்ற நாடுகளில் உள்ள நிலவரங்களையும் நாம் பார்க்க வேண்டும்” என்று கூறினேன்.
உதாரணமாக,

பிலிப்பைன்ஸ் நாட்டில், ஏழைகளாகவும், படிப்பறிவில்லாதவர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களுடைய மதம் இஸ்லாம் அல்ல!.அவர்களெல்லாம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.

மெக்ஸிகோ ஒரு ஏழை நாடு. அந்நாட்டில், குற்றவாளிகளாகவும், திருடர்களாகவும், குடிகாரர்களாகவும், கற்பழிப்பு செய்பவர்களாகவும், சூதாட்டக்காரர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர். அவர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்!
அயர்லாந்து குடியரசு நாடு. இந்த நாடு வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கிடையே தீர்க்க இயலாத உள் நாட்டு பிரச்சனையில், சச்சரவில் சக்கித் தவிக்கும் ஒரு நாடு. இந்தப் சச்சரவில் ஒரு முஸ்லிம் கூட இல்லை. இந்தப் சச்சரவு நடப்பது கத்தோலிக்க மற்றும் புரோட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்களுக்கிடையில் தான். அவர்கள் தமக்குள்ளாகவே சன்டையிட்டுக் கொண்டு கொலை செய்கின்றார்கள். ஐரோப்பிய சமூகம் அவர்களை “அயர்லாந்தின் தீவிரவாதிகள்” என்று கருதுகிறது. அவர்கள் “ஐரோப்பிய தீவிரவாதிகள்” என்றும் வகைப்படுத்தப்படுகிறார்கள்.

இத்தாலியைப் பாருங்கள்! போதைப் பொருள் கடத்துபவர்கள், சூதாட்டக்காரர்கள் – இவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர். அனைத்து மாஃபிய்யாக் கும்பல்களும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.
அப்போது நான் என்னுடைய மேலதிகாரியான பாதிரியாரிடம், “இஸ்லாம் ஒரு மோசமான மதம் என்று நிரூபிக்கப்படவில்லையே” கூறினேன். அப்போது நான், இஸ்லாத்தை, இஸ்லாமியர்களிடமிருந்தே படிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன் வைத்தேன். அதற்கு, “நான் இஸ்லாத்தின் பலவீனங்களைப் பற்றி மட்டும் படிக்க வேண்டும்” என்ற கட்டுப்பாட்டுடன் அனுமதியளிக்கப்பட்டென்.

நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக “இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான்” என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற “திரித்துவக் கடவுள் கொள்கைக்கு” (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது. ஆனால் இரவில் நான் குர்ஆனைப் படித்தபோது (சூரா இக்லாஸ்), இறைவன் ஒருவனே! என்றிருக்கிறது. ஆனால் அன்று காலையிலோ தேவாலயத்தில் மதங்களைப் பற்றிய பாடத்தை ரெவ. பாதிரியார் அவர்கள் போதித்த போது “கடவுள் ஒருவரே! ஆனால் மூவரில் இருக்கிறார் (திரித்துவம் – Trinity) என்று போதித்தார். அதனால் அந்த இரவில் ஒரு சக்தி என்னை மேலும் குர்ஆனைப் படிக்க உந்தியது. என் ஆழமான உள் மனது “இறைவன் ஒருவனே! என்றும் மேலும் இது (குர்ஆன்) உண்மையானது தான்” என்றும் கூறிற்று.

மறு நாள் காலையில் தேவாலயத்தில் நான் என்னுடைய பாதிரியாரிடம், விவாதித்தேன்.

“கடவுளின் திரித்துவக் கொள்கை” (Trinity of God) என்பது பற்றி எனக்கு சரியாக விளங்கவில்லை என்று அவரிடம் நான் கூறினேன்.
கிறிஸ்தவ கன்னியாஸ்திரியாகிய நான் இதுவரைக்கும் கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி எப்படி விளக்கம் பெறாமல் இருக்கமுடியும் என்பதைப் பற்றி அந்த பாதிரியார் மிகவும் ஆச்சரியமடைந்தார்.

அந்தப் பாதிரியார் முன் வந்து ஒரு முக்கோனத்தை வரைந்தார். பின்னர் அவர், ஒரு முக்கோனத்திற்கு மூன்று மூலைகள் (three corners) இருப்பதைப் போல, ஒரு கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்று கூறினார்.

