அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Tuesday, December 21, 2010

உள்ளதைச் சொன்னால் சிலருக்கு குத்தலும்,குடைஞ்சலும் வரத்தானே செய்யும்!

உள்ளதைச் சொன்னால் சிலருக்கு குத்தலும்,குடைஞ்சலும் வரத்தானே செய்யும்!(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி, ஐ.பீ,எஸ்(ஓ)

19.12.2010 அனைத்துப் பத்திரிக்கைகளிலும் பரபரப்பான செய்தியாக ராகுல் காந்தி அவர்களின் தனிப்பட்ட சம்பாசனையும், அதற்கு பதிலளித்தாற்போல பி.ஜே.பியும், ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் தெரிவித்த கருத்துக்களும் வெளியிட்டன. ராகுல் காந்தி, மத்தியில் அரசாளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர், மற்றும் வருங்கால பிரதமராவதிற்கு எல்லா தகுதியும் பெற்றவர் என்று இந்திய பிரதமரால் வர்ணிக்கப் பட்டவர் ஆவார். அப்படி யென்ன ராகுல் காந்தி சொன்னார்? இந்திய பிரதமர் 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ந்தேதி அளித்த விருந்தில் கலந்து கொண்ட அமெரிக்க தூதர் டிமேட்டி ரோமரிடம் ராகுல் காந்தி பேசிக் கொண்டிருந்த போது, ‘இந்தியாவில் வாழும் பெரும்பாலான முஸ்லிம்கள் பயங்கரவாதத்திற்கு துணை போனதில்லை எனவும், அவர்கள் தேசியத்திலும், ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள், ‘லஸ்கர் இ தொய்பா’ என்ற தீவிர வாதிகளை விட இந்து தீவிரவாதிகளால்தான் மிகவும் இந்திய தேசிய மக்களுக்கு அச்சுறுத்தல்’ இருப்பதாகவும் கூறினார் என்று அமெரிக்க தூதர் தனது நாட்டு அரசுக்கு செய்தி அனுப்பியதாக ‘விக்கிலீக்’ நிறுவனம் வெளியிட்ட செய்தியில் வெளியாகி உள்ளது. அது மட்டுமா நண்பர்களே? இதற்கு முன்னால் இருந்த அமெரிக்க தூதர் டேவிட் முல்போர்டு அனுப்பிய செய்தியும் இப்போது வெளியாகி உள்ளது. என்ன செய்தி அது என கேட்க ஆவல் உண்டாவது இயற்கையே! அது, ‘பிரிவினைவாதமும், மதத்தீவிரவாதமும் இந்திய முஸ்லிம்களுக்கு பரவலான ஆதரவைப் பெறவில்லை எனவும் பெரும்பாலான முஸ்லிம்கள் மிதவாதக் கொள்கைகளில் பிடிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் எனவும், சமூகத்தில் இணைந்து வாழ்வதையே இந்திய முஸ்லிம் விரும்புகிறார்கள் எனவும் டேவிட் முல்போர்டு கூறியிருக்கிறார் என்றும் விக்கிலீக் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கைகளுக்கு பி.ஜே.பியும், வலதுசாரி அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸ_ம் கண்டனக் கணைகளை தொடுத்துள்ளன. பி.ஜே.பியின் பொதுச் செயலாளர் ரவி சங்கர் பிரசாத் சொல்லும் போது, ‘ராகுல் காந்தியின் கருத்து பொறுப்பில்லாதது மற்றும் ராகுல் தீவிரவாதக் கொள்கையுடன் சமரசம் செய்து கொண்டார் மற்றும் பி.ஜே.