அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Friday, June 6, 2014

வேண்டியது விவேகமே! வேகம் அல்ல!




அஸ்ஸலாமு அலைக்கும் 
புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே 

சமீப காலமாக நமது சகோதரர்கள் இந்த முக நூல் பக்கங்களில்  தெரிந்தும் தெரியாமலும் பாசிச எதிர்ப்பு என்கின்ற பெயரில் தமது கருத்துக்களை மிகவும் காட்டமாக அல்லது மிகவும் வன்முறையை வாசகங்களில் பயன் படுத்துவதும், வழக்கமாக உள்ளது இது என்ன பலனை தரும் என்பதை நீங்கள் அறிய வில்லையா..

இதற்கு மிகபெரிய எடுத்துகாட்டாக லக்னோவில் நடைபெற்ற சம்பவம் மிக சிறந்த எட்த்துக்காட்டு ஒரு தனி மனிதர் ஒருசமூகத்தின்  தலைவராக உள்ள ஒருவரை தவறுதலாக சித்தரித்தார் என்பதற்காக, அவர் பாதிக்கப் பட்டது மட்டுமல்லாது அவர் சார்ந்து இருக்கும் சமூகமும் பாதிக்க பட்டது 

6:108   وَلَا تَسُبُّوا الَّذِينَ يَدْعُونَ مِن دُونِ اللَّهِ فَيَسُبُّوا اللَّهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ ۗ كَذَٰلِكَ زَيَّنَّا لِكُلِّ أُمَّةٍ عَمَلَهُمْ ثُمَّ إِلَىٰ رَبِّهِم مَّرْجِعُهُمْ فَيُنَبِّئُهُم بِمَا كَانُوا يَعْمَلُونَ
6:108அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்.

இது திருமறை வசனம் 

எந்த விசயத்திற்கும் அதற்கு நிகரான எதிர்விசை கண்டிப்பாக இருக்கும்.என்பதையே மேலே உள்ள திரு குரான் வசனம் கூறுகின்றது,

 எனவே நமது சகோதரர்கள் ஆத்திரம் கொண்டு வார்த்தைகளை  அள்ளி கொட்டுவதும், அவசரம் காட்டவும் வேண்டாம்.நாம் ஆத்திரப்பட்டு நாம் செய்யும் செயல்களால் சமூகத்திற்கு ஏற்படும் இழப்பை நம்மால் சரி செய்ய முடியுமா யோசித்து பாருங்கள்,

நாம் வெளிபடுத்தும் கருத்துக்கள் சமூக அமைதியை, விழிப்புணர்வை ஏற்படுத்த கூடியதாக இருக்க வேண்டுமே தவிர சமூக அமைதிக்கு பங்கம் விலை விப்பதாக இருக்க கூடாது 

பாசிச சக்திகள் நமக்கு எதிராக போர் தொடுக்கின்றார்கள் என்றால் அதற்கு நாம் காரணமாக இருகின்றோமா என்பதை சிந்தித்து பாருங்கள், பாசிச சக்திகள் செய்யும் செயலை ஆதரிப்பதாக நினைக்கவேண்டாம், கண்டிப்பாக பாசிச சக்திகள் அவர்கள் செய்யும் அடாவடி தனம் கண்டிக்க கூடியதே. ஒரு தனி மனிதர் தவறு செய்தால் அவரை மட்டும் தானே தண்டிக்க வேண்டும் அதற்காக அவர் சார்ந்து இருக்கும் சமூகம் என்ன பிழை செய்தது, இது வன்மையாக கண்டிக்க பட வேண்டியது இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை,

அதே நேரத்தில் நமது பிரச்சாரம் இஸ்லாம் வலியுறுத்தும் அமைதியும் அன்பும் கொண்ட சத்திய பாதையாக இருக்க வேண்டும்,

நமது செயல்பாட்டின் மூலம் மக்கள் சக்தியை வென்று எடுக்க வேண்டும்,

முதலில் நமக்குள் இருக்கும் சகோதர சண்டைகளை நிறுத்தி கொள்ளவேண்டும் பிறகு பிறகு இந்த சகோதர ததுவத்தின் வட்டத்தை மற்ற சமூகத்தின் மீதும் படரவிடவேண்டும் 


எந்த செயல் நடந்தாலும் அதை அறிவு பூர்வமாக எதிர்கொள்வது அவசியம்,
பாசிச சக்திகள் தவறு இளைக்கும் போது மக்கள் சக்திகளை ஒன்று திரட்டி சட்ட பூர்வமாக அதை எதிர்கொள்வதே நிரந்தர தீர்வமாக இருக்கும்..
a

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்