அதற்கு நான், உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும். எனவே கடவுள் மூவரை வைத்து சமாளிப்பது என்பது கடினம். எனவே கடவுள் மற்றொருவருக்கு தேவையுடைவராக இருக்க சாத்தியக்கூறு இருக்கிறதல்லவா? இது சாத்தியம் தானே? என்று கேட்டேன்

அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார் ”இதற்கு சாத்தியமே இல்லை” என்று கூறினார். அதற்கு நான், இது சாத்தியமானதே! கூறி முன்னாள் வந்து, ஒரு சதுரத்தை வரைந்தேன். முக்கோனத்திற்கு மூன்று கோணங்கள் இருப்பதைப் போன்று சதுரத்திற்கு நான்கு மூலைகள் (Four corners) இருக்கின்றனவே என்று கூறினேன்.

அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார், ‘முடியாது’ என்று கூறினார். முன்பு ‘இதற்கு சாத்தியமே இல்லை’ என்று கூறிய அவர், தற்போது ‘முடியாது’ என்று மட்டும் கூறினார்.
நான் கேட்டேன், ஏன்?


அதற்கு பாதியார், ‘இது நம்பிக்கை’. நீ புரிந்துக் கொண்டாயோ இல்லையோ அப்படியே ஏற்றுக்கொள், அப்படியே இதை விழுங்கிவிடு. இதைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே! கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே! இதைப் பற்றி சந்தேகப்பட்டு கேள்வி கேட்டால் நீ பாவம் செய்தவளாகி விடுவாய்! என்று கூறினார்.

இந்த மாதிரியான பதில் எனக்கு கிடைக்கப் பெற்றும் அன்று இரவு குர்ஆனை தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற உறுதியான ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. ஏகத்துவம் குறித்த கடவுள் கொள்கையைக் குறித்து கற்றறிந்த என்னுடைய பாதிரியாருடன் விவாதம் செய்ய விரும்பினேன்.

ஒரு சமயம் நான் என்னுடைய பாதிரியாரிடம், ‘இந்த மேசைகளை உருவாக்கியது யார் என்று கேட்டேன். அதற்கு பாதிரியார் பதிலளிக்க விரும்பாமல் என்னையே பதிலளிக்குமாறு கூறினார்.
அதற்கு நான் ‘ இந்த மேசைகளை உருவாக்கியது “தச்சர்கள்” (Carpenters) என்றேன்.

ஏன்? – பாதிரியார் கேட்டார்.

அதற்கு நான் இந்த மேசைகள் ஒரு வருடத்திற்கு முன்பாகவோ அல்லது நூறு வருடத்திற்கு முன்பாகவோ உருவாக்கப்பட்டவைகள். இவைகள் இன்னமும் மேசைகளாகவே இருக்கின்றன. இந்த மேசைகள் எப்போதும் “தச்சார்களாக” (Carpenters) மாறமுடியாது. மேலும் ஒரே ஒரு மேசை கூட தச்சராக (Carpenter) மாறுவதற்கு ஒருபோதும் முடியாது.

நீ என்ன சொல்ல வருகிறாய்? – பாதிரியார் கேட்டார்.
அதற்கு நான், இந்த பிரபஞ்சத்திலே உள்ள மனிதன் உட்பட உயிருள்ள மற்றும் உயிரற்ற ஒவ்வொன்றையும் கடவுளே படைத்தார். ஒரு வருடத்திற்கு முன்னாள் ஒரு மனிதன் பிறந்தால் அடுத்து வரக் கூடிய நூறு வருடங்களாயினும் அவன் மனிதனாகவே இருப்பான். உலக முடிவு நாள் வரைக்கும் கூட அவன் மனிதனாகவே தான் இருப்பான். ஒரே ஒரு மனிதன் கூட கடவுளாக அவதாரம் எடுக்க முடியாது! மேலும் கடவுளை மனிதனோடு ஒப்பிட முடியாது.

அதற்கு நான் ஒரு உதாரணமும் கூறினேன். ஒரு இராணுவத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களில் ஒருவரை தேர்தெடுத்து அவரை தங்களின் “ஜெனரலாக” தேர்தெடுத்தால் அந்த தேர்வு செல்லாததாகிவிடும். ஏன் அவர்களில் 99 சதவிகிதத்தினர் அவரை தேர்வு செய்திருப்பினும் சரியே!
நீ என்ன சொல்ல வருகியாய்? – பாதிரியார்

அதற்கு நான், “மனிதன் உட்பட இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் கடவுள் படைத்தார். மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை கடவுளாக ஆக்கினால் அந்த தேர்வு செல்லாதது” என்று நான் அந்த பாதிரியாரிடம் விளக்கினேன்.