பி எந்த தீவிரவாத கும்பலுக்கும் சமரசம் செய்து கொள்வதில்லை என கூறியிறுக்கிறார். ராகுல் காந்தி தனது கருத்துக்களை வெளியிடுவதிற்கு முன்பு நடந்த சம்பவங்களை வைத்துத்தான் இந்திய வலது சாரி தீவிரவாதத்தின் கோரமுகங்களையும் அதன் தாண்டவங்களையும் பார்த்த பின்னர்தான் தனது அபிப்பிராயத்தினை வெளிக்காட்டியிருப்பார் என கீழ்க்கண்ட சம்பவங்கள் மூலம் தெரிவிக்கலாம் என நினைக்கின்றேன்:1) பாபரி மஸ்ஜித் இடிப்பு: பாபரி மஸ்ஜித் இடிப்பு கரசேவகர்களின் இயற்கையான உணர்வில் ஏற்பட்டது என பி.ஜே.பி தலைவர்கள் சொன்னாலும் அவர்கள் கூற்று பொய்ப்பது போல பாரதிய ஜனதாவின் முன்னாள் எம்.பி. ராம்விலாஸ் விஸ்வதாஸ 1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி தான் பிரதமர் நரசிங்கராவ் அவர்களை சந்தித்ததாகவும், அவர் என்னிடம் கரசேவகர்களை ஒன்று திரட்டி என்ன செய்யப்போகிறீர்கள் எனக் கேட்டதாகவும் அதற்கு விஸ்வதாஸ் மஸ்ஜிதை இடிக்கப் போகிறோம் என்று சொன்னதாகவும் ஒரு பேட்டியில் கூறிவிட்டு அந்தக் குற்றத்திற்காக தான் தூக்கு மேடைக்கும் செல்லத்தயார் என்றும் சொல்லியுள்ளதினை வைத்து எவ்வாறெல்லாம் சதித்திட்டம் தீட்டி பாரம்பரிய மிக்க மஸ்ஜிதை தரை மட்டமாக்கி விட்டு இந்தியாவின் இறையாண்மைக்கும், மதசார்பில்;;;;லாக சமதர்ம சமுதாய அமைப்பிற்கும், வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் வேட்டு நீங்கா கலங்கத்தினை ஏற்படுத்தி விட்டார்கள் என்றால் மிகையாகுமா? அது மட்டுமா? ஹிந்து மகாசபை அமைப்பின் பொதுச் செயலாளர் டோகாடியா டிசம்பர் மாதம் சென்னை வந்தவர் நிருபர்களிடம் அயோத்தியில் சர்ச்சைக்குள்ளான இடத்தினையும் சேர்த்து 63 ஏக்கரில் ராமர் கோயில் கட்டியே தீருவோம் என்றும் அதனை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் சவால் விட்டுள்ளார். எப்போது? அயோத்தி பாபரி மஸ்ஜித் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அக்டோபர் மாதம் கூறப்பட்ட வழக்கில் மத நம்பிக்கை அடிப்படையில் மூன்று நிதிபதிகள் தீர்ப்பளித்து மூன்று பகுதிகளாக தீர்ப்பளித்து அதில் ஒரு பகுதி முஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்டுவதிற்கு சொந்தமான இடமென்று தீர்ப்பளித்த பின்னரும், முஸ்லிம் அமைப்பினர் அந்தத்தீர்ப்பினை ஏற்காது உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையிட்ட பின்னரும் டோகாடியா கூறியிருக்கிறார் என்றால் அவரும் அவருடைய வலது சாரி மத வெறியர்களும் எந்தளவிற்கு உச்ச நீதிமன்றத்தினையும், அரசுpயல் அமைப்பினையும் மதிக்கின்றனர் என தெரிந்து கொள்ளலாம்.2) குஜராத் மாநிலம் என்றால் முன்பெல்லாம் தேசிய தந்தை மகாத்மா காந்தி சபர்மதி நதிக்கரை ஓரத்தில் ஆசிரமம் நடத்தி தலித் இன மக்கள் மேம்பாடுகளுக்கு உழைத்தது ஞாபகத்திற்கு வரும். நானும் ஆவடி மத்திய ரிசர்வ் போலிஸ் படை கமாண்டன்ட் நண்பர் ராமலிங்கமும் அந்த ஆசிரமத்தனை 