அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Friday, July 11, 2014

பிரார்த்தனையே நமது ஆயுதம்.



அஸ்ஸலாமு அலைக்கும் 

கொஞ்சம் நேரம் ஒதுக்கி படித்து விட்டு துவா செய்யவும் 

பிரார்த்தனையே நமது ஆயுதம். 

சகோதரர்களே உலகத்திலே மனித உரிமை மீறல் எங்கு நடந்தாலும், அது ஈராக்காக இருந்தாலும் சரி. இலங்கையாக இருந்தாலும் சரி மதம் இனம் வேறு பாடு பார்க்காமல் முதல் வரிசையில் நின்று குரல் கொடுக்கும் இஸ்லாமிய சமூகமே, இன்று பாலஸ்தீனத்திலும், ஈராக்கிலும், குழந்தைகளும் வயதானவர்களும் அப்பாவி பொது மக்களும் கொத்து கொத்தாக செத்து மடிந்து கொண்டு இருக்கின்றனரே!

இந்த கொடுமையை தட்டிக்கேட்காமல் இங்கே உள்ள வைக்கோவும் ராமதாசும் மற்றும் இங்கு இருக்கும் திராவிட கட்சிகளும் கை கட்டி வாய் பொத்தி நிற்கின்றனரே!
இந்த தலைவர்களும், இந்த மனித உரிமை மீறலை கண்டித்து அவர்கள் சார்ந்து இருக்கும் கட்சிகளும் ஒரு சிறு ஆர்ப்பாட்டத்தை கூட நடத்த வில்லையே, 

இப்போது தெரிகின்றதா இவர்களின் உண்மை முகம், இவர்களுக்கு மனித உரிமை மீறல் குறித்து கவலை இல்லை, அது எந்த இனத்திற்கு, எந்த மதத்திற்கு எதிராக நடகின்றது என்பதை வைத்துதான் இவர்கள் குரல் கொடுப்பார்கள், 

யாருக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் எப்போது கொடுத்தால் ஒட்டு வேட்டையை நடத்த முடியும் என்று வாக்கு வங்கியை மையமாக வைத்தே இவர்கள் எதிர்ப்பும் ஆதரவும் இருக்கும்.

இனியும் இவர்கள் பின்னால் நாம் அணிதிரண்டால் ஏமாற்றமே மிஞ்சும்,

இறைவன் ஒருவனே துணை நமக்கு,

எனவே இரவு நேர தொளுகையுளும், நோன்பு திறக்கும் முன்பும், இந்த கொடுமையாளர்களுக்கு தண்டனை கொடுக்க, இவர்களை தட்டிகேட்க யா அல்லாஹ் உன்னை அன்றி வேறு நாதி இன்றி நிற்கின்றோம், எங்களுக்கு மன உறுதியையும் எதிர்த்து போராடும் வல்லமையும் தா யா அல்லாஹ் என்று துவா செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக அல்லாஹ் நமக்கு துணை புரிவான்

Friday, June 6, 2014

வேண்டியது விவேகமே! வேகம் அல்ல!




அஸ்ஸலாமு அலைக்கும் 
புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே 

சமீப காலமாக நமது சகோதரர்கள் இந்த முக நூல் பக்கங்களில்  தெரிந்தும் தெரியாமலும் பாசிச எதிர்ப்பு என்கின்ற பெயரில் தமது கருத்துக்களை மிகவும் காட்டமாக அல்லது மிகவும் வன்முறையை வாசகங்களில் பயன் படுத்துவதும், வழக்கமாக உள்ளது இது என்ன பலனை தரும் என்பதை நீங்கள் அறிய வில்லையா..

இதற்கு மிகபெரிய எடுத்துகாட்டாக லக்னோவில் நடைபெற்ற சம்பவம் மிக சிறந்த எட்த்துக்காட்டு ஒரு தனி மனிதர் ஒருசமூகத்தின்  தலைவராக உள்ள ஒருவரை தவறுதலாக சித்தரித்தார் என்பதற்காக, அவர் பாதிக்கப் பட்டது மட்டுமல்லாது அவர் சார்ந்து இருக்கும் சமூகமும் பாதிக்க பட்டது 

6:108   وَلَا تَسُبُّوا الَّذِينَ يَدْعُونَ مِن دُونِ اللَّهِ فَيَسُبُّوا اللَّهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ ۗ كَذَٰلِكَ زَيَّنَّا لِكُلِّ أُمَّةٍ عَمَلَهُمْ ثُمَّ إِلَىٰ رَبِّهِم مَّرْجِعُهُمْ فَيُنَبِّئُهُم بِمَا كَانُوا يَعْمَلُونَ
6:108அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்.

