அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Friday, February 25, 2011

கோத்ரா:நீதிமன்றத் தீர்ப்பிற்கு கண்டனம் - எஸ்.டி.பி.ஐ

புதுடெல்லி,பிப்.25:கோத்ரா ரெயில் எரிப்புத் தொடர்பாக நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுத் தொடர்பாக எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "கோத்ரா வழக்கில் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு வெளியான தீர்ப்பு நீதியை ஏளனம் செய்கிறது. இந்திய நீதிபீடத்தின் நொடிப்பு நிலையை இது தெளிவாக்குகிறது.

குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டவர்கள் இவ்வளவு காலம் பெரும்பாலும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. சந்தேகத்தின் பெயரால் அவர்களுக்கு மதிப்புமிக்க ஒன்பது ஆண்டுகள் நஷ்டமானது. ரெயிலை எரிக்க முஸ்லிம்கள் சதித்திட்டம் தீட்டினார்கள் என்ற போலீஸாரின் அறிக்கையை ஒத்து நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. ஆனால், குஜராத் போலீஸ், அரசுக்கு சார்பாக செயல்படுவதாகும்.

ஏற்கனவே குஜராத் இனப்படுகொலைத் தொடர்பான சில வழக்குகளை குஜராத்திற்கு வெளியே விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது நினைவுக்கூறத்தக்கதாகும்.

கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட பானர்ஜி கமிஷனும், குஜராத் மோடி அரசால் நியமிக்கப்பட்ட நானாவதி கமிஷனும் வெளியிட்ட அறிக்கைகளில் வேறுபாடுகள் உள்ளன.

ரெயில் சென்றுக்கொண்டிருக்கும் பொழுது 60 லிட்டர் பெட்ரோலை வெளியேயிருந்து ஊற்றமுடியாது எனவும், எரிக்கப்பட்ட ரெயில் பெட்டி உள்ளே பூட்டப்பட்டிருந்தது எனவும் பானர்ஜி கமிஷன் அறிக்கை சுட்டிக்காட்டியது.

நானாவதி கமிஷன் அறிக்கையை மட்டும் நீதிபதி கவனத்தில் கொண்டுள்ளாரா? என்று கருதவேண்டியுள்ளது. தீர்ப்பு வழங்குவதற்கு முன் பானர்ஜி கமிஷனின் கண்டறிந்தவைகளை நீதிபதி புறக்கணித்துள்ளார்.

தண்டிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் குஜராத் அரசால் பொய்வழக்கில் சிக்கவைக்கப்பட்டு சித்திரவதைச் செய்து வாக்குமூலம் வாங்கப்பட்டவர்கள்." இவ்வாறு இ.அபூபக்கர் கூறியுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

DiggGoogle BookmarksredditMixxStumbleUponTechnoratiYahoo! BuzzDesignFloatDeliciousBlinkList

மனோ இச்சையும் ஜாஹிலியத்தும் - Moulavi Abdul Wadood Jiffry

Saturday, February 12, 2011

இனி இஸ்ரேலும், அமெரிக்காவும் இல்லாத மேற்காசியா - அஹ்மத் நஜாத்


டெஹ்ரான்,பிப்.12:அமெரிக்காவும், இஸ்ரேலும் இல்லாத மேற்காசியா எதிர்காலத்தில் உருவாகும் என ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் அறிவித்துள்ளார்.

'எத்தனை தந்திரங்களை கையாண்டாலும் மக்கள் புரட்சியின் மூலமாக அமெரிக்காவும், சியானிஷ நாடும் இல்லாத ஒரு மேற்காசியாவை உருவாக்கலாம் என்பதை உங்களால் உறுதிப்படுத்த முடியும்' - ஈரான் இஸ்லாமிய புரட்சியின் 32-வது நினைவு தினத்தையொட்டி டெஹ்ரானின் ஆசாத்(சுதந்திர) சதுக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையில் அஹ்மத் நஜாத் தெரிவித்தார்.

'இப்பிராந்தியத்தில் எகிப்து மற்றும் துனீசியாவின் விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகள் தலையிடக் கூடாது. ஆஃப்கானில் இவர்கள் என்னச் செய்தார்கள்? இப்பிராந்தியத்தில் ஏன் இவர்கள் ராணுவ தளங்களை அமைக்கின்றார்கள்?' -நஜாத் கேட்கிறார்.

இரண்டு நாடுகள் என்று கூறும் பொழுதே இஸ்ரேலின் மேலாதிக்கத்திற்காக அமெரிக்கா செயல்படுவதாக நஜாத் குற்றஞ்சாட்டினார்.

எகிப்திய புரட்சியை வாழ்த்திய நஜாத், எச்சரிக்கையோடு இருக்குமாறு அந்நாட்டு மக்களை கேட்டுக்கொண்டார். சுதந்திரத்தை பெறுவது உங்களுடைய உரிமையாகும். உங்களை ஆட்சிபுரிபவர் யார்? என்பதை தீர்மானிக்க வேண்டியதும் நீங்களே!

சுதந்திர நாட்டைக் குறித்தும், உலக நாடுகளைக் குறித்தும் கருத்துத் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஊழல் அரசாங்கத்தை எதிர்த்து அஞ்சாமல் உறுதியுடன் நில்லுங்கள்.வெற்றி உங்களின் அருகில் உள்ளது' என நஜாத் எழுச்சிப் போராட்டத்தில் கலந்துக் கொண்ட எகிப்திய மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

தூதுத்துவமா .....? அப்படி என்றால் ...?


உங்கள் தலைவிதி உங்கள் கையில்

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்