1997ஆம் ஆண்டு சென்று பார்த்திருக்கின்றேன். ஆனால் இன்று ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் கோத்ரா ரயில் விபத்திற்குப் பின்னர் அரசு ஆதரவுடன் வலது சாரி அமைப்பினர் ஆடிய மனித கொலை கொள்னை தீ வைப்பு போன்ற கோரச் சம்பவங்கள் தான் ஞாபகத்திற்கு வருகிறது. அரசு ஆதரவுடன் நடத்தப்பட்டது என்று நான் மட்டும் சொல்லவில்லை, மாறாக அன்றைய மாநில உளவுத்துறையின் தலைவராக இருந்த ஸ்ரீகுமார், ஐ.பீ.எஸ்(ஓ) அவர்களே தனது அறிக்கையில் சொல்லியிருக்கிறார். அதற்காக அவரை அரசு பந்தாடி, பதவியுயர்வு கொடுக்காததால் நீதிமன்றம் வரை சென்று பதவியுயர்வும் பெற்றார் என்றால் பாருங்களேன் எவ்வளவு தூரம் அவர்கள் உண்மையினை வெளிக் கொணரும் அதிகாரி மீத காழ்ப்புணர்ச்சி கொண்டார்கள் என்று. அன்றைய பி.ஜே.பி மத்திய அரசில் இந்திய நாட்டுடைய ஜனாதிபதியாக இருந்த அப்பழுக்கற்ற மதிப்புமிகு கே. ஆர்.நாரயாணன் அவர்கள் தனது சாவிற்கு முன்னாள் வெளியிட்ட செய்தியில் கோத்ரா சம்பவத்திற்குப் பின் நடந்த குற்ற நடவடிக்கையினை கண்டு மனம் வெம்பியதாக எல்லா ஊடகங்களும் வெளியிட்டன.அது மட்டுமா தீவிரவாதிகள் என்று அப்பாவி முஸ்லிம்கள் பலரையும் அவர்களின் நண்பர்களையும் போலி என்கவுண்டரில் மந்திரி, மற்றும் உயர் ஐ.பீஎஸ் அதிகாரிகள் துணையுடன் கொலை செய்துள்ளனர். உதாரணத்திற்கு சொகராபுதீன் அவரது மனைவி கௌசர் பீ, அவரது நண்பரும் சொகராபுதீன் கொலை வழக்கில் ஒரே சாட்சியுமான பிரஜாபதியும் கொலை செய்யப்பட்டு அதனை உச்ச நீதி மன்ற ஆணையின் பேரில் சி.பி.ஐ விசாரணைக்குழு நேரடி விசாரையும் செய்து முன்னாள் மாநில உள்துறை போலீஸ் மந்திரி அமித்ஜா, உயர் ஐ.பீ.எஸ் அதிகாரிகள் வன்ஜாரா மற்றும் விஜைய் அகர்வால் ஆகியோர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.3) ஒரஸ்ஸா மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய பழங்குடியினர் அவதிப்படும் தொழு நோய் குணமாவதிற்கான ஒரு மருத்துவ மனையும், கல்விக்காக கல்விக் கூடங்களையும் நடத்தி வந்த ஆஸ்திரேலியா நாட்டு தன்னார்வ தொண்டர் கிருத்துவ மதத்தினைச் சார்ந்த ஸ்nயின் என்பவர் அந்த மாநிலத்தில் தனது மனைவி, மகன், மகள் ஆகியோருடன் தங்கியிருந்தார். மதத்தின் அடிப்படையில் அவரை விரும்பாத வலது சாரி அமைப்பினர் கோவிந்த் சிங் தலைமையில் ஸ்டெயினும், அவருடைய அருமை மகனும் தங்களது ஜீப்பில் தூங்கிக் கொண்டிருந்த போது பயங்கர ஆயுதங்களுடன் தாக்கியது மட்டுமல்லாமல் தீ வைத்தும் எரித்துக் கொன்று விட்டனர் என்பதும் அனைவரும் அறிந்த செய்தியே!4) சென்ற 17.10.09 தேதி தீபாவளிக்கு முன்பு ஒரே பரபப்பு-என்னவென்று நினைக்கிறீர்கள். தீபாவளி கொண்டாட்டத்தினை சீர் குழைக்க முஸ்லிம் தீவிரவாதிகள் முயற்சி என்று பத்திரிக்கைகளிலும்-எலக்ட்ரானிக் மீடியாக்களிலும் செய்தி வெளியானதினை அனைவரும் அறிந்ததே.