இது திருமறை வசனம் 

எந்த விசயத்திற்கும் அதற்கு நிகரான எதிர்விசை கண்டிப்பாக இருக்கும்.என்பதையே மேலே உள்ள திரு குரான் வசனம் கூறுகின்றது,

 எனவே நமது சகோதரர்கள் ஆத்திரம் கொண்டு வார்த்தைகளை  அள்ளி கொட்டுவதும், அவசரம் காட்டவும் வேண்டாம்.நாம் ஆத்திரப்பட்டு நாம் செய்யும் செயல்களால் சமூகத்திற்கு ஏற்படும் இழப்பை நம்மால் சரி செய்ய முடியுமா யோசித்து பாருங்கள்,

நாம் வெளிபடுத்தும் கருத்துக்கள் சமூக அமைதியை, விழிப்புணர்வை ஏற்படுத்த கூடியதாக இருக்க வேண்டுமே தவிர சமூக அமைதிக்கு பங்கம் விலை விப்பதாக இருக்க கூடாது 

பாசிச சக்திகள் நமக்கு எதிராக போர் தொடுக்கின்றார்கள் என்றால் அதற்கு நாம் காரணமாக இருகின்றோமா என்பதை சிந்தித்து பாருங்கள், பாசிச சக்திகள் செய்யும் செயலை ஆதரிப்பதாக நினைக்கவேண்டாம், கண்டிப்பாக பாசிச சக்திகள் அவர்கள் செய்யும் அடாவடி தனம் கண்டிக்க கூடியதே. ஒரு தனி மனிதர் தவறு செய்தால் அவரை மட்டும் தானே தண்டிக்க வேண்டும் அதற்காக அவர் சார்ந்து இருக்கும் சமூகம் என்ன பிழை செய்தது, இது வன்மையாக கண்டிக்க பட வேண்டியது இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை,

அதே நேரத்தில் நமது பிரச்சாரம் இஸ்லாம் வலியுறுத்தும் அமைதியும் அன்பும் கொண்ட சத்திய பாதையாக இருக்க வேண்டும்,

நமது செயல்பாட்டின் மூலம் மக்கள் சக்தியை வென்று எடுக்க வேண்டும்,

முதலில் நமக்குள் இருக்கும் சகோதர சண்டைகளை நிறுத்தி கொள்ளவேண்டும் பிறகு பிறகு இந்த சகோதர ததுவத்தின் வட்டத்தை மற்ற சமூகத்தின் மீதும் படரவிடவேண்டும் 


எந்த செயல் நடந்தாலும் அதை அறிவு பூர்வமாக எதிர்கொள்வது அவசியம்,
பாசிச சக்திகள் தவறு இளைக்கும் போது மக்கள் சக்திகளை ஒன்று திரட்டி சட்ட பூர்வமாக அதை எதிர்கொள்வதே நிரந்தர தீர்வமாக இருக்கும்..
a

Tuesday, April 1, 2014

ஏன் வேண்டும் இந்த மாற்றம்? பாகம் 2

அஸ்ஸலாமு அலைக்கும் புகழ் அனைத்தும் ஏக இறைவனுக்கே 


ஏன் வேண்டும் இந்த மாற்றம் என்ற தலைப்பில் கடந்த கட்டூரையில் நடைமுறையில் பிள்ளைகளுக்கு மதரசாக்களில் கற்று கொடுக்கப்படும் அடிப்படை கல்வி எத்தகையதாக உள்ளது என்பதையும் அது ஏன் பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பதையும் பார்த்தோம் 

இனி இந்த சமூகத்தில் இஸ்லாமிய குழந்தைகளின் கல்வியால் மிகப்பெரிய பாராட்டத்தக்க மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்றால் நமது கல்வி முறையில் எந்த மாதிரியான மாற்றங்கள் கொண்ட்டுவந்தால் அது சிறப்பாக இருக்கும் என்று என் சிந்தனையில் உள்ள சில விசயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன் இதில் தவறுகள் இறந்தால் அதை சுட்டி காட்டவும் இன்ஷா அல்லாஹ் நான் அதை திருத்திகொல்கின்றேன் 