பின்னர் நான் தொடர்ந்து படித்து வந்தேன். ஒருநாள் நான் என்னுடைய பாதிரியாரிடம், “என்னுடைய ஆராய்ச்சிகளின் படியும், மதங்களைப் பற்றிப் வகுப்புகளில் படித்ததிலிருந்தும் கி.பி. 325 ஆம் ஆண்டில் தான் முதன் முதலாக இயேசு கடவுளாக கருதப்பட்டார்” என்று கூறினேன்.

இவ்வாறு இந்த கன்னிகாஸ்திரி அவர்கள் பலவிதங்களில் அந்த பாதிரியாரிடம் விவாதம் புரிந்ததாகக் கூறினார்கள்.

பலவித ஆராய்ச்சிகளுக்குப் பிறகு தாம் இஸ்லாமே ஏகத்துவத்தை வலியுத்தும் உண்மையான மார்க்கம் என்றறிந்து இஸ்லாத்தை தழுவிய இந்த முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த கன்னிகாஸ்திரி Irena Handono அவர்கள் தற்போது இந்தோனேசியாவில் இருக்கும் Central Muslim Women Movement என்ற அமைப்பின் தலைவியாக இருந்துக் கொண்டு இஸ்லாமிய அழைப்புப் பணியைச் செய்து கொண்டுவருகிறார்.
அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாகவும்.

இதோ இதற்கான வீடியோ 

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - ரோமன் கத்தோலிக்க கன்னிகாஸ்திரி! : பகுதி-1
நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - ரோமன் கத்தோலிக்க கன்னிகாஸ்திரி! : பகுதி-2

நன்றி:http://www.suvanathendral.com







Tuesday, October 25, 2011

முன்னோர்கள் யார்?