அத்தோடு அமெரிக்க உளவு நிறுவனமும் தன் பங்கிற்கு எச்சரிக்கை செய்தது வழக்கம் போல். ஆனால் நடந்தது என்ன?கோவா மாநிலம் பண்டா நகரில் தீபாவளி இரவு அன்று ஸ்கூட்டரில் சென்ற இருவர் குண்டு வெடித்து பின்பு மரணம் அடைந்தனர். கோவா மாநில காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து இறந்தவர்கள் பட்டேல்-நாயக் என்று அடையாளம் கண்டு, அவர்கள் கொண்டு சென்ற பையிலிருந்து தான் வெடி குண்டு நேரத்திற்கு முன்பாகவே வெடித்து விட்டதாகவும் சொல்லியுள்ளதினை அனைவரும் அறிவர். அவர்கள் யார் என்ற விசாரணையில் அவர்கள் இந்து தீவிரவாத அமைப்பான சமாதா சான்ஸ்தாவினைச் சார்ந்தவர்கள் என்றும் அறிக்கை கூறுகிறது.சாமாதா சான்ஸ்தா என்ற வலது சாரி அமைப்பு எது தெரிகிறதா நண்பர்களே? மகாராஸ்ட்ரா மாநிலத்தில் சில காலங்களுக்கு முன்பு மாலேகான் நகரில் வெள்ளிக்கிழமை ஜூம்மாத் தொழுகை நேரத்தில் சைக்கிள் குண்டு வெடித்து பலர் மாண்ட சம்பவத்திலும், அஜ்மீர் தர்ஹா குண்டு வெடிப்பிலும் கைது செய்யப் பட்ட பெண் சாமியார் பிராக்யா சிங்-ராணுவ அதிகாரி புரோகித,; சுவாமி அசிமானன்தா, ஆர்.எஸ்.எஸ் சுனில் ஜோசி போன்றவர்கள் கொண்ட இயக்கமாகும். ஆகவே பயங்கர வாத-நாசவேலைகளை செய்து விட்டு காவல் துறையினரை ஏவி முஸ்லிம்களை கைது செய்யத் தூண்டும் நடவடிக்கைக்காவும்-அதன் மூலம் இந்திய சமூகத்தினரிடையே கலவரம் ஏற்பட வழிவகை செய்யும் நடவடிக்கையாகும் அவர்களுடைய நடவடிக்கை என்றால் அது மிகையாகுமா?அது மட்டுமா? மத்திய பிரதேச ஆர.எஸ்.எஸ் இயக்கத்தினைச் சார்ந்த நான்மேலே குறிப்பிட்ட சுனில் ஜோசி அஜ்மீர் தரிஹா, மக்கா மஸ்ஜித் தர்கா மற்றும் சம்ஸ்ஹாட்டா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு ஆகியவைகளில் முக்கிய பங்காற்றியவர், அவர் தான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத் தொண்டர்களை குண்டு தயாரிக்க பயிற்சி கொடுத்தவர் என்றும் சொல்லப்படுகிறது. அப்படிப்பட்டவரையே அவர் பாதுகாப்பு துறையினரிடம் பிடிபட்டால் அனைத்து ரகசியமும் வந்து விடுமே என்று அவரையும் 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மத்திய பிரதேசம் திவாஸ் மாவட்டத்தில் கொலையும் செய்து விட்டனர். அந்த விசாரணையினை ம.த்திய பிரதேச மாநில போலீஸார் சரிவர விசாரணை செய்யாது முடித்து விட்டதால், அந்த விசாரணையினை மேற்கொண்டிருக்கும் தேசிய விசாரணை குழுவினரும், ராஜஸ்தான் காவல் துறையினரும் இணைந்து ஹர்சாத் சோலங்கி என்பரை கைது செய்துள்ளனர். ஆகவே தான் காங்கிரஸின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் ஆர்.எஸ்.எஸ் பற்றி விசாரணை வேண்டும் என வேண்டுகோள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தீயில்லாமல் புகை வராது என்ற பழமொழிக்கிணங்க மேற்காட்டிய தகவல்களை வைத்து ராகுல் சொன்னதும் உண்மையே என்று அறிய முடிகிறது அல்லவா?