நமது மதரசாக்களில் திருமறை குர் ஆனை  ஓதுவதற்கு கற்றுகொடுத்தப் பிறகு அதன் விளக்கத்தை அவரவர் தாய் மொழியில் முழுமையாக கற்றுத் தரவேண்டும் எப்படி பள்ளிகூடங்களில் பாட புஸ்தகங்களை வருடம் முழுவதும் பிரித்து கால் ஆண்டு அரை ஆண்டு முழு ஆண்டு என்று பிரித்து  சொல்லிக் கொடுத்து அதற்கு தேர்வு வைத்து மதிப்பெண்கள் வைகின்றனரோ அதேபோல். இந்த திருமறை குரானையும் மூன்று பாகங்களாக மூன்று வருடத்திற்கு சொல்லி கொடுத்து, ஒரு ஆண்டுக்கு பத்து ஜூசு வீதம் மூன்று ஆண்டுகளுக்கு முப்பது ஜூசு சொல்லிகொடுக்கப்பட வேண்டும். 

ஒவ்வொரு பத்து ஜூசுவுக்கும் முறையே கால் ஆண்டு அரை ஆண்டு முழு ஆண்டு தேர்வு என்று வைத்து மூன்று வருடத்திற்கு இந்த குர் ஆனை முழுமையாக கற்றுகொடுத்து இதில் சிறப்பாக தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ஜமாத்தார்கள் அனைவரையும் கூட்டி பட்டயங்கள் நற்சான்றிதல்கள் வழங்க வேண்டும் 

திருமறை குரானை நன்கு தேர்ச்சி பெற்ற பிறகு இதன் தப்சீர் விரிவுரையை இதே போல் கற்று தரவேண்டும் 

இதே போல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறை முழுமையாக பாடதிட்டமாக்கி இதையும் இந்த மூன்றாண்டு குரான் வகுப்போடு சேர்ந்து சொல்லி கொடுக்கப் பட வேண்டும்  

இவ்வாறு சொல்லி கொடுக்கப்படும் இந்த விரிவான இஸ்லாமிய கல்வியால் முழுமையான இஸ்லாமிய கல்வியும் நமது குழந்தைகளுக்கு போய் சேரும் இதனால் நல்லொழுக்க மிக்க ஒழுக்க சீலர்களாகவும், மனிதநேயமிக்க மனிதர்களாகவும் சமூகத்தில் நிலவும் அவலங்களுக்கு தீர்வு சொல்லக்  கூடிவர்கலாகவும், சுற்றி இருக்கும் நமது சகோதர சமூகத்திருக்கு தலை சிறந்த முன் மாதிரியாகவும், நமது குழந்தைகள் இன்ஷா அல்லாஹ் திகழ்வார்கள் 


இப்படி இந்த இஸ்லாமிய கல்வியை விரிவான முறையில் நமது பிள்ளைகளுக்கு கற்று தருவது மட்டுமே உலக மக்கள் அனைவருக்கும் ஒரு நன்கொடையாக அருளபெற்ற இந்த திருமறையும், உலக மக்கள் அனைவருக்கும் தலைசிறந்த வழிகாட்டியாக அனுப்பட்ட முகம்மது நபி (ஸல்) அலைஹி வசல்லம் அவர்களின் போதனையும் இந்த மனித சமூகத்திற்கு முழுமையாக போய் சேரவேண்டுமானால், நமது குழந்தைகளின் சிந்தனையில் இஸ்லாமிய கல்வியை மேலே குறுப்பிட்ட முறையில் செலுத்தி அதற்கு நமது பிள்ளைகளின் வாயிலாக செயல் வடிவம் கொடுத்தால் மட்டுமே சாத்தியப்படும் 

இல்லையேல் இது வெறும் ஏட்டு கல்வியாக மட்டுமே இருக்கும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது 

எனவே எனதருமை இஸ்லாமிய சொந்தங்களே இந்த உன்னதமான இஸ்லாமிய கல்வியை நமது குழந்தைகளின் வாயிலாக அவர்களின் செயல் பாடுகள் மூலமாக இந்த உலககிற்கு அறிமுகம் செய்வோம் அமைதியும் மனிதநேயமும் நல்லொழுக்க மிக்க சமூகத்தை உருவாக்குவோம்   

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்