அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Friday, August 12, 2011

ஈராக்கின் மீதான அமெரிக்க தாக்குதல் ஒரு ஆவன படம்

அஸ்ஸலாமு அலைக்கும் சமூக நீதி விரும்பும் சமநிலை சமுதாயத்தின் வேர்களே இங்கே உள்ள இந்த ஆவணப்படத்தை பாருங்கள் சமூக நீதியின் ஒட்டு மொத்த குத்தைகைகாரர்கள் நாங்கள் தான் என்று மார்தட்டி கொள்ளும் அமெரிக்காவின் உண்மையான கோர முகத்தையும் , போலியாக சமாதானம் பேசும் பொய்யர்கள் இவர்கள் என்பதையும், இந்த ஆவன படம் தோலுரித்து காட்டுகின்றது, நாளை நம்மை எதிர்த்து போராடுவதற்கு இந்த மண்ணில் இருந்து ஒரு வலுவான இளைய சமுதாயம் வந்து விட கூடாது என்கின்ற பயத்தால் இவர்கள் போர் செய்யும் மண்ணில் உள்ள பச்சிலங்குழந்தைகளைகூட இவர்கள் விட்டு வைப்பது இல்லை, சமூக நீதி விரும்பும் சகாக்களே , இலட்சக்கணகான உயிர்களை கொன்று விட்டு சில ஆயிரம் மக்களுக்கு மருந்தும் உணவுகளும் வழங்கிவிட்டு இந்த பூமி பந்தின் அமைதி எங்களால் தான் சாத்தியம் என்று மார்தட்டி கொள்ளும் இவர்களின் உண்மை முகத்தை இந்த ஊருக்கும் உலகுக்கும் தெரியபடுத்துங்கள் உண்மையை தெரிய படித்தியதர்காக நாளைய உலகம் உங்களை தங்கள் இதயத்தில் சுமந்து செல்லும்.

இந்த உலக மக்களின் அருட்கொடையாக வந்த முகம்மது முஸ்தபா ரசூலே கரீம் (ஸல்) அவர்கள் காலத்து போர்களில் பெண்கள், மற்றும் குழந்தைகள், உயிர்களுக்கு உத்தரவாதம் தந்தார்கள் இதற்கான ஆதாரமான ஹதீஸை பாருங்கள்

சஹீஹுள் புகாரி ஹதீஸ் என்:

3014 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவித்தார்கள் நபி (ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனித போரில் பெண்ணொருத்தி கொள்ளப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள் அப்போது இறை தூதர் (ஸல்)அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொள்வதை கண்டித்தார்கள்

சமநிலை சமுதாயத்தின் தூண்களே இந்த உலக அமைதியின் வித்துக்கள் யார் ,விசமிகள் யார் என்பதை நீங்களே சிந்தியுங்கள் இதோ இந்த ஆவன படத்தை பாருங்கள்











No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்