முன்னோர்களின் பக்தியில் மூழ்கியிருந்த மக்கள் அல்லாஹ்வின் தூதர்களிடம் தெரிவித்த மறுப்பு!
”எங்கள் முன்னோர்கள் எதில் இருக்க கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்புவதற்காகவும் இப்பூமியில் உங்கள் இருவருக்கும் பெருமை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் எங்களிடம் வந்திருக்கிறீர்களா? நாங்கள் உங்கள் இருவரையும் நம்பிக்கை கொள்பவர்கள் அல்ல என்று கூறினார்கள்। (அல்குர்ஆன்: 10:78)
முன்னோர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றுதலே உண்மையை மறுக்க மனிதனை தூண்டுகிறது!
இவ்வாறே எந்த ஊருக்கும் எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பும் போதெல்லாம் எங்கள் முன்னோர்களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம். நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்கள் என்று அவ்வூரில் சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை. உங்கள் முன்னோர்களை எதில் கண்டீர்களோ அதைவிட நேர்வழியை நான் கொண்டு வந்தாலுமா? எனக் கேட்பீராக! எதனுடன் நீங்கள் அனுப்பப்பட்டீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்களே என்று அவர்கள் கூறினர்.(அல்குர்ஆன்: 43:23-24)
சிலை வணக்கம் முன்னோர், மூதாதையர்களின் தெளிவான வழிகேடு!
”நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன? என்று அவர் (இப்றாஹீம்) தமது தந்தையிடமும் தமது சமுதாயத்திடமும் கேட்டபோது ‘எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம் என்று அவர்கள் கூறினர். நீங்களும் உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள் என்று அவர் கூறினார்.(அல்குர்ஆன்: 21:52-54)
மூதாதையர்களின் மீதான பக்தியே மனிதனை நாசப்படுகுழியில் வீழ்த்துகிறது!
”அல்லாஹ் அருளியதை (குர்ஆனை) நோக்கி வாருங்கள். இத்தூதரை (முஹம்மது நபியை) நோக்கி வாருங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும் என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும் நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவீர்கள்?) (அல்குர்ஆன்: 5:104)
மனிதன் பின்பற்றத் தகுதியானது அல்லாஹ்வின் வேதமும், தூதரின் நடைமுறையுமே!
அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்படும் போது எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம் என்று கூறுகின்றனர். ஷைத்தான் நரகத்தின் வேதனையை நோக்கி அவர்களை அழைத்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவீர்கள்?) (அல்குர்ஆன்: 31:21)
முன்னோர்களின் வழிமுறையை விட மாட்டோம் என் அடம்பிடித்தால்….?
”அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் ‘நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதர் (முஹம்மது நபி)க்கு கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? எனக் கூறுவார்கள். எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர் எனவும் கூறுவார்கள். எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையை அளிப்பாயாக அவர்களை மிகப் பெரிய அளவுக்கு சபிப்பாயாக எனவும் கூறுவார்கள். (அல்குர்ஆன்: 33:66-68)
முன்னோர்கள் யார்?
“பெரியார்கள், முன்னோர்கள்” என்ற வாதத்தில் உள்ள இன்னொரு போலித்தனத்தையுயம் நாம் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்.
“முன்னோர்கள், பெரியார்கள்” என்று கூறுபவர்கள், முன்னோர்கள், பெரியார்கள் என்று குறிப்பிடுவது, நமக்கு 200,300 ஆண்டுகளுக்கு முன் வாழந்தவர்களைத்தான்; சென்ற இதழில் நாம் அடையாளம் காட்டியிருந்தவர்களைத்தான் இவர்கள் முன்னோர், பெரியார் என்று நம்புகின்றனர்.
அண்ணல் நபி(ஸல்) அவர்களிடம் பாடம் பெற்று, அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்ட “மிகச் சிறந்த சமுதாயம்” என்று நபி(ஸல்) அவர்களால் பாராட்டப் பெற்ற “ஸஹாபாக்கள்” இவர்கள் அகராதியில் முன்னோர்கள் அல்லர். மிகச் சிறந்த ஆட்சியை இந்த உலகுக்குத் தந்த “நாற்பெரும் கலீபாக்கள்” இவர்கள் அகராதியில் பெரியார்கள் அல்லர். ‘ஹஜ்ரத்’ என்று பெயர் பெற்ற சிலரும், ‘அப்பா’க்களும், ‘லெப்பை’மாரும் தான் இவர்கள் கண்ணோட்டத்தில் முன்னோர்கள்! 200,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களை “முன்னோர் பெரியோர்” என்று துதிப்பாடும் இவர்கள் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபி(ஸல்) அவர்களின் நல்லறத் தோழர்களை ‘முன்னோர். பெரியோர்’ என்று ஆதாரம் காட்டத் தயாராக இல்லை. காரணம், இது போன்ற “பித்அத்”களுக்கு ஸஹாபாக்களின் நடைமுறையில் இவர்களால் ஆதாரம் காட்டவே முடியாது.
அந்த நபித் தோழர்களிடையே கருத்து வேறுபாடு தோன்றி இருக்குமேயானால் எவரது கருத்து, குர்ஆன், ஹதீஸைத் தழுவி நிற்கின்றதோ அதனையே நாம் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளோம் என்று இருக்க 200, 300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களைக் கண்மூடிப் பின்பற்றுவது எப்படி நியாயமாகும்?
இன்றோ, அந்த ஸஹாபாக்கள் முன்மாதிரியாகக் கொள்ளப்படவில்லை. அதற்கு அடுத்த காலத்தில் வாழ்ந்தவர்கள் கூட முன் மாதிரிகளாகக் கொள்ளப்படவில்லை, எந்தக் காலத்தில் மார்க்கத்தின் பெயரால் ஏமாற்றும், மோசடியும், மூட நம்பிக்கைகளும், போலிச் சடங்குகளும், பொய்யான கதைகளும் உருவாக்கப்பட்டனவோ, அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களை – இத்தனைக்கும் காரணகர்த்தர்களை – இவர்கள் பெரியார்கள் என்று முத்திரை குத்திக் கொண்டாடுகின்றனர், அவர்கள் வழியே, மார்க்கம் என்று எண்ணி ஏமாந்து கொண்டிருக்கின்றனர். இதுதான் மிகப் பெரும் வழிகேடாகும். இத்தகைய தவறான போக்கிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றட்டும்!

நன்றி:readislam.net

Sunday, October 23, 2011

நாச்சியார்கோயில் ஊராட்சியின் தேர்தல் முடிவு





அஸ்ஸலாமு அலைக்கும் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற  

தேர்தலில் நாச்சியார்கோயில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 

போட்டி இட்டவர்கள் மற்றும் வெற்றிபெற்றவர்களின் பெயர் அவர்கள் 

வாங்கிய ஒட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது இந்த செய்தி தமிழக  

அரசின் தேர்தல் துரையின் இணய தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது 

