அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Sunday, April 4, 2010

இணையத்தில் இணைந்திட வாருங்கள் தோழர்களே!

உயிரின் வேர்களை

ஊரிலேயே விட்டு விட்டு

உடலை மட்டும் சுமந்து கொண்டு

ஊரை விட்டு பிரிந்தோமே!

கடல் தாண்டி பறந்தோமே!

இதயத்தின் வலியைகூட இன்பமாக ஏற்றோமே!

தேனினும் இனிய மழலைகுரலை கூட

தொலைபேசியில் மட்டும் கேட்டோமே!

இவை அனைத்தும் எதற்காக

உயிரான உறவுக்காக!

இதுபோன்ற உணர்வுகளை

இதமாக பகிர்ந்திடுவோம்

இணையத்தின் மூலமாக

இன்பதுன்பங்களை பகிர்ந்துக் கொள்வோம்

இன்னல்கள் இருப்பின் அதை களைந்து கொள்வோம்


இவன் A.முகம்மது சுல்தான் (நாச்சியார் கோவில்)

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்