அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Friday, September 28, 2012

இதையும் கொஞ்சம் படியுங்கள் !

அஸ்ஸலாமு அலைக்கும் கண்ணியமிக்க சமநிலை சமுதாயத்தின் தோழர்களே இன்று நேருக்கு நேர் தர்க்க ரீதியாக அறிவுபூர்வமாக     
இஸ்லாமியர்களையும் இஸ்லாத்தையும் சந்திக்க திராணி இல்லாத மேற்கத்திய உலகம் இஸ்லாமியர்களின் உணர்வுகள் எதை சார்ந்து இருக்கின்றது என்பதை உணர்ந்து கொண்டு எதை  யாரை தனது உயிர்களுக்கும் மேலாக மதிக்கின்றார்கள் என்பபதை புரிந்து கொண்டு அதை கொச்சை படுத்தி அதன் மூலமாக இஸ்லாமியர்களின் உணர்வுகளை கிளர்ச்சி அடைய செய்து கழகம் செய்ய தூண்டுகின்றார்கள், இதன் மூலம் அவர்கள் செய்ய நினைப்பது இஸ்லாமியர்கள் மூர்க்கர்கள் கழக காரர்கள் என்ற போலியான தோற்றத்தை ஏற்படுத்தி இஸ்லாமியர்கள் மீது அவப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்,

ஒரு நிகழ்வு கிளர்ச்சி போராட்டம் நடை பெறுகின்றது என்றால் எல்லாருக்கும் தெரிவது விவாதிப்பது இரண்டாவது வினையான கிளர்ச்சி போராட்டம் ஆகியவற்றை மட்டும் தான் முதல் வினையான எதனால் இந்த போராட்டங்களும் கிளர்சிகளும் நடைபெறுகின்றது என்பதை பற்றி கூடுதல் சிந்தனையோ விவாதங்களோ நடைபெறுவது இல்லை காரணம் ஊடகங்களும் இரண்டாவது வினையான கிளர்சிகளையும் போராட்டங்களையுமே பெரிது படித்தி மக்கள் முன் காண்பிக்கின்றார்கள் 
இதன் மூலம் கலகத்தை ஏற்படுத்த நினைத்தவனின் எண்ணம் மிக எளிதாக நிறைவேறி விடுக்கின்றது 

குற்றம் செய்தவனை விட குற்றம் செய்ய தூண்டுபவனே பெரிய குற்றவாளி என்று சட்டம் சொல்கின்றது 

எனவை இதை உணர்ந்து சமூகத்தின் மீது உண்மையான அக்கறை  கொண்டு இந்த ஊடகங்களும் சமூகதளைவர்களும், ஒருபிரச்சினை புரட்சி போராட்டம் ஆகியவை வெடிக்கும்போது அதற்கு மூலக்காரனத்தை  முதல்வினையை கண்டறிந்து  அதை வேரறுக்க வேண்டும் இதுவே ஒரு நிரந்தர சமூக அமைதியை ஏற்படுத்த முடியும் 

எனவே சமநிலை சமுதாயத்தின் சொந்தங்களே உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் அறிவு பூர்வமாக அமைதியாக ஆய்வு செய்து நமக்கு எதிரான பிரச்சினைகளை எதிர்கொள்ள இறைவன் நமக்கு அருள் புரிய வேண்டும் 


No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்