ஏன் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் புனிதமானதா? மகாத்மாவினை 1948ஆம் அண்டு கொலை செய்த பின்பு தடை செய்யப்பட்ட இயக்கம் தானே! 5) மும்பை வெடிகுண்டுச் சம்பவத்திற்குப் பின்னர் முஸ்லிம்களை பயங்கரவாதத்தினர் என்பது போல சித்தரிக்கப்படுகிறது. ஆனால் அந்த மும்பை குண்டு வெடிப்பிற்கு பின்னர் சிவசேனா மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் ஆடிய வெறியாட்டம் பற்றி நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிஷனைப்பார்த்தால் எப்படியெல்லாம் பயங்கரவாத செயலினை அதிகார வர்க்கத்துடன் சேர்ந்து நடத்தியுள்ளனர் என்பது தெளிவாகும். பி.ஜே.பியை தீவிரவாத நபர்களுடன் ஒப்பிடுவதா என கேள்வி கேட்கும் தலைவர்கள் பின் ஏன் குண்டு வெடிப்பில் கைதாகி சிறையில் இருக்கும் பெண் சாமியார் பிராக்யா சிங்கை பி.ஜே.பி முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங்கும், குஜராத் போலி என்கவுண்டரில் சாகடிக்கப்பட்ட சொகராபுதீன் மற்றும் இருவர் வழக்கில் கைது செய்யப்பட்ட குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவினை பி.ஜே.பி தலைவர் அத்வானி சந்திக்க வேண்டும் என்ற பொது மக்களின் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லித்தானே வேண்டும்.ராகுல் காந்தி இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் முஸ்லிம் ஆற்றிய தொண்டினை தெரிந்திருப்பதாலும், இந்கிய சுதந்திரத்திற்கு பின்பு எப்படி முஸ்லிம்கள் ஜனநாயகத்தின் பேரில் நம்பிக்கை கொண்டிருக்கிறாரகள் என்பதினை கண்ணிய மிகு காயிதே மில்லத் முஸ்லிம் மக்களிடையே உரையாற்றியதினை தெரிந்து வைத்திருப்பதாலும், தனது முன்னோர்களான கொள்ளு பாட்டனார் ஜவகர்லால் நேரு, பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜிவ் ஆகியோர்களுடன் பணியாற்றிய முஸ்லிம் பிரமுகர்கள் வரலாறு தெரிந்திருப்பதாலும், தற்போது தன் தாயான சோனியா காந்திக்கு எப்படி முஸ்லிம் தலைவர்களான அஹமது படேல், குலாம் நபி ஆசாத் போன்றவர்கள் பெரும் உறுதுணையாக இருக்கிறார் என்று அறிந்திருப்பதாலும், தற்போது மேற்கு வங்காளம், சட்டிகார், ஜார்கண்ட், பிகார், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் தீவிர வாத செயல் போன்ற எந்த முஸ்லிம் அமைப்பும் ஈடுபட வில்லை என்று தெரிந்திருப்பதாலம் தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதற்கு ஏன் பி.ஜே.பியும், ஆர.எஸ்.எஸ்யும் குய்யோ முய்யோ எனக் கூக்கிரல் இட வேண்டும்.ராகுல் கூறிய கருத்தினை ஆமோதிப்பது போல டேவிட் முல்போர்டு தெரிவித்த கருத்தான ‘முஸ்லிம்கள் மிதவாதக் கொள்கையில் பிடிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள்’ என்பது அமைந்துள்ளது என்றால் மிகையாகுமா?