இதன் உடைய இணையதளத்தின் இணைப்பு (link) கீழே 

கொடுக்கப்பட்டுள்ளது 


VP Name:  Nachiyarkoil      Votes Polled:  3537      Valid Votes:  3314      Invalid Votes:  223
Sl.NoNameFather/Husband NameParty NameVotes SecuredStatus
1இளங்கோவன்.ரெரெத்தினம்26Deposit Lost
2கண்ணன்.சுசுப்பிரமணியன்1073Elected
3காமராஜ்.பபக்கிரிசாமி251Deposit Lost
4குப்புசாமி.கோகோவிந்தசாமி887NotElected
5சக்திகுமார்.இராஇராமமூர்த்தி50Deposit Lost
6தர்மராஜன்.மாமாணிக்கம்19Deposit Lost
7துரை பூபதி.துதுரைக்கண்ணு489Deposit Lost
8நெடுஞ்செழியன்.ராராமலிங்கம்34Deposit Lost
9மணிகண்டன்.நாநாரயணசாமி138Deposit Lost
10ராஜ்முகமது.பிபிச்சைக்கண்ணு74Deposit Lost
11ராஜ்மோகன்.நநடராஜன்252Deposit Lost
12ரெங்கநாதன்.கோகோபால்21Deposit Lost


கோவனூர் ஊராட்சி 


  VP Name:  Kovanur      Votes Polled:  1319      Valid Votes:  1281      Invalid Votes:  38
Sl.NoNameFather/Husband NameParty NameVotes SecuredStatus
1சந்திரசேகரன்.ககலியமூர்த்தி81Deposit Lost
2சீனிவாசன்.துதுரை414NotElected
3நசீர்அகமது.முமுகமது சாலி561Elected
4வரதராஜன்.பாபாட்டுபடையாச்சி225NotElected


கொத்தங்குடி ஊராட்சி 
VP Name:  Kothankudi      Votes Polled:  959      Valid Votes:  924      Invalid Votes:  35
Sl.NoNameFather/Husband NameParty NameVotes SecuredStatus
1இந்திராணி.ககருப்பையன்495Elected
2சத்தியா.மாமாரியப்பன்5Deposit Lost
3தமிழரசி.ததமிழரசன்388NotElected
4பாப்பம்மாள்.சசண்முகம்36Deposit Lost


மாத்தூர் ஊராட்சி 





 VP Name:  Mathur      Votes Polled:  1441      Valid Votes:  1391      Invalid Votes:  50
Sl.NoNameFather/Husband NameParty NameVotes SecuredStatus
1இமாகிரேட்.சாசார்லஸ்472NotElected
2சாந்தி.ஆஆறுமுகம்63Deposit Lost
3மாலதி.ஜெஜெயகுமார்116Deposit Lost
4ரோஸ்லின்மேரி.கிகிறிஸ்டோபர்ராஜ்709Elected
5ஜெயஜோதி.செசெல்வராஜ்28Deposit Lost
6ஜெரோன்ஸிஸ்.ராராயல்3Deposit Lost

ஏன நல்லூர் ஊராட்சி 
 VP Name:  Enanallur      Votes Polled:  1282      Valid Votes:  1217      Invalid Votes:  65
Sl.NoNameFather/Husband NameParty NameVotes SecuredStatus
1அரசு.சொசொக்கலிங்கம்55Deposit Lost
2அழகேசன்.செசெல்லமுத்து49Deposit Lost
3குருசாமி.சிசிவானந்தம்206NotElected
4செந்தாமரை.ககர்ணன்38Deposit Lost
5சேகர்.அஅய்னான்36Deposit Lost
6மனோகரன்.ககலியமூர்த்தி568Elected
7ஜெயராமன்.ததம்புசாமி265NotElected


இஞ்சிகொல்லை ஊராட்சி 
 VP Name:  Injikollai      Votes Polled:  1826      Valid Votes:  1724      Invalid Votes:  102
Sl.NoNameFather/Husband NameParty NameVotes SecuredStatus
1சுமதி.ரரவிச்சந்திரன்710NotElected
2பிரியதர்ஷினி.இஇளந்திரையன்1014Elected


கிருஷ்ணாபுரம் ஊராட்சி 
VP Name:  Krishnapuram      Votes Polled:  1408      Valid Votes:  1359      Invalid Votes:  49
Sl.NoNameFather/Husband NameParty NameVotes SecuredStatus
1சுரேஷ்.செசெல்லப்பிள்ளை358NotElected
2மகேஸ்வரி.கோகோபாலகிருஷ்ணன்541Elected
3ஜெனார்த்தனன்.வெவெங்கடேசன்460NotElected


கூகுர் ஊராட்சி 

VP Name:  Koohur      Votes Polled:  847      Valid Votes:  805      Invalid Votes:  42
Sl.NoNameFather/Husband NameParty NameVotes SecuredStatus
1உஷாராணி.ராராஜேந்திரன்92Deposit Lost
2கவிநிலவு.மாமார்க்கேஸ்377Elected
3மகேஸ்வரி.முமுருகேசன்336NotElected


விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்