Sunday, July 27, 2014
Friday, July 11, 2014
பிரார்த்தனையே நமது ஆயுதம்.
அஸ்ஸலாமு அலைக்கும்
கொஞ்சம் நேரம் ஒதுக்கி படித்து விட்டு துவா செய்யவும்
பிரார்த்தனையே நமது ஆயுதம்.
சகோதரர்களே உலகத்திலே மனித உரிமை மீறல் எங்கு நடந்தாலும், அது ஈராக்காக இருந்தாலும் சரி. இலங்கையாக இருந்தாலும் சரி மதம் இனம் வேறு பாடு பார்க்காமல் முதல் வரிசையில் நின்று குரல் கொடுக்கும் இஸ்லாமிய சமூகமே, இன்று பாலஸ்தீனத்திலும், ஈராக்கிலும், குழந்தைகளும் வயதானவர்களும் அப்பாவி பொது மக்களும் கொத்து கொத்தாக செத்து மடிந்து கொண்டு இருக்கின்றனரே!
இந்த கொடுமையை தட்டிக்கேட்காமல் இங்கே உள்ள வைக்கோவும் ராமதாசும் மற்றும் இங்கு இருக்கும் திராவிட கட்சிகளும் கை கட்டி வாய் பொத்தி நிற்கின்றனரே!
இந்த தலைவர்களும், இந்த மனித உரிமை மீறலை கண்டித்து அவர்கள் சார்ந்து இருக்கும் கட்சிகளும் ஒரு சிறு ஆர்ப்பாட்டத்தை கூட நடத்த வில்லையே,
இப்போது தெரிகின்றதா இவர்களின் உண்மை முகம், இவர்களுக்கு மனித உரிமை மீறல் குறித்து கவலை இல்லை, அது எந்த இனத்திற்கு, எந்த மதத்திற்கு எதிராக நடகின்றது என்பதை வைத்துதான் இவர்கள் குரல் கொடுப்பார்கள்,
யாருக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் எப்போது கொடுத்தால் ஒட்டு வேட்டையை நடத்த முடியும் என்று வாக்கு வங்கியை மையமாக வைத்தே இவர்கள் எதிர்ப்பும் ஆதரவும் இருக்கும்.
இனியும் இவர்கள் பின்னால் நாம் அணிதிரண்டால் ஏமாற்றமே மிஞ்சும்,
இறைவன் ஒருவனே துணை நமக்கு,
எனவே இரவு நேர தொளுகையுளும், நோன்பு திறக்கும் முன்பும், இந்த கொடுமையாளர்களுக்கு தண்டனை கொடுக்க, இவர்களை தட்டிகேட்க யா அல்லாஹ் உன்னை அன்றி வேறு நாதி இன்றி நிற்கின்றோம், எங்களுக்கு மன உறுதியையும் எதிர்த்து போராடும் வல்லமையும் தா யா அல்லாஹ் என்று துவா செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக அல்லாஹ் நமக்கு துணை புரிவான்
Subscribe to:
Posts (Atom)