அடுத்து முல்போர்டு கூறும் போது முஸ்லிம்கள் சமூகத்தில் இணைந்து வாழ்வதினையே விரும்புகிறார்கள் என்றும் சமூக தொண்டில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்றும் கூறியிருப்பதினை எந்த ஒரு முஸ்லிம் மெஜாரிட்டியாக இருக்கும் கிராமத்தினை உதாரணமாக எடுத்துக் கொண்டாலும் அல்லது முஸ்லிம் மைனாரிட்டியாக உள்ள கிராமத்தினை எடுத்துக் கொண்டாலும் எப்படி முஸ்லிம் அல்லாத மக்களுடன் உடன் பிறவா அண்ணன் தம்பிகளாக, அக்காள் தங்கைகளாக நட்புறவுடன் வாழ்ந்து வருகின்றனர் என்பது புரியும். ஆனால் அந்த நட்பை முறிக்கும் வேலையினை இந்து வலது சாரி இயக்கங்கள் மேற்கோள் காட்டிய பயங்கர வாத செயல்களால் செய்து கொண்டுள்ளது என்றால் உண்மைதானே! ‘முஸ்லிம்கள் சமூக தொண்டில் ஈடுபாடுள்ளவர்கள்’ என்று முல்போர்டு கூறியிருப்பதினை ஒரு உதாரணம் மூலம் உண்மையே என சொல்ல ஆசைப்படுகிறேன். பிரபல நடிகர் அமிதாப் பட்சன் நடத்தும் குரோர்பதி என்ற பிரபலமான டி.வி பொது அறிவு கேள்வி அறிவுப்போட்டியில் தஸ்லிம் என்ற இரண்டு குழந்தைகளுக்கு தாயான முஸ்லிம் பெண்மணி கலந்து கொண்டு ஒரு கோடி ரூபாய் ஜெயித்து புகழடைந்தார். அவரை எப்படியாவது கிரிக்கட் பிரபலம் சச்சின் டெண்டுல்கரை எப்படி விளம்பர டி.வி.படங்களில் கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து நடிக்க வைத்தார்களோ அதே போல திட்டமிட்டு தஸ்லிமையும் விளம்பர நிறுவனங்கள் பலகோடிக்கள் தருகிறோம் என்று ஆசைகாட்டு போட்டிபோட்டு அனுகின. ஆனால் அதனையெல்லாம் மறுத்ததோடு மட்டுமல்லாது நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் ஏன் மறுத்தேன் என்று சொல்லும்போது, ‘ தன் இரண்டு குழந்தைகள் படிப்பினையும மற்றும் வசதியில்லாத குழந்தைகள் படிப்பிற்கு அந்த ரூபாய் ஒரு கோடியையும் செலவழிக்கவே விரும்புகிறேனென்று’ சொன்னதின் மூலம் சாதாரண முஸ்லிம் தான் உண்டு, தன் குடும்பமுண்டு என்று இல்லாமல் வாழ்வாதாரமற்ற மற்றவர்களையும் முன்னேறவே விரும்புகிறார்கள் என்று சொல்லாமல் சொல்லவில்லையா? ஆகவே தான் அமெரிக்கா முன்னாள் தூதர் முல்போர்டு முஸ்லிம்கள் சமூகத்துடன் இணைந்தே வாழ விரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார். முஸ்லிம்கள் ஏக இறை பக்தியும், பொது அமைதியையும், மற்றவர்களை மதித்து ஒற்றுமையுடன் வாழும் சமூகமாக ராகுல் சித்தரித்து போலவே விரும்புகிறார்கள் ஆனூல் இந்திய மண்ணில் காலூன்றத் தோன்றியிருக்கும் சமீபத்திய பயங்கரவாத செயலுக்கு இந்துத்துவா வலது சாரி அமைப்புகளே காரணம் என்று உண்மையினைத்தானே சொன்னார் அதற்கு குத்தலாக இருப்பதும் குடைஞ்சலாக இருபபதும் இயற்கைதானே!!

நன்றி:http://mudukulathur.com/?p=3854

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்