அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Thursday, November 3, 2011

ஈமானியப் பலஹீனத்தின் வெளிப்பாடுகள்

அளவில்லா கருணையும் இணை இல்லா கிருபையும் உடைய அல்லாஹ் வின் திரு பெயரால் ஆரம்பம் செய்கின்றேன், எல்லாப் புகழும் அல்லாஹுவுக்கே உரித்தானவை, இன்னும் ரசூலே கரீம் சல்லல்லாஹு அலைஹிவசலம் அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும், இன்னும் அவர்களைப் பின்பற்றிய அனைவர் மீதும் உண்டாவதாக, ஆமீன் என்று கூறி என்னுடைய சிறிய தொகுப்பை தருகிறேன், இன்ஷா அல்லாஹ்…

 முதலில் நம்முடைய ஈமானின் நிலையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.. 

 தொழுகையிலும் சரி, அல்லாஹ்வின் திருமறையை ஓதுவதிலும் சரி, சஹாபாக்கள் உணர்ந்த சுவையையும் லயிப்பையும் நாம் எப்போதாவது உணர்ந்த்திருக்கின்றோமா? நம்மில் மிக குறைவானவர்கள் சில நேரத்தில் உணர்ந்திருக்கலாம். ஆனால், இதுபோன்ற கதைகளைக் கேட்டுப் பூரித்துப் போனதைத் தவிர வேறெதையும் காணாதவர்கள் தான் அதிகம்

 நாம் தொழுகின்றோம், நோன்பு நோற்கின்றோம், தானம் செய்கின்றோம், ஹஜ் செல்கின்றோம் , சஹாபாக்கள் செய்த எல்லா இபாதத்களிலும் ஈடுபடுகின்றோம். ஆனால், அவர்களது இபாதத்துகளில் காணப்பட்ட ஈரத்தை, பசுமையை நாம் காண்பதில்லை.

 நாம் குடும்ப வாழ்கை மேற்கொள்கிறோம். கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகின்றோம். சமூக உறவுகளில் ஈடுபடுகின்றோம். ஆனால், இவற்றை செயல்படுத்துகின்ற போது சஹாபாகளில் காணப்பட்ட அழகையும் நேர்மையையும் நம்மிடம் காண முடியவில்லை.

 இப்னு மசூத்(ரலி) அவர்கள் தனது மாணவர்களைப் பார்த்துக் கூறினார்: சஹாபாக்களை விடவும் நீங்கள் அதிகமாக தொழுகையில் ஈடுபடுகின்றீர்கள், நோன்பு நோர்கின்றீர்கள், ஆனால் அவர்கள் உங்களை விட சிறந்து காணப்பட்டார்கள். காரணத்தை வினவியபோது, அவர்கள் உங்களை விடவும் உலகில் பற்றற்றவர்களாக இருந்தார்கள். உங்களை விடவும் மறுமையில் ஆசை வைத்தவர்களாக இருந்தார்கள் என்றார்கள்.

 அபூ பக்கர்(ரலி) அவர்களைப் பற்றி சில சலபுகள் கூறுகின்றபொழுது, அபூ பக்கர்(ரலி) அவர்கள் அதிகமாக தொழுகையாலும் நோன்பாலும் எங்களை மிகைக்கவில்லை. மாறாக அவரது உள்ளத்தில் ஆழப் பதிந்த ஈமானால்தான் எங்களை மிகைதிருந்தார் என்றனர்.

 எனவே புறச் செயல்களில் பெரிய வேறுபாடு காணப்படாவிட்டாலும் அகச் செயல்களில் வேறுபாடு இருந்திருக்கிறது. அவர்கள் இபாதத்தையும் சரி குடும்ப வாழ்கையையும் சரி சமூக வாழ்கையையும் வியாபாரத்திலும் சரி சுவைத்துச் செய்துருக்கிரார்கள். அதில் அழகும் நேர்மையும் பிரதிபலித்திருகிறது….

 சகோதரர்களே இங்கே நம்முடைய நிலையை அலசி பார்க்க வேண்டும்…

 ஈமானியப் பலஹீனத்தின் வெளிப்பாடுகள் சில 

 ஒருவனது செயல்களை வைத்து அவனது ஈமானின் பலம் பலஹீனம் பற்றி அளவிட முடியும். ஈமான் பலஹீனமடையும் போது, அதன் வளிப்பாடுகள் எவ்வாறு இருக்க முடியும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம் இன்ஷா அல்லாஹ்… 

 இபாதத்களை அதற்குரிய வடிவில் நிறைவேற்றுவதில் கவனக் குறைவாக இருப்பார். ஜமாஅத் தொழுகைக்கு தாமதமாகியே வருவார் அல்லது ஜமாஅத்திற்கு வரவே மாட்டார். சில சமயம் பள்ளிவாசலுக்கு வரமாட்டார். தொழுகைகளிலும் பல எண்ணங்களுடனேயே இருப்பார். இமாம் ஸலாம் கொடுத்தவுடன் தான் சுய நினைவுக்கு வருவார். 

 சுபஹ் தொழுகைக்கு உரிய நேரத்தில் எழ மாட்டார். சூரியன் உதித்த பின் எழுந்து கொண்டாலும் அதற்காக கொஞ்சமும் கவலைப்படாமல் சாதாரணமாகவே தனது கடமைகளைச் செய்து கொண்டிருப்பார்.. 

 ஜும்ஆத் தொழுகைக்கு இமாம் மிம்பரில் ஏறிய பிறகே போவார். அல்லது தொழுகைக்காக தக்பீர் கட்டும் நேரத்தில் அவசரமாகப் போய் இணைந்து கொள்வார். நேர காலத்துடன் போனாலும் குத்பாவைக் கேட்பதை விட்டு நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பார்.. சுன்னத்தான அமல்களில் ஈடுபாடு காட்ட மாட்டார். அவற்றை விடுவது குற்றமில்லை என இருந்துவிடுவார். கியாமுல் லைல், ழுஹா போன்ற தொழுகையையோ, சுன்னத்தான ஒரு நோன்பு நோர்பதையோ காணவே முடியாதிருக்கும்.. 

 அல்லாஹ்வின் திருமறை ஓதுவதைக் காணமுடியாதிருக்கும். அப்படியே ஓதினாலும் நாவால் மட்டும் தான் உள்ளத்தில் எந்தவிதப் பாதிப்பும் இருக்காது. சந்தர்ப்ப துஆக்கள் ஒதுபவராக அவரைக் காணமுடியாது. அல்லாஹ் விடத்தில் கையேந்தி துஆக் கேட்கும் பண்பு இருக்காது.

 ஈமான் பலஹீனப்படும்போது இவற்றையும் இன்னும் பலவற்றையும் காணலாம். தனிமனிதன் , சமூகம், அரசு எல்லாவற்றிலும் இதன் பாதிப்புகள் இருக்கும். தனிமனிதனோ, சமூகமோ, அரசோ வீழ்வதற்கு இதுவே காரணமாக இருக்கும். 

 புகழ் அனைத்தும் அல்லாஹுவுக்கு உரியது, பிழைகள் எதுவும் இருந்தால் அல்லாஹ் என்னை மன்னிபானாக என்று தொகுத்து என்னுடைய இந்த தொகுப்பை நிறைவு செய்கிறேன்..

 நன்றி அஷ்ஷெய்க் அக்ரம் அப்துல் சமத் (நளீமி)

நன்றி:readislam.net

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்